ஸ்வெட்லானா அலெக்ஸவிச் – என் நாட்குறிப்பிலிருந்து

கிராமப்புறப்பெண்கள் சிலர் அவனருகே சென்று உட்கார்ந்தனர். அவர்களுக்கே உரிய இயல்புடன் புது முகங்கள் யார் எங்கு செல்கிறார்கள் என விசாரித்தனர். ராணுவச்சிறுவனை அவனது வீட்டுக்கு ஆபிஸர் அழைத்துசெல்வதை அறிந்துகொண்டனர். அவனது மனம் பேதலித்துவிட்டது: ‘காபூலிலிருந்து கிளம்பியதியலிருந்து அவன் நோண்டிக்கொண்டே இருக்கிறான். கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு நோண்டுகிறான். முள்கரண்டு, மண்வெட்டி, குச்சி, பேனா..எதைக்கொடுத்தாலும் நோண்டுகிறான்’.

சுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்

இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…

கல்லும் நாராகுமே

கிருஷ்ணமூர்த்தி பக்கத்திலேயே நின்று என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மாலா “உன் மாப்ளே ஒரு வழியா கம்பெனி செலவில எங்களுக்கு ஒரு பெங்களூர் ட்ரிப் அரேஞ்ச் பண்ணிட்டார்ப்பா. நாளைக்குக் கிளம்பி மண்டே திரும்பி வந்துடுவோம்” என்றாள். கிருஷ்ணமூர்த்தி “ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டார். “ஆமா, அவருக்கு மட்டும்தான் ட்ராவல், ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம், ஃபேமிலிக்கே பண்ணமாட்டோம்னு சொன்னாளாம். இவர் ஏதோ பேசி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாராம்” என்றாள். “அதானே! ரமேஷா கொக்கா? மனுஷன யாரும் பேச்சில ஜெயிச்சுக்க முடியாது. கல்லுல நார் உரிச்சுடுவார்!” என்று வியந்துகொண்டார். மாலா “அது என்னவோ உண்மைதான். பேசிப் பேசியே எல்லாரையும் கரச்சுடுவார்” என்றாள்.

கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம்

க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா?

குளக்கரை

அமெரிக்கா தனது மூளையின் திறனைக்காட்டியிருப்பதல்ல இங்கு செய்தி. ஆனால் ஒரு அரசு சாரா சேவை அமைப்பில் வேலை செய்வதாக நினைத்து பென்டகனின் பணத்தில் வாழ்ந்த உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்களது மனசாட்சிக்கு பதில் என்ன? சேவை அமைப்பில் சேர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் தாங்கள் வலையின் எவ்விதமானக் கண்ணி எனச் சதா வெம்பிப்போகவேண்டுமா?

மகரந்தம்

டச்சு காலனியத்தால் இந்தோனேசியா என்று இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்த மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர். எப்படிப் படுகொலைகளை யூரோப்பியர் நிகழ்த்தினர். இன்று அதே யூரோப்பியர் எப்படி ஆசியர்களுக்கு அறபோதனை செய்கின்றனர் என்பதைப் பற்றி ஒரு இந்தோனேசியப் பத்திரிகையில் நடக்கும் சிறு சர்ச்சை. இந்தியர்களில் யூரோப்பை விழுந்து வணங்குவோரில் இந்திய இடதுசாரிகள் முதல் வரிசையில் இருப்பவர்கள்.

கருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும். அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறையவேண்டும்.

நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்

இரண்டாவது வேட்பாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பணக்காரர் டாக்டர் பரமேஸ்வரன். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரும்போதே அங்கே ஒரு கிறித்துவப்பெண்ணை மணம் செய்து கொண்டு வருகிறார். இங்கும் அவருக்கு அவர் இனத்தில் ஒரு மனைவி உண்டு. இது அவருக்கு வாக்கு கேட்க வசதியாயிருக்கிறது. தன் இன மக்களைச் சந்திக்கப் போகும்போது இங்கு மணந்து கொண்டவளையும், அரிஜன சேரிக்குச் செல்லும்போது சிலுவை டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு வரும் கிறித்துவ மனைவியும் அழைத்துக் கொண்டு போகிறார். மூன்றாவது வேட்பாளர் அறிவரசன் இப்போதுதான் ஒரு சாதாரண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டு ”வெறும் புளிக் கறையையும் காணாத் துவையலையும்” கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். ஆக இவர்கள் …

கனேடிய தேர்தல்

கனேடிய தேர்தல் பற்றிய கட்டுரையை ‘சொல்வனத்தில்’ படித்தேன். நல்ல நகைசுவையோடு எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் ஆங்கிலம் தூக்கலாக இருந்தது மட்டுமே குறை. முதலில் , அட நம் நாட்டைப் பற்றி கூட ‘சொல்வனம் போன்ற பத்திரிக்கைகள் கட்டுரைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருந்தது. சில முக்கிய கனேடிய அரசியல் விஷயங்கள் ,சமீபத்திய லிபரல் கட்சி வெற்றிக்கு வழி வகுத்தது. ஹார்பர் ஒரு கனேடிய பிரதமராக இயங்கியதை விட, ஆல்பர்டாவின் (கனடாவில் எண்ணெய் வளம் மிக்க மாநிலம்) தலைவர் போலவே இயங்கினார்.

வாசகர் மறுவினை

நான் மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதி எழுதி இப்போது நான் ஒரு ‘சரமக்கவிராயர்’ ஆகிவிட்டேன்! நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன். இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன்!’ என்று கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் படிப்பதும் எழுதுவதும் பெரும்பாடாக இருக்கிறது. I am afraid it’s mental menopause at this old age!

நான்கு கவிதைகள்

பறவை மூழ்க
பரந்த வானம் மூழ்கும்.
வானம் மூழ்க
மூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய்
இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.

பிரான்ஸ்: நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்

பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை.

ஊமை வலிகள்

இதனால் அடிக்கடி அவனுக்கு வயிற்றில் வலி வந்துவிடுகிறது. பாமா தியேட்டர் ரோட்டில் உள்ள இரண்டாவது சந்தில் ஒரு பாட்டி தொக்கம் எடுத்துவிடும். எலும்புத் துண்டுகளும், முடியுமாய் வந்து விழும். முடிக்கொத்தைப் பார்க்க முதலில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு பெண் தலைவாரி முடித்தவுடன் சுருட்டிப்போடும் முடிகள் அளவுக்கு இருந்தது. ஒருமுடியானாலும் தொண்டையில் தட்டிவிடுமே எப்படி இவ்வளவு முடி வயிற்றுக்குள் போனது என்று ஆச்சரியம். எப்படியோ வயிற்றுவலி நின்றுபோனதால் அந்தப் பாட்டியை நம்பினான்.

மனிதக் குணம்

சிதம்பரம் அய்யாதான் அந்த அரண்மனையின் உரிமையாளர். ஆமாம், அதை ஹோட்டல் என்றோ, விடுதி அல்லது ரிஸார்ட் என்றோ சொல்லி கொச்சைப்படுத்த முடியாது. பெரிய கல்யாண மண்டபம் மாதிரி. அதில் தங்கி இருந்தவர்களும், சுற்றிப் பார்க்க வருபவர்களும், சாப்பிடுபவர்களும், எப்போதும் கல்யாணக் களைதான். தன்னுடைய பூர்வீக வீட்டை சுற்றுலா ஹெரிடேஜ் ஹோம் என்று ஆக்கி இருந்தார். காம்பவுண்டுக்குள் நுழையும் போதே அசந்து நிற்க வைக்கும் முகப்பு. பூவாக தண்ணீர் சிந்தும் ஃபௌண்டன், பெரிய அலங்கார மரங்கள், வாசல் வராந்தாவில் ஏறியவுடன் நீள பெஞ்சு – சுமார் இருபதடி இருக்கும், ஒரே மரப் பலகையில் செய்தது, பளபள என்று அமர அழைத்தது.

மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா?

நோபல் பரிசு பெற்ற Konrad Lorenz ஒரு கருத்தைச் சொல்கிறார். பொது நலப்பண்பு கொண்ட சில உயிர்களாவது ஒரு இனத்தில் இல்லை எனில் அந்த இனம், பெருகுவதில்லை. இன உற்பத்தியில் வெற்றி பெறுவதில்லை. இந்த Altruism எனும் குணம் தனி உயிர்களைப் பாதிக்கும். அவைகளை அழிக்கும்; ஆனால், அந்த இனம் மொத்தத்தில் சுலபத்தில் அழிவதில்லை என்கிறார்.

பிரகாஷை காணவில்லையாம்!

காலையில் வேலை மும்மரத்தில் சுஜாதாவிடம் பேசாமலேயே வந்து விட்டேன். இப்பொழுது சீக்கிரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, சலபதியின் வீட்டுக்குச் சென்று, பிரகாஷ் வருவதாகச் சொன்னால் என்னுடன் அழைத்து வரலாம் என்று நினைத்தேன். அவன் வராவிட்டாலும் காலையில் போனது போல் கடமைக்கு விசாரிக்காமல் கொஞ்சம் சாவகாசமாக உட்கார்ந்து அன்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றியது.

திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்

இவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்தரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும் டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும் அல்லாமல் வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி, கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான்.

டிபாசாவிற்கு மீள்வருகை

இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன்.

கார்முகில் வண்ணனே! சப்பாணி!

“மகாபலிச்சக்கரவர்த்தியிடமிருந்து அவன் நீரைவிட்டு தாரைவார்த்துக் கொடுத்த பூமியைப் பெற்றுக்கொண்ட கைகளால் நீ சப்பாணிகொட்டுவாயாக! நீ சப்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே! சப்பாணி கொட்டுக!” எனத் தாய் வேண்டுகிறாள்.