ஒரு முழு வாழ்க்கையை விவரிக்கும் கணிசமான அளவு நீண்ட நாவல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நாவல் முழுக்க விரவி இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாதவர்களும் படித்து ரசிக்கும் வண்ணம் மனித உணர்வுகள் கலைஞர்களின் இயல்புகள் அவர்களது எளிதில் ஊகிக்க முடியாத,மனப்போக்குக்கள்,புரிந்துகொள்ள முடியாத விசித்திர நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன
