காணாத கைகளால்
கதை எழுதும் மாயை,
மனத்தூணாய் நின்று ,
நம்மையே,
நம்மிடமிருந்து மறைக்கிறது!
Author: ரேகா வசந்த்
ரேகா வசந்த் கவிதைகள்
தினசரி
தண்ணீர் பாய்ச்சினேன்
தவறாமல் !
ஆக்ரமித்து
வைத்தேன்
உரங்களால் !
ஆனாலும்
ஏன் இந்தக்
ரோஜாக்கன்று
வளரவே மாட்டேன் என்கிறது?
