என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ

நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.

கவிதைகளில் ஆண்பார்வை

நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்

என் பிறப்பின் ஆண்டுகள்

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.