பய வியாபாரியா ஹிட்ச்காக்?

ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது.

பய வியாபாரியா ஹிட்ச்காக்?

அவருடைய மிக விரிவான நினைவுகள்… எல்லாம் பயம் பற்றியவை. இந்த எரிபொருளை நம்பித்தான் அனைத்தையும் நசுக்கி ஓடும் ஹிட்ச்காக் வாகனம் ஓடியது. அவர் கிட்டத்தட்ட எதைப் பார்த்தாலும் தான் அச்சமடைவதாகச் சொல்லிக் கொண்டார்: பொலீஸ்காரர்கள், புது மனிதர்கள், காரோட்டுவது, தனிமை, கூட்டங்கள், உயரங்கள், தண்ணீர், மேலும் எந்த வகை மோதலும்.

அமைதியின் அழிப்பு

“அழிப்புன்னா, என்ன அர்த்தத்துல?”
“அதைச் சூறையாடறதா. கொள்ளை அடிக்கிறதா புரிஞ்சுக்கணும். அதை ஒரு கவிதையில படிச்சேன். நம் தலைமுறை எப்படி ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப்படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்.’ …….
“ஊருக்குள்ளே குதிரைகள் இருந்ததெல்லாம் எனக்கு நினைவு இருக்கு.”
“ஆ, எனக்கும்தான் நினைவு இருக்கு. வண்டிகளை இழுத்துப் போகும் குதிரைகள். காலில் நிறைய முடியோடிருக்கும் க்ளைட்ஸ்டேல் குதிரைகள். எப்போதும் ஜோடிகளாகவே இருக்கும். … எல்லா உற்பத்தியும் தொழில் மயமாவதற்கு முன்பு நாம் எத்தனை நல்ல காலத்தை அனுபவித்தோம்.”

காற்றிலடித்துப் போகப்பட்ட பெண்

தன் செயல்களையும், சிந்தனைகளையும் தன்னாலேயே நிரப்பி இருக்கிறாள்; உள்ளீடு உள்ளதோ, கனமானதோ, அர்த்தமுள்ளதோ எதுவும் அங்கே நுழைய இடமே இல்லை.

ஆவி வேட்டைக்காரர்

நான் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறேன், ஆமாம். வெகு சில பேர்களே இரு மொழிகளில் எழுதுகிறார்கள், பல மொழிகளில் திறமை படைத்திருந்த நபொகாவ் போன்ற ஒருவர் கூடத்தான். ரஷ்ய மொழியை விட்டு விட்டு இங்கிலிஷுக்கு நகர்ந்த நபொகாவ் இங்கிலிஷோடு தங்கி விட்டார். மொழி பெயர்ப்புகளுக்கு ரஷ்யனைப் பயன்படுத்தினார் என்ற போதும், அந்த மொழி பெயர்ப்பைச் செய்த பிறகு அந்த மொழியில் அவர் எழுதவில்லை, எனக்குத் தெரிந்த வரையில். நபொகாவ் செய்ததைப் போல வேற்று மொழிக்கு நகர்வது மிக, மிக ஆபத்து நிறைந்த வேலை என்று நான் சொல்வேன், மிகத் துன்பமானதும் கூட. இது வரை அந்த முடிவை எடுப்பதை நான் தவிர்க்க முயன்றிருக்கிறேன்.

பருவம், படம், பீஷ்மர் & போப்

துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா? பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.

உள்ளிருக்கும் எதிரி

இதில் வரலாற்று விசித்திரம் என்ன? முன்பு முஸ்லிம் நாடுகளில் உரிமைகளோடு இருந்த யூதர்கள் இன்று முஸ்லிம் நாடுகளில் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமிசத் தீவிர வாதம் யூதர்களை ஒழிக்க வேண்டும் என்றே உலகெங்கும் பிரச்சாரம் செய்கிறது. இதனால் சமீப காலம் வரை துருக்கியில் வசித்த யூதர்கள் கூட வெளியேற முற்பட்டிருக்கின்றனர். முன்பு கிருஸ்தவ நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு, கேவலமான நிலையில் வாழ்ந்த யூதர்கள் இன்று அந்நாடுகளில் குறைவான வெறுப்புக்கு நடுவில், அனேகமாக நன்னிலையில் வாழ்கிறார்கள்.

அளறுதல்

செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்? அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?

உலகம் இன்று நம் கையில்

ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.

மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…

பேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்

நம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விடுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.

கொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்

உலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து

இன்றைய புனைவுகளில் தொழில் உற்பத்தி முறை குறித்து அத்தனை வருணிப்பு இல்லை என்றாலும் அது ஆங்காங்கே தொடர்ந்து பேசப்படுகிறது. பொருட்களின் வருணனையோ பக்கங்களெங்கும். அவற்றின் பயன்முறை, தாக்கம் போன்றனவே கதையின் எலும்புக் கூடு. மனித லாகவமும், தீர்மானங்களும் முன்னத்தனை கதைவெளியை நிரப்பவில்லை, மாறாக கருவிப் பயன்பாட்டின் விளைவுகள்- மனித உடலில், மனதில், அறிவில், சமூகத்தில், காலத்தில் என்று ஒவ்வொரு வெளியாக, ஒவ்வொரு ஊடகமாகத் தொட்டுச் செல்லுமிந்தக் கதைகள்- என்னவென்று காலில் தைக்கும் நெருஞ்சி முள்ளாகவோ, ஊனை ஒழிக்கும் அணு ஊசியாகவோ எழுதப்படுகின்றன.