சில நிமிடங்கள் என் அறையில் உட்கார்ந்திருந்தேன். சூடாக ஒரு கோகா நீரைக் குடித்தேன். பயம் மொத்தத்தையும் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டதா? இல்லை இப்படி ஆமை ஓட்டுக்குள் முடங்குவது போல கிடப்பது என் பயத்தை நேரடியாக சந்திக்கத் துணியாத கையாலாகாத்தனமா? இந்த பயமெல்லாம் என் கற்பனை மட்டுமே.
Series: அதிஜனநாயகம்
அதிஜனநாயகம் -2
குரல் கேட்கக்கேட்க என் முகத்தருகே எதோ கரிய அமிலம் படர்வதைப் போல உணர்ந்தேன். முகத்தில் வியர்வை கொட்டியது. என் கதையில் எழுதியது போல வான்குடியினராக இவர்கள் இருக்கக்கூடாதா என ஒரு கணம் எண்ணினேன். அப்படியிருந்தால் இவர்களை நாம் அழித்திருப்போம். மனிதர்களுக்கு என முடிவெடுக்க ஒரு பேரரசு அமைந்திருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லாதது எத்தனை பெரிய விடுதலை
