வினை அறு நோன்பினாள்

வனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…

இயற்பியல் சிந்தனைச்சோதனைகள்

ஒரு இரும்புப்பெட்டி. பெட்டிக்குள் ஒரு பூனை. அதே பெட்டிக்குள் ஒரு கண்ணாடிக்குடுவையில் கொஞ்சம் விஷம். தனியாக இன்னொரு பாத்திரத்தில் கதிரியக்கத்தன்மை உள்ள ஒரு சமாச்சாரம் அது ஒரே ஒரு அணுவாகக்கூட இருக்கலாம். அடுத்த ஒரு ஒரு மணிநேரத்தில் அந்தப்பெட்டிக்குள் கதிரியக்கம் நிகழும் சாத்தியக்கூறு 50 சதவீதம். கதிரியக்கம் நிகழ்ந்தால் அதை உணர ஒரு உணர்வி (Geiger Counter). கதிரியக்கம் நிகழ்ந்து விட்டால், அந்த உணர்வி இயங்கி ஒரு சுத்தியலால் அந்த விஷக்குடுவையை உடைத்து விடும். எனவே விஷம் பெட்டிக்குள் பரவி பூனை பரலோகம் போய்ச்சேரும்.

கணிதசிந்தனைச்சோதனைகள்

ஹில்பர்ட் தனது கற்பனையில் கட்டிய விடுதியில் உள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை முடிவிலி! அதனால் விடுதியின் விளம்பர வாசகமே, “ஹில்பர்ட் ஹோட்டலில் இடமில்லையாவது..?” என்பதுதான். எங்கள் விடுதி நிரம்பி இருந்தாலும், வரும் விருந்தினர்களை எப்போதும் திருப்பி அனுப்ப மாட்டோம் என்பது அவர்கள் தரும் உத்திரவாதம். விடுதி இருக்கும் ஊரில் ஒரு பெரிய கணித மாநாடு நடப்பதால் ஒரு வாரம் அத்தனை அறைகளும் புக் செய்யப்பட்டு…

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன – 2?

ஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே? தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது?

தூக்கத்தைக்கெடுக்கும் சிந்தனைச்சோதனைகள்

ஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார்! கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?

வேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் – தன்னை எழுதுதல்

எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப்பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும்.

சிந்தனைச்சோதனைகள்

வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?

புத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451

புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்பதை நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது. பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன.

இடமற்ற இடத்திலிருந்து, இடத்தைப் பற்றி…

நானும் வேர்கள் இல்லாததால்தான் நான் பிறந்த இடத்தை விட்டு, சென்னை என்ற இடமற்ற இடத்துக்கு வந்திருக்கிறேனோ? ஒரு மனிதனின் முன்னோர்கள், அவர்களின் மூதாதையர்கள் வழி வழியாக வாழ்ந்து, அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நிலம், உடமைகள் யாவும் அவனுக்குக் கையளிக்கப்படும் இடம் எதுவோ அதுதான் அவனுக்குரிய இடம். அவனது வம்சாவளியின் வரலாறு, அவனது முன்னோர்களின் கல்லறைகள் போன்றவை இருக்கும் இடமும் கூட. அந்த இடத்திலிருந்து அவன் பிதுக்கப்பட்டு வெளியே வேறு இடம் நோக்கித் துப்பபடும் போது அவனுக்கு வாய்க்கும் இடம்தான் இடமற்ற இடம் (non-place). பின் நவீன யுகம் மனிதனுக்குப் பல இடமற்ற இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

தீஸியஸின் கப்பல்: திரைப்படமும் தத்துவமும்

“பழுதடைந்த ஒரு கப்பலின் பாகங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு, இறுதியில் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டால், அது அப்பழைய கப்பலேதானா? அப்படி பழைய கப்பலிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களைக் கொண்டு இன்னொரு கப்பல் உருவாக்கினால், அது புதிய கப்பலாகுமா? இல்லை, அது முதல் கப்பலேதானா?”

இந்த முரண்பாட்டு வாக்கியங்களுடன் தொடங்குகிறது படம். மூன்று கதைகளாக மூன்று மனிதர்களின் உலகில் பயணிக்கிறது.

மேல்நாட்டுச் செருப்பு

மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

பேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்

நம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விடுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.

புதுமைப்பித்தன் கவிதைகள்

“புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.” – க.நா.சு

மிலிந்தனின் கேள்விகள் – 2

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

அனுபவமாவது எது?

கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.

துயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி

இது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும் போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது, மற்றும் அந்த வேலையை முடிக்கும்போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய்.