பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்

பொருளாதார அறிவியலிற்கான நோபல் பரிசு 2024 ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான (Sveriges Riksbank) ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசு 2024 “நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்காக” டாரன் அசெமோக்லு, (Daron Acemoglu) சைமன் ஜான்சன் (Simon Johnson) மற்றும் “பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்”

தப்பி ஓடுதல்

ஏழு வருடங்களாக, வருடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிய பிறகு, மான்கெல் வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார், கூடவே இந்தத் தொடரை வேறு எங்கு செலுத்துவது என்றும் யோசித்திருக்கிறார். நடந்ததென்னவென்றால், தொடரின் கடைசி நூலான  நொந்திருந்த மனிதன் (The Troubled Man-2009), நன்றாக உருவாக்கப்பட்டு, காத்திரமான இறுதிக்கட்டத்து முடிச்சவிழ்ப்பு கொண்ட உளவுக் கதையாக அமைந்திருந்தது.  ஆனால் முந்தைய பத்தாண்டில் வெளியான மூச்சடைக்கும் வேகம் கொண்ட மர்மக் கதைகள் போலன்றி இது சில நேரங்களில் மெதுவாக ஊர்கிற கதையாக இருந்தது. 

எண் என்ப

திரிபுகளும் ‘சிஸ்டம் மால்பங்ன்க்ஷன்’ எனச் சொல்லும் நாட்களும் அவளுக்குப் பிடித்தமானது. புதுவிதமான சிக்கல்களைத் தீர்க்கும் ஆர்வத்தில் அன்று நேரம் போவதே தெரியாது. புதுசாக எதையாவது கற்றுக்கொள் என பார்க்கவின் தொந்திரவும் இருக்காது. ஆனால் அப்படி சிக்கல் இருக்கும் நாட்கள் குறைவு. ஒரு சிறு கிராமம் போல டீச்சரின் சமூக அமைப்பு இருந்தாலும், ஒவ்வொருவரும் தனிதீவுகளாகவே செயல்படுவார்கள். கணிதா கட்டடத்தில் மட்டுமே இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கணித வல்லுனர்கள் ஸ்வராவுடன் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள்.

அப்பா வீடு திரும்புகிறார்

நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார்
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க.
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,

சஹிதா: அணையா நெருப்பு

சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

தளிர் பெருமரம்

This entry is part 16 of 19 in the series கவிதாயினி

இந்த நான்கு பாடல்களும் தலைவனின் பிரிவை பேசுவதாக இருந்தாலும் இவற்றின் தொனி வேறு வேறு. ஒன்று ஆபத்தை நினைத்து அச்சத்தில் தலைவனுக்காக பதறுகிறது. ஒன்று கோடை கால வெம்மையை கண்டு உளம் துடிக்கிறது. மற்றொன்று காதல் வெளிப்பட்டதை நினைத்து வருந்துகிறது. அடுத்தது வானில் தன் பட்டம் ஊரறிய பறப்பதை கண்டு களிக்கிறது

20 வடை + 13 பேர் = 2 புத்தகம்..

மூன்றாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் அதிகம்பேரை கூட்ட முடியவில்லை கட்டுரை என்றால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். முப்பது பேர்வரை வருவார்கள். நாவலென்றால் பத்து பேர்களுக்குள்ளாகத்தான் வருவார்கள் ஆறு பேர்கள் தவிர மற்றவர்கள் படிக்க வே மாட்டார்கள். பேசியதிலிருந்து கேள்விகள் கேட்டுவிட்டோ, பாராட்டிவிட்டோ சென்று விடுவார்கள்

விஷக் கிணறு

நம்மூரில் ஒரு மனநிலை உள்ளது. ஊர் வளரத் திட்டம் இல்லாது, தன் வீட்டை மட்டும் ஊரில்  பெரிதாகக் கட்டிக் கொண்டு அங்கே காலா காலத்துக்கும் சொகுசாகச் செல்வாக்காக வாழமுடியும் என்னும் மனநிலை. ஊர் செழிப்பில்லை , ஊரில் பிழைப்பில்லை என்றால் வீட்டைப் பராமரிக்கக் கூட முடியாது போகும் என்ற எண்ணமே இல்லாது வாழ்பவர்கள். அது ஒரு சிதல். கதையில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று ஜெயசந்திரன் செயலற்றுப் போன ஊரில் செயல் உருவாக்கம் செய்ய வீட்டை வாங்கத் தயாராகின்றான்.

புதிய பாடத் திட்டம்

ப்ரெஞ்சுப் புரட்சியைப் படிக்கப் புகுந்த மதன் ஸார் மாவட்ட நூலகமே கதியென இருக்கத் துவங்கினார். ஏற்கனவே குண்டு குண்டு நாவல்களாக வாசிப்பவர், இப்போது உலக வரலாறு பற்றிய குண்டு குண்டு புத்தகங்களாக வாசித்துத் தள்ளுகிறார். நூலகத்தில் மணிக்கணக்காக படிப்பதோடில்லாமல் வீட்டிற்கும் பள்ளிக்கும் கூட எடுத்து வந்து அந்த குண்டுப் புத்தகங்களை வைத்து வாசிக்கிறார். பாட்டி ‘இந்த வாத்தியார் புள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சாதான் என்ன’ என்றார்.

நீலாம்பரி ராகம் உனக்காகவே நீலா

கச்சேரியின் நடுவில், எம்எஸ் அம்மா “தொல்லுயி…” என்று தொடங்கும் அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். எனது நண்பன் “ஆஹா நீலாம்பரி ராகம், சபாஷ்” என்று உற்சாகமானான். “மாதவ மாமனு” கேட்டிருக்கியோ என்றவன், என்னை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் தொடங்கிய ராக ஆலோபனையில் தன்னை மறந்து விட்டான். நான் அருகில்  நடைபெறும் கிசுகிசுக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.‌

நீலக் குறிஞ்சி

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி கோத்தகிரி பகுதியில் மலர்ந்திருப்பதாகத் தகவல் வந்ததும் மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தேன்.  காடுகளுக்கும் மலைப்பிரதேசங்களுக்கும் தாவரங்களைக் காணவும் அவற்றைக் குறித்து அறிந்து கொள்வதற்கும் இப்படியான துறை சார்ந்த சுற்றுலாக்கள் செல்வது வழக்கம்தான் என்றாலும் மிக அரிய நிகழ்வான குறிஞ்சியின் மிகைமலர்வைக் காட்டிலும் பெரிதாக  வகுப்பறையில்  மாணவர்கள் என்ன தாவரவியல் அற்புதத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?

சுரங்கம்

எஸ்டேட் மேனேஜர் உத்தரவால்
எருதைப் பிடிக்கும் முயற்சியில்
தவறிச் சரிவில் விழுந்து
ஒரு கொம்பு முறிந்ததை
மலைக்கிராமம் அறிந்திருந்தது
முன்பு காட்டை விட்டே வெளிவாராத எருது
இப்போது தன் கூட்டத்தோடு இல்லை
இலைதழைகளில் மறைந்தும்
சேற்றில் அமிழ்ந்தும்
பிறர் அறியாமல் திரிகிறதாம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப்  பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள்.  இதைச் சொல்லி விட்டு பகவான்  தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார். 

ஒளி! பேரொளி!!

மாணவப் பருவத்தில்  அருமையான ஒரு கருத்தை, அது டார்வினின் கோட்பாடாகவோ, ஒரு செய்யுளை பதம் பிரித்துப் பொருள் காண முடிந்ததாகவோ இருந்தாலும், அந்தக் கருத்து அறிவிற்குப் பிடிபட்டதும் ஒரு வெப்பமான அலை உடலில் எழுந்து தலையில் பாயும், தலையில் ஒரு ஒளிவட்டம் சில நொடிகளுக்கு இருக்கும்; பின் நாளெல்லாம் உள்ளம் களிப்பில் துள்ளும். இதுதான் உடலில் ஒளி செய்யும் விந்தை; மாயம். எல்லா அறிதலும், எல்லாப் புரிதலும் இதற்குட்பட்டதுதான். ஒளிமயமானதுதான்.

மிளகு அத்தியாயம் எண்பது

அங்கே பக்கத்தில் மிர்ஜான் கோட்டையை முற்றுகை இட்டு நேமிநாதனும் அடுத்தடுத்த குறுநில மன்னர்களும் ஜெர்ஸோப்பாவின் மகாராணி சென்னபைரதேவியை எதிர்த்துப் போர் நடப்பதால் இங்கே ஜெருஸப்பாவில் பாதுகாப்பாக இருக்கும் என்று வந்ததற்குக் காரணம் இருந்தால் அதோடு மஞ்சுநாத்தைப் பார்க்க வேண்டும், எப்படியாவது அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றும் வழி தேடி வந்ததும் பரமனின் வலுவான காரணம் தான். 

சிலிர்ப்பு

“ஹராம் ஜாதோ…   எவனோ இடித்து விட்டு ஓடி விட்டான். இந்தப் பையன்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தான். இவனைப் போய் அடிக்கிறீர்களே… முட்டாள்களே… நகருங்கடா என்று எல்லோரையும் விலக்கி விட்டார். அவர் அருகில்  வந்து நின்றதை உணர்ந்ததும் அந்த ஆஜானுபாகர்கள் எல்லோரும் இவனை மறந்து நெகிழ்ச்சியுடன் பாபுஜி என்று பெரியவரைக் கட்டிக் கொண்டனர். 

கோபக்கார இளைஞர்கள் (ஆங்க்ரி யங் மென், சலீம் – ஜாவீத்)

இந்தோரிலிருந்து சலீமும் குவாலியரிலிருந்து ஜாவீதும் மும்பைக்கு வந்து, சலீம் திரைப்படத்தில் நடிக்கவும் ஜாவீத் திரைப்படங்களுக்கு எழுதவும் தொடங்கிய தொடக்க நாள்களில், அங்கும் இங்குமாகச் சில வாய்ப்புகளுக்குப் பின் சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் வெலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் மாதச்சம்பளம் ஆளுக்கு 750 ரூபாய்

ஐந்து நாற்பத்தி எட்டு

அவளுக்கு வேலைத் திறமை இருந்தது, நேரம் தப்பாது வந்தாள், நல்ல தட்டச்சாளியாக இருந்தாள், அவளிடம் அவர் ஒரே ஒரு விஷயத்தில்தான் குறை காண முடிந்தது – அவளுடைய கையெழுத்தில். அவளுடைய தோற்றத்தோடு அவளுடைய சீரற்ற கையெழுத்தை அவரால் பொருத்திப் பார்க்கவியலவில்லை. அவள் வட்டமான சாய்வெழுத்துகளில் எழுதுவாள் என்று எதிர்பார்த்திருந்தார், அவளுடைய கையெழுத்தில் ஆங்காங்கே அப்படிச் சில தடயங்கள் இருந்தன, ஆனால் அவை நேர்த்தியற்ற அச்சு வடிவ எழுத்துகளோடு கலந்து இருந்தன. 

சந்திரஹாரம்

அம்மா என் தலை வீங்கும் அளவுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். “இப்போதே கழுத்து வரை கடனில் முழுகி உள்ளோம். இது வேறயா? பணம் கொடுத்து வாங்கினாலும், அது தெரியாதவர்கள் நாம்தான் பாட்டியின் சங்கிலியை பிடுங்கிக் கொண்டோம் என்பார்கள்.  நமக்கு எதற்கு இந்த அவப்பெயர்? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளடா, சின்னா” என்றாள் அம்மா

ஹெட்மாஸ்டர்

கமலா பெட்ரூமைத் தாளிட்டு விட்டு படுத்திருந்தாள். சோர்வோடும்,
நடுக்கத்தோடும், சாவின் விளிம்பை உரசிவிட்டு வீடு திரும்பியிருந்த
அவருக்கு ஓர் அருமையான வரவேற்பைத்தான் அவர் மனைவி
தந்திருக்கிறாள். முழு இரவும் ஹாலிலேயே படுத்திருந்தார். அந்த
அமைதியான குற்றச்சாட்டு அவரை வறுத்தியெடுத்தது. அவருடன் பணி
புரியும் அந்தப் பெண்ணிற்கு உடல் நலமில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும்
அந்தப் பெண்ணை அவர் அணைத்தபடி அழைத்து வந்தார்

இங்கிவனை யான் பெறவே

“கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான்.

 காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!

தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும்

வெற்றி யாருக்கு?

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் அக்டோபர் 1, 2024 அன்று இரு துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நடந்த விவாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக இவர்களின் விவாதம் அதிபர் தேர்தலில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் மூன்றாவது விவாதம் செய்ய மறுத்ததால், ‘வேன்ஸ்-வால்ஸ்’ விவாத மேடை அதிக கவனத்தை ஈர்த்தது

கு. அழகர்சாமி கவிதைகள்

அந்த
மாமலையை
நெருங்க நெருங்க
என் அகத்துள்
ஆழ்ந்து ஆழ்ந்து
ஓங்கும்
மெளனத்தை மறைத்தது
மால்நிற மாமலை.

என்றாவது ஒரு நாள்….

எனக்கு அப்போது தெரியாது அவனுடன் பேசுவது அதுவே கடைசி முறை என்று. அவனுடன் பேசிய அடுத்த பத்தாவது நாள் ஆர்மி ஹெட் க்வார்ட்டர்சிலிருந்து எனக்கு போன் வந்தது. ‘தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் வீரமரணம் அடைந்து விட்டான் உங்களுடைய சகோதரன். அவனுடன் உயிர் நீத்த எல்லாருடைய உடல்களையும்  நாளை டெல்லிக்கு கொண்டு வருகிறோம்.   ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு உடலை ஒப்படைக்கிறோம்

அதிரியன் நினைவுகள் – 45

This entry is part 44 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மருந்துகளால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை என்கிற நிலைமை. கைககால்களில் வீக்கம் கூடியிருந்தது. இப்போதெல்லாம் படுத்து உறங்குவதில்லை ; உட்கார்ந்தபடித் தூங்குகிறேன். மரணத்தின் நன்மைகளில் ஒன்று, அது மீண்டும் படுக்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகும். ஆண்ட்டொனைனஸ(Antoninus) ஆறுதல் படுத்துவது இப்போது என் கையில்.   எனது பிரச்சினைக்கு, மரணம் சரியானத் தீர்வாக  இருக்குமென்கிற எண்ணம் வெகுநாட்களாக  என்னிடத்தில் இருப்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.

உதிர்வெனும் தாழாப்பொழுது

இடையில் கிடந்த
மோதிரத்தை
காக்கை கொத்திச்சென்றதை
நாங்கள்
எச்சலனமற்றும்
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தோம்.

தெய்வநல்லூர் கதைகள் 23

This entry is part 23 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

எம் எஸ் சி சார் வந்ததும் பிரார்த்தனை ஆரம்பிக்கையில் கேட்வாசலுக்கும் பிரார்த்தனை மாணவர்கள் கடைசி வரிசைக்கும் நடுவில் நின்று கொண்டார். ஆரம்பித்த நொடிக்குப் பிறகு வருபவர்களை போக்குவரத்து காவலர் போல கைகாட்டி ஒரு ஓரத்தில் நிறுத்தினார். முடிந்ததும் வருபவர்கள் தனி குழு. முதல் குழுவினரை பிரார்த்தனை முடிந்ததும் வரிசையில் நிறுத்தி பெயர், வகுப்பை குறித்துக் கொண்டு இடது கையை நீட்டச் சொல்லி பிரம்பால் ஒரு அடி. ஒரு வாரத்தில் இருமுறை தாமதமாக வந்தால் இரண்டாம் குழுவுடன் சேர்க்கப்படுவார். இரண்டாம் குழுவுக்கான தண்டனை சற்று வித்தியாசமானது. இரண்டாம் குழுவினர் மொத்தமாக பள்ளி மைதானத்தை இரு சுற்றுகள் ஓடி வர வேண்டும்.

சூரியக்கிண்ணம்

கைகளில் வளைந்தோடும்
என் விதியின் விரிசலில் –
சூரியக்கதிரின் கசிவு…!
அவ்வகையில் என் வீதியெல்லாம்
பிரகாசித்துக் கிடக்க,
தினமொருமுறை என்னை நானே
என் இருளுக்கு இரையாக்கி
இறந்திருக்கிறேன்…!!

சங்கீத சாகித்தியமும் சாந்தானிக பிச்சையும்

ஒரு முழு வாழ்க்கையை விவரிக்கும்  கணிசமான அளவு நீண்ட  நாவல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நாவல் முழுக்க விரவி இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாதவர்களும் படித்து ரசிக்கும் வண்ணம்  மனித உணர்வுகள் கலைஞர்களின் இயல்புகள் அவர்களது எளிதில்  ஊகிக்க முடியாத,மனப்போக்குக்கள்,புரிந்துகொள்ள முடியாத விசித்திர நடவடிக்கைகள் ஆகியவை  முக்கிய இடம்பெறுகின்றன

ரேகா வசந்த் கவிதைகள்

தினசரி
தண்ணீர் பாய்ச்சினேன்
தவறாமல் !
ஆக்ரமித்து
வைத்தேன்
உரங்களால் !
ஆனாலும்
ஏன் இந்தக்
ரோஜாக்கன்று
வளரவே மாட்டேன் என்கிறது?

எரியும் மரங்கள்

ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை.