“பான்சுரிக்குப்பின் வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி

ஹம்ஸத்வனியில் நான் இயற்றிய ஒரு பான்சுரி பாடல் என் மனதுக்கு நெருக்கமானது. அது தவிர பூபாளி, கேதார் போன்ற ராகங்கள் எனக்குப் பிடிக்கும். இந்திய இசையை எழுதிவைத்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பதால், ஸ்வரக் கோவையை மட்டும்கொண்டு நான் ‘தான்’ களையும், ஆலாபனையையும் கற்பனை மூலம் சேர்ப்பேன். என் மாணவர்களுக்கும் அதையே சொல்வேன். இசை என்பது நீங்கள் வைத்திருக்கும் காகிதத்தில் இல்லை. அது ஒரு வழிகாட்டி மட்டுமே. நீங்கள்தான் அதில் பயணம் செய்ய வேண்டும். இசை வேறெங்கோ உள்ளது.