நான் யார் யாரென்று சொல்லவில்லை

ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.

கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்

கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.

ஏ பெண்ணே

This entry is part 1 of 10 in the series ஏ பெண்ணே

என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.

உணவு, உடை, உறையுள், … 1

This entry is part 1 of 3 in the series உணவு, உடை, உறையுள்

பட்டியலின் கீழே அவள் தோழியுடன் பேசிய நேரத்தில் அவன் பென்சிலால் எழுதிய ஒரு படம். ஜன்னல் வழியாகத் தெரிந்த இலைகள் உதிர்த்த மரம். இரண்டையும் அவள் சிலநொடிகள் உற்றுப்பார்த்தாள். மரத்தின் வெறுமை படத்தில் வெளிப்பட்டதைக் கவனித்தாள். காகிதம் சுற்றிய பெட்டிக்குள் இன்னொரு வர்ண அட்டைப்பெட்டி. வாடர்-கலர் கிட் – முப்பது வர்ணங்கள், மூன்று ப்ரஷ்கள், முன்னூறு காகிதங்கள்.

ஓசிப் மண்டல்ஷ்டாம் ரஷ்ய மொழி கவிதைகள்

ஓசிப் மண்டல்ஷ்டாம் (1891-1938) ரஷ்ய இலக்கியத்தின் இரண்டாம் பொற்காலம் எனரு கருதப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த ரஷ்ய கவிஞர்களில் முக்கியமானவர். அன்னா அக்மடோவா, மரீனா ஸ்வெத்தாயேவா, போரிஸ் பாஸ்டர்நாக் என்ற அந்தக் காலக்கட்டத்தின் முதல்தரக் கவிஞர்களில் ஒருவராக எண்ணப்படுகிறவர். ரஷ்ய மொழிக் கவிதைகளில் பண்டைய கிரேக்க கவிதைகளின் சிக்கனமான சொல்லாடல், துல்லியமான வெளிச்சமிக்க படிமங்கள் ஆகியவற்றைக் கொண்டுவர முயன்ற அக்மெயிஸ (acmeist) இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியவர்.

வாக்குமூலம் – அத்தியாயம் 3

ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.

மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று

மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.

அதிர்ஷ்டம்

அவளுக்கும் இப்படி யாரையாவது காதலிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்பவாவது தோன்றும். அதுவும் அந்தக் கூண்டுக்குள் போய் அவர்கள் பேசுகிற கிளர்ச்சியில் அவளுக்கே என்னவோ போலிருக்கும். எப்படியெல்லாம் அந்தரங்கமாய் சீச்சீ, ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆண்களை விட கல்லூரிபோகிற பெண்கள் எத்தனை தைரியமாய் உடல் குலுங்கக் குலுங்க சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்கள். மூணு நிமிடம் தாண்டினால், எக்ஸ்டென்ஷன் என்று பட்டனை அமுக்கச் சொல்லி தொடர்ந்து பேசுகிறார்கள். ஒரு கால் ஒரு ரூபாய். நாலு எக்ஸ்டென்ஷன், மொத்தம் அஞ்சு கால்… என்றால் அலட்சியமாக அஞ்சு ரூபாய் வைத்துவிட்டுப் போகிறார்கள். காதலர் இன்றி பிசிவோவுக்கு வருமானம் இல்லை.

கல்வித் துறைக் கொடுமையாளர்கள்

அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது

எரியும் காடுகள் – 4

This entry is part 4 of 4 in the series எரியும் காடுகள்

எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.
துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி….

இரு டம்ளர்கள் 

மற்றவர்களின்
மகிழ்வான பொழுதுகளில்
அவர்களுக்குத் தெரிந்திருந்தது,
தங்களின் பொறாமைகளை,
மெல்லிய குசல விசாரிப்புகளில்
முகமூடியிட்டுக் கொள்ள.

பெண்களும் கற்புப் பூட்டும்

கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.

நீரில் எழுத்தாகும்

நடராஜனுக்கு வந்த கடிதத்துடன் மேலும் சிலருக்கு வந்த கடிதங்களையும் கொடுத்து விட்டு அனுமந்த ராவ் புறப்பட்டார். ராவ் குருஜியின் மானசீக சீடர். சென்னகிரி குன்றின் குகைகளில் வசிப்பவர்களுக்கு தனது சொந்த ஆர்வத்தால் கடிதங்களைக் கொண்டு வந்து தருகிறார். குருஜியின் பாதை யோகமும் மௌனமும். குருஜி ஹடயோகி. சென்னகிரிக்கு எப்போது வந்தார் எப்படி வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பல நாட்கள் சர்வ சாதாரணமாக உணவு இல்லாமல் அவரால் இருக்க முடியும். எளிய ஆசனங்களை நீண்ட நேரம் செய்வது அவரது வழிமுறை. மேய்ச்சலுக்கு வரும் இடையர்கள் அவர் நாளின் பெரும் பொழுது பயிற்சி செய்து கொண்டிருப்பதையும் மௌனத்தில் ஆழ்ந்திருப்பதையும் கண்டு ஊரில் சொன்னார்கள்

ஆரோக்கிய பச்சை

கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை  எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்

நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்

எந்த இடத்தில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளத்தான் கான்ஜி எனப்படும் சித்திரவடிவச் சீன எழுத்துருக்கள் உதவுகின்றன. சாதாரணமாக まつ என எழுதப்படும் இந்த மட்சு எனும் சொல்லை 待つ என எழுதினால் காத்திருத்தல் என்றும் 松 என எழுதினால் ஊசியிலை மரம் எனவும் பார்த்தவுடனே எளிதாகப் பொருள்கொள்ளலாம்.

அப்பால்

ஊரின் வெளியே முதலை வால் போல் ஓடும் கோட்டைச் சுவரை ஒட்டிய மரங்களண்டிய ஒற்றைப் பாதையில் சென்றால் பாறைகளை ஏந்தி வானுக்குக்‌காட்டியபடி நதி ஓடுவதைக் காணலாம். அங்குதான் நதி நடுவில் ஒரு பாறையில்‌ அவள் நின்றிருந்தாள். ஆழ்ந்த யோசனையில் சமைந்த முகம். சோகமாகக் கூட இருக்கலாம்.‌ஆனால் அவள் அழகை தியானிப்பதாகத்தான் பட்டது. ஏனெனில் அப் பொழுதானது வழக்கமான ஒன்றல்ல. சூரியனை மறைத்துவிட மேகங்கள் காற்றால் இயக்கப்பட்டு திரண்டெழுந்த பொழுது அது. எட்டுத்திக்கும் ஒளியால் வெப்பத்தால் நிறைப்பவன் ஒரு குழந்தையைத் தீண்டுவது போல் மெல்ல உலகைத் தீண்டிய பொழுது அது.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும் 
அதன் பயங்கர பயணம் 
தெரிந்ததே ஒழிய 
விடை ஏதும் காணவில்லை 
ஓராயிரம் முறை ஆடினாலும் 

எங்கே போகிறேன்?

சுவாமிகள் எப்போது சித்தியடையப் போகிறார்? ஒரு மாசமாக அப்படியே கண்ணைமூடி அமர்ந்திருக்கிறாரே! உடலில் ஒரு அசைவும் இல்லையே! மூச்சு போய்வருவதாகவும் தெரியவில்லை. எல்லாம் அடங்கிவிட்டாற்போல இருக்கிறதே! ஜீவசமாதிதான் செய்யப்போகிறார்களா?’அவர் உடம்பில் பிராணன் இருக்கா இல்லையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவரை நாம தொட்டுப்பார்க்கவா முடியும்?” இது இன்னொருவரின் கேள்வி?

அமெரிக்க இடைத் தேர்தல்களுக்கான முதல் சுற்று- 2022

தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக 2020 ஜனவரியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டது பைடன் அரசு. குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை.  மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தான் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிற தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.

பிள்ளை மொழி

கிளம்பி வரும் புதிய அர்த்தங்கள்
வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்
நசுங்கிப் புழுங்கும் சொற்களை
விடுதலைச் செய்யும்
நல் மீட்பர் நாவுகள்

பொற் தேவன்

This entry is part 4 of 9 in the series எங்கிருந்தோ

சிறு வயதில் தாக்கிய பெரியம்மை நோயினால் ஒரு கண்ணில் பார்வை இழந்தவர். ஆனால் எவ்வளவு பரந்த சாம்ராஜ்யம் அமைத்தார் தெரியுமா? இன்றைய சீனாவின் எல்லை, இன்றைய இஸ்லாமிய ஆப்கன் எல்லை என அவர் அரசின் எல்லைகள் இருந்தன. 1799-ல் லாகூரை கைப்பற்றினார். அவர் ஆட்சியில் செல்வம் பெருகியது; மத நல்லிணக்கம் நிலவியது. படை வீரர்களில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் இருந்தனர். முதல் ஆங்லோ –சிக் போரில் கிழக்கிந்திய கம்பெனி வஞ்சகமாக வகுத்திருந்த ஒப்பந்தங்கள்- (லாகூர், பைரோவல் ஒப்பந்தங்கள்) எங்கள் பரந்த அரசைச் சுருக்கின.

கதை சமைக்கும் விதிகள்

நண்பனின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக ஊட்டி வந்திருந்தான் பெத்து. நண்பன் அந்த வட்டார அரசு போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரி. இவனோடு ஒரு காலத்தில் வங்கியில் வேலை செய்திருந்தான். பல வருடங்களாக வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளனாகியிருந்தான். ஆளுங்கட்சி உறுப்பினன். இந்த விழாவையே அந்தக் கட்சியின் இலக்கிய அணிதான் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதை இவர்கள் இருவருக்கும் தெரிந்த, ஒன்றாக வேலை செய்த  பெண்ணைப் பற்றியது. அவளைப்பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்த ஒரு விஷயத்தை வைத்து ஒரு கதை எழுதியிருந்தான் நண்பன். ஏன் எழுதினான் என்று கேட்டதற்குத்தான் இந்த ரகளை. மனைவியின் ஊரான அம்பிளிக்கையில் குடும்பத்தை வைத்திருந்தான்.

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19

This entry is part 19 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

சீமாப் அக்பராபாதி

This entry is part 4 of 12 in the series கவிதை காண்பது

புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).

மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்!

உலகில் மிகவும் அதிகமாக அகற்றப்படும் திடப்பொருளாகவும் , உலகின் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கும் மணலின் பயன்பாடு மொத்தத்தில் முறைப்படுத்தப் படாமலேயே இருந்து வருகிறது. இதனால் கடந்த பல நூறு ஆயிரம் ஆண்டுகளில் நிதானமான புவியியல் நடைமுறைகளால் உருவாக்கப்பட்டு வந்துள்ள மணல் வளம், இன்று ஈடு செய்து கொள்ளப் பட முடியாத அளவில் உற்பத்தி விகிதத்தை விட மிக அதிக வேகத்தில் நம்மால் நுகரப் பட்டு வருகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அனாமதேயமாக காப்பி குடித்தல்

என் நினைவின் ஓரங்களில்
காப்பியின் பழுப்பு
சிற்றலையாய் மோதுகிறது.
சொகுசான தூக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் நான்
முழுவதும் விழிப்பதை சில நொடிகள் தள்ளிப் போட முயற்சிக்கிறேன்.
‘ காபி ‘ என்றவள் புன்னகைக்கும் குரலில் கேட்கிறாள்.

இனத் தொடர்ச்சி எனும் இச்சை

அச்சமயம் முன்னர் வந்த பெருங்காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்களை விரட்டும். இதில் நாங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்- முன்னர் தானியம் கொத்திய பறவைகள் இன்று நொறுக்குத்தீனி கேட்கின்றன. சில இயல்பாகவே தன் பசியை மட்டும் தீர்த்துக் கொள்கின்றன. சில உணவிடுவோருக்கும், உணவை உண்ண வரும் போட்டியாளருக்கும் ஒரே மாதிரி பயப்படுகின்றன. தான் மட்டுமே சாப்பிட்டாலும், தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு உணவு கிடைக்கவில்லையெனில் பகையைப் போராடி துரத்தும் இன உணர்வும் இருக்கிறது.