வைணவப் பெண் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரெங்கநாயகி. இதற்கெல்லாம் நேரடியாகக் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பெயரில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே அழகிகள் என்று சொல்லலாம். அதிலும், முதன்முதலாக நான் பார்த்த ரெங்கநாயகி பேரழகி.