ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது.
Category: சிறுகதை
அடுத்த பரிணாமம்
“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.
அவர் அவர் எச்சத்தால் காணப்படும்
“உன்னை மாதிரி எல்லா காபிடலிஸ்ட்களும் இருந்தா, மார்க்ஸ் ‘டாஸ் காபிடல்’ எழுதி இருக்க மாட்டார். இப்ப… ‘வென்டிஸ்’ல வேலை செய்யறவன் அதிக சம்பளத்துக்கு ‘மெக்டனால்ட்ஸ்’ போனா தொழில் ரகசியத்தை கடத்திண்டு போயிடறான்னு அதைத் தடுக்கலாம். அது மாதிரி இன்னும் பல வேலைகள். நாங்க இருக்கற கட்டடங்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணற ஆட்கள் கூட சுலபத்தில வேலை மாற முடியாது.
கம்பளிப் பூச்சி
எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா?
அலையோட்டம்
இப்படித்தான், இவனுக்குள் ஊறும் எந்தக் கேள்விக்கும் அவ்வப்போதே பதில் கிடைக்காது. பார்க்க வரும் யாரிடமாவது சாமி பேசுவதைக் கூர்ந்து கவனித்து எடுத்துக்கொள்ள வேண்டும்; பள்ளிக்கூடக் கேள்வித்தாளில் இருக்கும் ‘பொருத்துக’ பயிற்சி மாதிரி, இவனாகக் கேள்விகளையும் பதில்களையும் பொருத்திக்கொள்வான். சிலசமயம் பதில்களிலிருந்து கேள்வி உதிப்பதும் உண்டு…
மீன்
நாகேஷ் மெதுவாக, “மாப்பிள்ளை கொஞ்சம் முரடரா,” என்றார் பாவனாசத்திடம். “அதெல்லாம் இல்லை, அவன் கொஞ்சம் பயந்து போயிருந்தான், பொண்ணு நல்ல லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கா அதனாலோ என்னவோ அவனுக்கு கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்,” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான்.
காண்பதுவே உறுதி கண்டோம்
எனக்கென்ன தோன்றுகிறது என்றால்…ஒருவருடைய நிலை, ஆளுமை நியாயவாதியா, பொய்யரா என்பது அனிச்சையாகத்தான், நிகழும் அந்த கணத்தில்தான் தெரியவரும்…கொஞ்சம் மாற்றிச்சொன்னால்…யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டாலே தங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளை ஆராய்ந்து தக்க எதிர்வினை செய்யலாம் என்றாலே ஒரு மாதிரி நீர்த்து போய்விடுகிறதோ என்று படுகிறது…”
ஒலிமுகவாசல்
அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.
தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்
ப்ரபஞ்சம் முழுதையும் படைத்த கர்த்தர், பரலோக ராஜ்ஜியத்தைத் தான் ஆண்டுகொள்வதாகக் கூறி, பூமியை இவர்கள் ஆண்டுகொள்ளும் உரிமையை அளித்திருந்தார். இவர்கள் இருவரும் வசிப்பதற்காகவே இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். சுற்றிலும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும், செடி கொடிகளும் உண்டாயின. தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்
பைசாசம்
சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.
சம்பந்தம்
நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…” அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன்
மின்மினிகள்
காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’
சுழற்சி
வள் புறஒலிகளை இரத்து செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப் போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே. அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை.
வெளிச்சம்
“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.
மதியொன்றில்லை..
எப்போதோ தான் சொன்னதை மதித்து அதனாலேயே உத்தியோகம் தேடி வெளியூரெல்லாம் போகாமல் ஊரோடு கிடக்கும் ஜகுவின் அந்த மெலிந்த குள்ள உருவம் தன் முன் விஸ்வரூம் எடுக்கவும் தேசிகன் வாயடைத்துத்தான் போனான். அவனிடம் இப்படிச் சொன்னதையே மறந்து மேற்படிப்பு உயர்ந்த உத்தியோகம் அமெரிக்கா டாலரில் பணம் என்றிருந்த தன்னை அவனுடன் ஒப்பிட்டபோது தனது ஆறடி உயரத்திற்குமுன் வாமனனாய் வந்து ஓங்கி உலகளந்தவனாய், உத்தமனாய் ஜகு தென்பட்டான்!’
தங்கப்பல்- புன்னகையின் இடைவெளி
“மனுஷன் சாப்பிடுற சோறா இது?” என்று வார்த்தை நழுவியது. பின்னர் – தட்டையும் வீசப்பட்டது. நேராக அவளது முகத்தில். அவளது முன்பல் உடைந்தது. அவளது சிரிப்பின் ஒளி, அந்த நொடியிலே மெலிந்து போனது. அந்த நாள் முதல்…அவர் சிரிக்கும்போது,அவளது புன்னகையின் பிழைதிருத்தம் அவர் நெஞ்சில் ஒரு குற்ற
ஆகுதி
நான் ஒரு மோசமான மகன். நான் தவறான முடிவுகள் எடுத்தேன். நான் அவரை காயப்படுத்தினேன். அவர் தினம் தோறும் என்ன செய்ய வேண்டுமென பட்டியல் கொடுத்தேன். அவரை சிறை கைதியாக்கினேன். இப்போது அவர் எங்கேயோ, குளிரில், பயத்தில், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் முகம் கூட நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.
ஓர் இ.மு. காலத்துப் பன்மொழிக் காதல் கதை
உமா, மூர்த்தி மாதிரி ப்ராக்டிகலானவளா? நம்மை மாதிரி அவளும் மோட்டு வளை ரகமாயிருந்தால் ஆபத்துதான். ரசம் பொங்குவதிலும், கத்தரிக்காய் வதங்கிச் சுருங்குவதிலும் கவிதையைக் காணும் மனைவி நமக்கு வேண்டாம். குடும்பத்தில் ஒரு கிறுக்கு போதும். ஆனால் ரொம்ப ப்ராக்டிகல் என்றாலும் வம்புதான். ஒரு நல்ல கவிதையையோ கலைப் படைப்பையோ ஆசையுடன் பகிர்ந்து கொள்ள மனைவி வேண்டாமா?
வேடம் தாங்கல்
அசோகனிடம் கதை பேச்சை நிறுத்தி, படுக்கைக்களை இரண்டாக்கிக் கொண்ட பிற்பாடு, சியாமளா ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொண்டாள். கருத்தரிப்பதற்காக உடலளவில் ஆரோக்கியமாக தான் இருப்பதை அறிந்துகொண்டபோது அவளின் கவலை மேலும் இரட்டிப்பாகியது. அசோகன் மீதான கோபம் பன்மடங்காகியது. கணவரின் விந்தணுக் குறைபாட்டால் கருத்தரிக்கும் பாக்கியம் கிடைக்காமல், ஏன் தனது வாழ்நாள் முழுவதையும் அவப்பெயருடனும் அவமானத்துடனும் கழிக்க வேண்டும் என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.
சிறகடிப்பு
கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச்சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.
நித்தியம் – 2
காத்தின் மூளைக்குள் திடீரென மோட்சார்ட்டின் ரெக்வியம் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சமூட்டும் இசை அவளது நரம்புகளைப் பிடித்து இழுத்தது. இறப்பின் அழைப்பைப் போன்ற அந்தப் பாடல் அவளது இதயத்தை கனமாக்கியது, கல்லறையின் மண்ணை அவள் மீது வீசுவதைப் போல் உணர்ந்தாள். யார் இந்த மனநோய் தந்திரத்தை விளையாடுவது என்பதை அறியாமல் உணர்ந்த காத், அந்த இசையை மறக்க முயன்றாள். ஆனால் அவளது தலையில் ரெக்வியம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது, அவளது ஆன்மாவை ஒரு கருப்பு துணியால் போர்த்துவதைப் போல்.
அந்தரங்கம் புனிதமானது
என் தொழிலில் அது புனிதமானது. இங்கே பேசப்படும் வார்த்தைகள் இந்த அறையை விட்டு வெளியே போகாது. தப்பித்தவறி விட்னியின் ஒரு காதில் விழுந்தாலும் அவள் அதை இன்னொரு காது வழியாகத் தள்ளிவிடுவாள். நம் உரையாடல் பதிவாகும். ஆனால் அதன் முக்கியமான பகுதிகளை நான் காகிதத்தில் எழுதிக்கொண்டு மொத்தத்தையும் அழித்துவிடுவேன். உன் குழு சாஃப்ட் பால் ஆடுவதை நான் பார்க்க வந்தால், இல்லை ஒரு விருந்தில் நாம் சந்திக்க நேரிட்டால், உன்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டேன்.
சமிக்கை
அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும்.
திகைப்பெனும் தீராப்பொழுதுகள்
வண்ணத்துப்பூச்சியை குளிரிகள் மொய்த்ததிலிருந்து இப்போது இந்த சுள்ளான்கள் வந்தது வரை எனது கைபேசியில் புகைப்படமும் வீடியோவுமாக எடுத்து வைத்திருந்தேன். நிவேதனா வரும்போது காண்பிக்க வேண்டும். பொதுவாக எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பழக்கம் என் நண்பர் ஹனிபா அவர்களிடமிருந்து எனக்கும் வந்துவிட்டது.
உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்
லோகநாதன் இவள் மீது கோபப்பட்டு ஓடும் நதியில் பாய்ந்த புவனை நினைத்தான். எண்ணங்கள்தான் எத்தனை வலுவானது என நினைத்தான். எதை நம்புகின்றோமோ, அது செயலின் ஆற்றலை வழங்குகின்றது எனச் சொல்லிக் கொண்டான். புவன் குழந்தைக்கு சாப்பிட்ட பின்னர் ஏப்பம் வர வேண்டுமென விக்கியின் முதுகை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தான்.
தொட்டவுடன் நீராக ஓடிய பனி
அப்பொழுதுதான் அப்பாவை முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.
நித்தியம்
“டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?” கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.
செஞ்சீலை
காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது.
பலி
“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.
கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்
ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ” நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல் புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது.
வாகை மனம்
வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது. வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது. தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது. கோல்டன் பாய் வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார். அவர் அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது. இந்தப் பக்கம் அவர் திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.
தெய்வ நிமித்தம்
“உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம்,
குழலினிது
சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
அம்பு
அது ஒரு வழி பாதை. அதன் பிறகு அல் ஷபாப் இருக்கும் வரை நான் சோமாலியாவில் கால் வைக்க முடியாது. என் மொத்த கனவும் முடிந்து போகும். லண்டனிலோ, நியூ யார்கிலோ கார் கழுவிக் கொண்டு, கட்டிட வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். அதற்கு நான் சாகலாம். இப்போதே என் சகோதரனை போல உடல் சிதறி சாகலாம்.
கரு
உன் ஆன்மா மிகப் பெரியது, அழகானது, பிரம்மாண்டமானது, உன்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனித மனம் உன்னில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, ஒரு கோப்பைத் கிளாஸ் தண்ணீரில் உன் விரலை வைத்து அது சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பது போல.
நண்டுப்பிடி – பாகம் 2
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து ஒரு மைலில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரப்பர் மற்றும் டயர் தயாரிப்பில் பென்ஸீன் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பங்கு நிச்சயம் வெளிப்பட்டு காற்றில் கலந்திருக்கும். இத்தனை வேதியியல் பொருட்களில் எதாவது ஒன்று, முக்கியமாக பென்ஸீன், என் உடலில் தங்கி கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியைக் கிளப்பிவிட்டிருந்தால்…”
இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை, வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.
மெய்கண்டவன்
மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
ஊழிப் பெருவெள்ளம்
ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
முகம் அலம்பும் பூனை
மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
தும்ரி
அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள்.
ஊடாடும் பெருநிழல்
பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும் பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி. உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம், அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
சாப விமோசனம்
சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர் மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.
கல்பதரு
’உலக வரலாறுல யோசிச்சுப் பாத்தா மண்ணை வச்சு வீடு கட்டறதுக்கு முன்னாடியே முறிஞ்சு விழுந்த கிளைகளை வச்சு கீத்தை வச்சு மனுஷங்க தங்க வாழிடத்தை உருவாக்க முயற்சி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படின்னா கார்பெண்டரி உலகத்தோட தொன்மையான தொழில்கள்ள ஒன்னு
உயிரில் கலந்து
ஒருநாள் தூக்கம் கண்ணை இழுக்கும்போது திடுப்பென விழித்துக்கொண்டேன். காரணமின்றி கண்ணீர் பெருகியது. கேவலாக மாறியது. சத்தம் கேட்டு மாதவன் எழுந்து “ப்ரியா, என்னாச்சு? ஒடம்பு சரியில்லியா? ஃபோன் ஏதாவது வந்துதா? அழுகைய நிறுத்திட்டு என்னன்னு சொல்லேன்! ப்ளீஸ், என்னாச்சு?” என்று பதறினார். இத்தனை காலம் தாண்டியும் இன்னும் அகாலத்தில் ஃபோன் அடித்தால் எனக்கு ஏற்படும் நிலைகுலைவு அவர் அறிந்ததுதான்
அறுபது நொடிகள்
கடைக்கு ஒட்டினாற்போல இருந்த அவருடைய வீட்டுக் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் அவசரமாக பணம் வேண்டும் என்றான். கடைக்கதவை திறந்து இவனை உட்கார வைத்தவர், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘பதினைந்தாயிரம் வேண்டும், அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீட்டு விடுகிறேன்’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தான். அதனை உரசிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாயை எண்ணி இவன் கையில் கொடுத்தார். அதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
எல்லையற்ற நடனம்
“நாம் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கும்போது, வெறும் கால-வெளியை மட்டும் உருவாக்கவில்லை,” என்று டாக்டர் மார்கஸ் தனது கையை உயர்த்தி, மேலே உள்ள ஹோலோகிராபிக் காட்சியில் புதிதாக உருவாகும் பிரபஞ்சத்தை சுட்டிக்காட்டினார். “எளிய விஞ்ஞான செயல்முறை அல்ல. நாம் ஒரு கடவுளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம், பாருங்கள், இங்கே. பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் – ஒவ்வொன்றும் ஒரு சூரியன், ஒவ்வொன்றும் புதிய உலகங்களுக்கான ஒளி. டிரில்லியன் கணக்கான கிரகங்கள் – ஒவ்வொன்றும் ஒரு வீடு, ஒரு தாய்மடி, புதிய வாழ்க்கை.
இன்மையால் வகுத்தல்
ஆறு ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு, அவள் மீதான காதல் நீர்த்துப் போனது. அந்த எண்ணத்தையே கார்ல் மறுத்தான். ஆனால் அவள் மாறிவிட்டாள் – இப்போது அவளை புரிந்துக்கொள்ளவோ அவளுக்காக தான் என்ன உணர்கிறான் என்று தெரியவில்லை. ரெனேவின் அறிவுலகமும் உணர்வுலகமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைய, அவனால் எட்ட முடியாத எல்லைகளுக்கு அப்பால் அவள் சென்றுவிட்டதாக உணர்ந்தான்.
15
“இது இன்னும் மோசம். பொநுதான் இதன் காரணமா?” என் இருபது ஆண்டு ஊடக வாழ்க்கையில் நான் கேட்ட, படித்த பல சதிக்கோட்பாடுகள் நினைவிற்கு வந்து என்னை அந்த உரையாடலில் ஆர்வமிழக்க செய்தன. இங்கே வந்ததற்கு பதிலாக முன்னரே திட்டமிட்டபடி என் துணையுடன் வெளியே போயிருக்கலாம். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்க தொடங்கினேன்.
பூச்சாண்டி
‘பொதங்கிழம வயசுக்கு வந்துருக்கியா?. பரவால்ல நல்ல நாளுதான்..’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அன்னிலேர்ந்து அவுங்க குடுத்த சாப்பாடுதான் வயித்த கொமட்டுது. சொன்னா நம்ப மாட்ட பூச்சாண்டி!. பச்ச முட்டய ஒடச்சி, அதுல நல்லெண்ணிய ஊத்தி, அப்படியே குடிக்க சொல்றாங்க.
