அக்குரு அம்மா

இந்த சின்ன வயசுல அவளுக்கு ஏன்டா கல்யாணம் பண்ணி வைக்கிற, வேண்டாம் டா, சொன்னா கேளு, அந்த பய வீமசேனன் மாதிரி இருக்கான், நம்ம புள்ள கோழிகுஞ்சி மாரி. இரண்டுக்கும் ஒத்து வராது.பாவம் வந்து சேரும் டா முருகு, ஊர் பேச்சை கேட்டுகிட்டு ஆடாத, நான் சொல்றத கேட்டு நடந்துக்க, கூட்டமா இருந்த பொண்ணு, அங்க தனியா இருக்க சிரமப்படுவா

என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ

நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.