சூப்பர் பௌர்ணமி

2013 ம் ஆண்டில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்த தேதி ஜூன் 22. 23ம் தேதிதான் பௌர்ணமி என்றாலும் 22 அன்றுதான் சந்திரன் அத்தனை பெரிதாய் முழு நிலவாய் காணப்பட்டது. இனி இத்தகைய நிகழ்வு 2014 ஆகஸ்ட் மாதத்தில்தான். சூப்பர் மூன் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் “சூப்பர் பௌர்ணமி”

பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்

சூழல் பற்றியும், இயற்கைசார்ந்த உயிரினங்கள் பற்றியும் எழுதும் நல்லாரைச் சொல்வனம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை. இந்தத் தேடலில் நமக்குச் சமீபத்தில் கிட்டிய ஒரு அறிஞர் ஜெகநாதன். இவர் ஒரு வன உயிரியலாளர். இந்த இதழில் இவரது கட்டுரைகள் பூக்கள் பற்றி அமைந்திருக்கின்றன.

மகரந்தம்

ஷேன் வார்னின் முதல் பந்து – லெக் ஸ்டெம்பிற்கு வெளியே விழுந்தது. கேட்டிங்கும் மற்ற ஃபீல்டர்களும் அந்தத் திசையை நோக்கினார்கள்; நகர்ந்தார்கள். விழுந்த பந்து எழுந்த போது, நம்பவே முடியாத அளவிற்கு எதிர் திசைக்குத் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தொட்டது…

எதற்கு மொழிபெயர்ப்பு?

தமிழரில் மிகப் பலருக்கு இரண்டாம் மொழிப் பரிச்சயம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கு மொழிபெயர்ப்புகளும் கிடைக்காமல் போய் விட்டால் அது பெரும் இழப்பே. மொழிபெயர்ப்புகள் மூல மொழி அறிந்தவர்களுக்கு இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட மொழிக்காரர்களுக்குப் படிக்கக் கிடைக்கும் முயற்சி..

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி

விஞ்ஞான முறை என்று கலிலியோ போன்றார் கருதியதோ எல்லாக் கருத்துகளையும் சோதித்துப் பார்த்து நிரூபணமான பின்னரே ஏற்பது என்ற துவக்க கால அறிவியல் முறைமை. அது சர்வ வல்லமையுள்ள இறையின் தீர்மானத்தைச் சந்தேகிப்பதாகத் தோன்றலாம் என்று கருதியது கத்தோலிக்கம் என்பதோடு, இறையின் எண்ணக் கிடக்கை இதுதான் என்று தீர்மானிக்கவும் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் கருதியவர்கள் கத்தோலிக்க சர்ச்சின் மேலாளர்கள்.

ஒரு வேண்டுகோள்

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.

ஸ்ரீரங்கம் களை

பிரதானக் கூடத்தின் கூரையில், எடுத்துக்கட்டி எனப்படும், நான்கு சுவர்களிலும் பெரிய சாளரங்களுடனான சதுரமான சிறு கோபுர வடிவம் கொண்ட வீடுகள் ஸ்ரீரங்கம் பிரதான சித்திரை, உத்திரை வீதிகளில் இயல்பு. எடுத்துக்கட்டி வழியே பக்கவாட்டில் சூரிய ஒளி வீட்டினுள் மிதமாய் விழுந்து ஒளியூட்டும். வாசல் ஒரு வீதியிலும், கொல்லை பின் வீதியிலும் முடியும் இவ்வகை வீடுகள் இயற்கையான காற்றுப்போக்கும் குளிர்ந்த நிலையிலும் இருப்பவை. வசித்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் அருமை.

உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்

தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம்.

இந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன்

அவர்களின் சருமத்தின் ஒவ்வொரு சுருக்கத்துக்கும்
ஒரு நாட்டார்கதை இருக்கிறது.
அவர்களின் தாழ்ந்துபோன முலைகளில்
தேவையான பால் இருக்கிறது.
அதை உதாசீனப்படுத்தும்
மூன்று தலைமுறைகளுக்கு ஊட்ட.

த்ரிவம்பவே த்ரிபாவே

” ஈசான்” என்று தாய்லாந்தில் ஒரு மாவட்டம் இருக்கிறது.. அது “ஈஸ்வரன் ” என்கிற இந்துக்கடவுள் பெயரைத் தழுவி வந்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஆரம்பித்தான். ” தாய்லாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அந்தப் பிரதேசத்துக்கு “ஈசான மூலை” என்கிற உங்கள் வாஸ்த்தி சாஸ்த்திரத்திலிருந்து கூட வந்திருக்கலாம்” என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான்.

பகா எண் இடைவெளிகளின் எல்லைகள் – யீடாங் சாங், இருளைப் பிளந்த மின்னல் கீற்று

கணிதத்துறையில் பல்லாண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் கணக்குகளைத் திறந்த கணக்குகள் (open problems) என்று சொல்வதுண்டு. முடிந்த கணக்குகளைப் போலல்லாமல் இந்தக் கணக்குகள் கணிதவியலாளர்களுக்கான புதிரைத் திறந்தே வைத்துள்ளன. ஆம், ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரை தீர்வு காணப்பட்ட கேள்விகள் ஆயிரமாயிரம் புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஆனால் தீர்வு கண்டறியாத திறந்த கணக்குகள் புதிய சிந்தனைப் பாதைகளை அமைத்து மானுட அறிவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவுகின்றன.

கல்லுளி மங்கனாய் ஒரு கணித மேதை !

தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சினையை, தனி ஒரு மனிதனாகத் தீர்த்தவர் என்று மோச்சிஸுகியை எல்லோரும் பாராட்டினார்கள். வெகுஜனப் பத்திரிகைகள் கூட பஜனையில் கலந்துகொண்டு சரண கோஷம் போட்டன. ‘உலகத்தின் மிகச் சிக்கலான கணிதப் புதிர் அவிழ்ந்தது ! ஜப்பானிய விஞ்ஞானியின் சாதனை !!’ என்றது டெலிகிராஃப் பத்திரிகை. ‘ஏ.பி.சி தத்துவத்துக்குத் தெளிவு கிடைத்துவிட்டது என்று தெரிகிறது’ என்று சற்று எச்சரிக்கையாக எழுதியது நியூயார்க் டைம்ஸ். இரண்டொரு நாள் வரை இணையத்தின் கணிதப் பக்கங்கள் பூரா இதே பேச்சுத்தான்.

பூஜாங் பள்ளத்தாக்கு: இலக்கிய ஆதாரங்கள்

மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, தமிழ் வரலாற்றில் புகழ்ந்து கூறப்படும் கடாரம் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிபு. இங்கு நடத்தபட்ட அகழ்வாராய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட அரும்பொருள்களைக் கொண்டு மலேசிய அரசு இங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைத்துப் பராமரித்து வருகிறது. இந்தப் பகுதி பற்றி இதுகாறும் தெரிய வரும் உண்மைகள் பற்றி மலேசியத் தமிழரான வீ.நடராஜா “Bujang Valley: The Wonder that was Ancient Kedah” என்னும் தலைப்பில் ஓர் நூல் எழுதியுள்ளார். இந்த நூல் “சோழன் வென்ற கடாரம்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

சொல்வனம் ஐந்தாவது ஆண்டில்..

சொல்வனத்தின் துவக்கத்திற்கும், இருப்பிற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் , புதிய வரத்துக் கால்வாய்களைச் சாத்தியமாக்கிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குறிப்பாக – பல சமயங்களில் தாமதமான வெளியீடு, மேம்படுத்த வேண்டிய பிழை திருத்துதல் போன்ற களையப்பட வேண்டிய குறைகள் இருந்தும் – தொடர்ந்த ஆதரவு தரும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி.

ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்

இதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.

குளோரியா பண்ணை

பூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.

பைத்தியக்காரன்

காலங்காலமாக மனிதர்கள் தங்களின் சுதந்திரத்தினை நிலைநாட்ட யார் யாரையோ எதிர்த்தவண்ணமே இருக்கின்றனர். இன்னமும் இதன் எதிரொலிகள் உலகின் பல்வேறு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் யாருக்கும் தெரியாது இந்த நான் என்னும் விஷயத்தில் இருக்கும் நுண்ணதிகார மையம். அதனை எப்படி உடைப்பது என்பதையும் இப்பிரதியிலேயே சொல்லியிருக்கிறேன்.

அயல்நாட்டுக் கவிதை – ஆஸ்டின் ஸ்மித்

மாடிப்படிகளில் தவறி விழுந்தவர்
கீழே வேகமாகச் சரிந்து செல்வது போன்ற ஒலி தரும்
சகிக்க முடியாத பியானோ வாசிப்பும் தவிர
வேறு சப்தமில்லை

ஹானெக வின் அமூ(ர்)

அவரது திரைப்படங்களின் பெரிய பலம் என்று ஒன்று உண்டென்றால் அது அவர் கேமிராவை உபயோகிக்கும் விதத்தையே சொல்ல வேண்டும். பியானோவை ஒருவர் வாசித்தால் விரல்களின் மேல் காமிரா படியும். லிஃப்டின் உள்ளே ஒருவர் நிற்கும் போது எதிரிலிருக்கும் தொடர்பில்லாத மற்றொரு கதாபாத்திரத்தை கேமிரா பார்க்கும். ஒரு காட்சியில் பொதுவாக நின்று சூன்யத்தையே காமிரா சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்.

தீக்குள் விரலை வைத்தால்

“பூவே செம்பூவே”…வயலினில் வழிந்த துயரத்தின் சாயல் கிடாரில் தேங்கி அதை கப்பாஸ் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கும் முதல் சரணம் முடிகின்ற நேரம்…சட்டென்று அவர் எழுந்து தெருவின் குறுக்கே கடந்து எதிர்புறத்தை அடைந்தார். ஓவியம் இருந்த இடத்தில், அதன் கோடுகளை அவர் அறிந்த விதத்தில், விரல்களை நகர்த்தினார். கோடுகளின் பாதையில் விரல்கள். விரல்களின் போகும் பாதையெங்கும் நினைவின் பரல்கள் சிதறியிருக்கக் கூடும். அந்த சிதறல் நிகழ்ந்த நொடிகளைத்தான் இந்தப் பாடலின் ஒலியில் கடந்து கொண்டிருந்தாரோ அவர்? கோடுகளின் பாதையில் சென்ற விரல்கள் தாள‌ முடியாத நினைவின் வலியில் துடித்தனவோ?

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்…

"வீடும் வெளியும்"-கவிதைகள்

சத்தம்போடாத மின்விசிறிகள்
இரக்கமற்றவை – உங்கள்
தனிமையைப் பகிர மறுப்பவை.
அறையின் சுவர்களின் வழியே
தண்டவாளங்களின் மீதேறி
வேறு உலகங்களைக் காண
அனுமதிக்காதவை.

எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .

இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான்.

தந்தியிசையில் புதிய பாய்ச்சல் – வி.எஸ்.நரசிம்மனுடன் ஓர் உரையாடல்

என்னைப் பொருத்தவரை, பல மேதைகள் உருவாக்கிய நமது கர்நாடக இசையின் அழகை நான் அப்படியே பின்பற்றுகிறேன். பாடல்களின் பாவத்திலோ, வரிகளின் அர்த்தத்திலோ நான் எதையும் மாற்றுவதில்லை. நமது இசையின் அழகை மெருகூட்டுவதற்காக அதே உணர்வுகளை மேம்படுத்தக்கூடிய வகையில் மேற்கிசைக் கூறுகளை இணைக்கிறேன். இதனால் நமது இசையின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை.

அவன்

அடிக்கடி காதலிகளை மாற்றுவதும், பின் புதிய காதலிகளைத் தேடி அலைவதும், பழைய லட்சியங்களை மாற்றிப் புதிய லட்சியங்களை கைக்கொள்வதும், தன்னைப் புதுமைவிரும்பியாக, புரட்சிக்காரனாக‌க் காட்டிக்கொள்வதுமாக அலைவான். கூடவே இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் என்று பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிவதைப் பற்றி கவலைப்படாமல் அது குறித்து நீளமாக‌ பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சநாள் முன்புதான் காதலியை மாற்றியிருந்தான். இருவரும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதாகவும், முன்னையவளைவிட பின்னையவள் சற்றேதான் மாறியவளாகத் தெரிகிறாள் என்றும் கூறியதை அவன் ரசிக்கவில்லை.

முடிவற்ற படிகளில் ஏறுதல்

இந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.

தாத்தாவுக்குக் கடிதம்

மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலைப்பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது.