சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது “அவரவர் அடிசில்”
Tag: எழுத்தாளர்கள்
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”
பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்
கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம்.
கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்
சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”
