பொருந்துதல்

அது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது?

"என் பெயர்”

முன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த சர்வேயில்…

தொழில்நுட்பம் vs. சட்டங்கள்

காவலன் தயாராகும் முன் கள்ளன் தயாராகி விட்ட நிகழ்வு நாட்டிற்கு நல்லதல்ல. உதாரணமாக சமீபத்தில், நடந்த தமிழக தேர்தலில், தேர்தல் ஆணையம் ஊடக விளம்பரங்கள் செய்வது மற்றும் அதற்கான செலவுக் கணக்குகளை ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகச் செய்யும் விளம்பரங்களில் ஆன்லைன் விளம்பரங்களும் அடங்கும். எனவே அதற்கான செலவுக் கணக்கையும் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்கிறது ஆணையம். ஆனால், ஆன்லைனில் விளம்பரம் எனில் ‘எவை ஆன்லைன்?” “எவை விளம்பரங்கள்?” “எவை ஆன்லைன் விளம்பரங்களுக்கான செலவு?” அந்தச் செலவுக் கணக்கை ”எப்படிக் கணக்கிடலாம்?” என பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.

மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா?

நோபல் பரிசு பெற்ற Konrad Lorenz ஒரு கருத்தைச் சொல்கிறார். பொது நலப்பண்பு கொண்ட சில உயிர்களாவது ஒரு இனத்தில் இல்லை எனில் அந்த இனம், பெருகுவதில்லை. இன உற்பத்தியில் வெற்றி பெறுவதில்லை. இந்த Altruism எனும் குணம் தனி உயிர்களைப் பாதிக்கும். அவைகளை அழிக்கும்; ஆனால், அந்த இனம் மொத்தத்தில் சுலபத்தில் அழிவதில்லை என்கிறார்.

குடிமைப் பங்காளர்கள் (Civil partnership)

ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.)

பெண்ணும் சாமியும்

இன்று, அலுவலகம் ஓடுகையில் தொங்கத் தொங்கத் தாலி எரிச்சலூட்டுகிறது. தாலியை புனிதமாக தலையில் ஏற்றிய ஆணுக்கோ அது அவனின் ஆயுளை நிர்ணயிக்கும் ஒன்றாக மனதில் உருவேறிக் கிடக்கிறது. “என்னது? தாலியைக் கழற்றுவதா?” என்கிறான் அவன். “பேங்கில் பண்ணத்தைப் போடச்” சொல்கிறாள் பெண். பெற்ற பிள்ளை, அவனுடையது என்பதை அவனுக்கே அவள்தான் சொல்ல வேண்டிவந்தமையால் அவன் பெயர் இனிஷியலானது. இப்போது எவரை நம்ப வைக்க வேண்டும். இது நம் பிள்ளை என நமக்குத் தான் தெரியுமே? பின் எதற்கு? நம் இருவரின் உற்பத்திக்கு நம் இருவரின் பெயர்

பெண்ணுக்கெதிராகவா சட்டங்கள்?

இன்றும் பல இடங்களிலும், பெண்ணை முடக்கிப் போட அவளின் பாலினத்தைக் குறிப்பிட்டு அல்லது அதை இழிவு செய்தலே போதுமானதாக இருக்கிறது. தலை எடுக்கும் பெண்ணா…? “அவள் கேரக்டர் சரி இல்லை” என்பதே போல… இப்படியான கருத்துக்களுக்கு பெண்களும் எதிர்வினையாற்றுவதும் இன்னும் நடக்கிறதுதானே?

அவளே தேர்வு செய்யட்டுமே

சுத்த உணர்வைத் தருவதற்காக இள மஞ்சள் நிறத்தில் இருக்கும் பருத்தியானது டயாக்ஸின் கொண்டு ப்ளீச் செய்யப்படுகிறது. நாப்கின்கள் நேரடியாக பொருத்தப்படுவதாலும் எல்லா நேரமும் ஈரத் தொடர்பில் இருப்பதாலும் அந்த கமிகல்கள் உடலினுள் புகக்கூடியதாகவே இருக்கிறது. இது புற்று நோயையும் இன்ன பிற கர்பப்பை தொடர்பான, தோல் தொடர்பான நோய்களை வரவேற்கிறது.

என் பங்கு

நான் ஒரு கடை முதலாளி. என் கடையில் பத்து இளைஞர்களும், பத்துப் பெண்களும் வேலை பார்க்கிறார்கள். சட்டம் இருவருக்குமே சமமான வேலைக்கு சமமான சம்பளம் தர வேண்டும் என்றெ சொல்கிறது.நானும் சட்டத்தை மதிப்பதனால், அதற்கு உடன் படுகிறேன்….ஆனால் பாருங்கள்… ஒரு முதலாளியாக நான் கவனித்ததில், ஆண்கள் வேலை செய்யும் அளவுக்குப் பெண்கள் வேலை செய்வதில்லை. மாதத்தில் குறைந்தது இரண்டு நாள் திடீரென லீவு போட்டு விடுகிறார்கள். இது போக, பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை. மாமியாளுக்கு நெஞ்சு வலி என ஏகப்பட்ட காரணங்கள்….இங்கே வந்த சமயத்திலாவது வேலை செய்கிறார்களா? …ம்ஹும்..உயரத்தில் இருக்கும் ஒரு பெட்டியை இறக்க வேண்டுமெனில் கூட வேலை செய்யும் ஆணைக் கூப்பிடுகிறார்கள். கனமான உருளையை உருட்ட வேண்டுமா? கூப்பிடு ஆண்பிள்ளையை…வேலை நேரத்தில் சட்டென ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திலிருந்து எதையேனும் எடுத்துவர வேண்டுமா? இந்த இளைஞர்களில் எவனிடமாவது வண்டிச்சாவியைக் கொடுத்தால் போதும் கொண்டு வந்து இறக்கி விடுவான். இந்தப் பெண்களும் இருக்கிறார்களே…….பெண்களை வேலைக்கு வைத்ததால் எனக்கு நட்டம்தான். …..
ஆனால் இப்போது ஆண்கள் பெண்கள் இவர்களுக்கு எப்படி நான் சமச் சம்பளம் தர முடியும்?

மாதொருபாகன்

மாதொருபாகன், உமையொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் இந்தத் தெய்வங்களெல்லாம் ஏறத்தாழ ஒன்றே. சிவபெருமான் தன்னில் சரிபாதி இடத்தை இறைவிக்குக் கொடுத்ததான கருத்து அது என்றும் சொல்வோர் உண்டு. ஆண் பாதி பெண் பாதி என்றால். இரண்டும் சரிசமமான அளவில் இருக்கிறதென்றால் உமைக்கு இடம் கொடுத்ததாக வந்திருக்காது. இருவரும் ஒன்றானதாக அல்லது ஒன்றில் இடம்பிடித்ததாகவே வந்திருக்கும் அல்லவா?

பொங்குது மனசு

பொங்கல் விழான்னாலே உங்களுக்கெல்லாம் பொங்கல், கரும்பு, பொங்கப்பானை, மாடு, எல்லாம்தானே நினப்புக்கு வரும்..?
ஆனா எங்களூர்காரங்களுக்கு கழுத நினப்புக்கு வரும்.
ஆமா மதுரைக்காரய்ங்யளுக்குத்தான். பொங்கல் விழாவ ஒட்டி கழுதைப் பந்தையம், ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, சேவக்கட்டு, பிள்ளைங்களுக்கு ஓட்டப்பந்தையம், லெமன் ஸ்பூன் லருந்து கபடி, ஒயிலாட்டம்..ன்னு தூள் பரக்கும்.

மதங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றன –சுரண்டலில்

எது மனித சமூகத்திற்கு அதன் நீட்சிக்கு உதவியாக இருந்ததோ அதை தெய்வமாக நினைத்திருக்கலாம். பெண் அங்கே முன்னிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கு ஒரே காரணம் அவளின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் திறன். அதை ஒட்டியே பெண் தெய்வங்கள் தோன்றி இருக்க வேண்டும். ஆதி தெய்வம் என பெண் போற்றப்பட அதுவே காரணமாக இருந்திருக்க முடியும்.
இப்படியாகத்தானே பெண் தெய்வமாகி இருக்க முடியும்?
பின் எப்போதிருந்து ஆண் உச்ச தெய்வமாகவும் அவன் மனைவியாக தொழுபவளாகப் பெண் தெய்வங்கள் என்றாயிற்று?

ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்?

இரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா? அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள்? பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ?

ஆண்/பெண் சிக்னல்

ஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?ஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமா? புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா? ஏன்? எதனால்?
மிருகங்களுக்கு இது போன்ற குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே? மிருகங்களில் எதிர்பாலினத்திற்கு அளிக்கும் சிக்னல் பிரச்சினை இல்லாததற்குக் காரணம்… அவை எதிர்பாலினத்தை காமத்திற்காக மட்டுமே எதிர்பார்க்கின்றன.
மனிதன் அப்படி இல்லை. காமம் மட்டும் அவன் தேவை இல்லை, பேரண்டல் பர்டனின் நீண்ட காலத் தேவையினால் மற்றவர் உடனிருக்க, காதல் எனும் பட்டுத்துணி தேவை.