வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.
Tag: ராமகிருஷ்ணன்
வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்
அம்பை தன் கதைகளின் வழியே பெண்களுடன் தான் அதிகம் உரையாடுகிறார். அவர்களை தங்கள் வாழ்க்கை ஏன் இத்தனை சிக்கலாக உள்ளது என்பதைப் பற்றி யோசிக்கத் தூண்டுகிறார். பண்பாட்டின் பெயரால் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறார்
