உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?

காந்திய போராட்டத்தின் முக்கியமான நேர்மறை விளைவு இந்தியச்சுதந்திரம். அதே சமயம் அப்போராட்டம் காந்தியின் உயிருக்கு உயிரான கொள்கையான இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பதில் தோல்வியை அடைந்து,பாகிஸ்தான் பிரிவினையில் முடிகிறது.

கலைச்செல்வி – நேர்காணல்

காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன்.

மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்

‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும்  தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண “மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்”

முகத்துவார நதி

கடலோர நிலத்துக்காரனான அவன் காகேசம் கிராமத்தை நோக்கி பயணம் புறப்பட்டிருந்தான்.  அது அவனுடைய படுவூர் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவிலிருந்தது. கடற்காற்று லேசாக மணலை கிளப்பிக் கொண்டு வீசியதில் கண்களை சுருக்கிக் கொண்டு நடந்தான். அணிந்திருந்த மேல்சட்டையில் காற்று புகுந்துக் கொண்டு உடலை உப்பலாக்கி காட்டியது. காய்ந்த “முகத்துவார நதி”

“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”

சிறு முடிச்சு, அல்லது சின்ன நிகழ்வு, அல்லது ஒரு கதாபாத்திரத்துக்கு நேர்ந்த அனுபவம் இதுபோன்றவைதான் எனக்குள்ளே கதைகளாகின்றன. வரலாறைத் தாங்கி நிற்கும் அந்தப் பாலமோ வளைவோ பாத்திரமோ இன்னபிற விஷயங்களோ மட்டுமே கதைகளாவதில்லை; ஆக முடியாது; ஆகவும் கூடாது. கதையினூடே நான் சொல்ல முனைவதற்கு வலுச்சேர்ப்பதற்கு வேண்டுமானால் அவை கதைக்குள் வந்தமர்ந்து உதவலாம். அதை நான் படைப்பாளியாக ரசித்து ஏற்பதுண்டு, சிலவேளைகளில் ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு.

ஆடல்

“தென்னாப்பிரிக்காவில நாம பீனிக்ஸ் குடியிருப்பில இருந்தப்ப நீங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல நான் மனைவிங்கிற அந்தஸ்தை இழக்கப்போறேன்னு சொன்னவுடனே நான் பயந்தே போயிட்டேன். கிறிஸ்துவ முறைப்படி பண்ற கல்யாணம்தான் செல்லும்னு அரசாங்கம் சொல்லிடுச்சாம். அய்யோ.. இதென்ன கூத்து. சட்டத்துக்கு முன்னாடி வைப்பாட்டின்னு பேர் வாங்கறதை விட போராட்டத்தில கலந்துக்கிட்டு சிறைக்கு போனாலும் தப்பில்லேன்னு தோணுச்சு எனக்கு. நான் சிறையிலயே செத்துப் போயிட்டா எனக்கு சிலை வச்சு வழிப்படறதா சொல்லி சிரிச்சீங்க நீங்க”