கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்

மேற்கு வங்கத்தின் சந்தன்நகரில் பிறந்த கிருஷ்ண பாசு, தன்னுடைய பதினொரு வயதிலேயே முன்னணி வங்க மொழி இதழ்களான ஏக்‌ஷாத், தேஷ், கீர்திபாஷ், அம்ருதோ ஆகியவற்றில் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தன் கவி வாழ்வைத் தொடங்கினார். அவரது தனிக் கவிதைகளின் முதல் தொகுப்பு 1976-இல் வெளியானது. அன்று தொடங்கி, அதிசயிக்கச் செய்யும்விதமாக, மேலும் 18 தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணா பாஸு கவிதைகள்

அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?