அரிதாரம் பூசும் கனகம்

ஆனிப்பொன் பெட்டகத்தை
“தகரம்” என்று
எப்படியோ
நம்ப வைத்து விடுகிறார்கள்
பழைய இரும்புத்தகரத்திற்கு
பேரீச்சம்பழம் விற்பவர்கள்!

ரதநிலைதனை தருவாயே!

அலையின் அலைக்கழிப்பில்
பிடிமானக் கயிற்றின்
ஒரு முனைத்
தொக்கி நிற்கிறது!
அலைகளுக்கோ ஓய்வில்லை!
மூழ்கி முத்தெடுக்கும்
தன்முனைப்பும்
குறைவதாய்த் தோன்றவில்லை
கொஞ்சேமேனும்
கருணை காட்டுங்கள்
அலைகளே!

ரேகா வசந்த் கவிதைகள்

தினசரி
தண்ணீர் பாய்ச்சினேன்
தவறாமல் !
ஆக்ரமித்து
வைத்தேன்
உரங்களால் !
ஆனாலும்
ஏன் இந்தக்
ரோஜாக்கன்று
வளரவே மாட்டேன் என்கிறது?