ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்

ஒவ்வொரு நூறடிக்கும் உலகம் மாறுகிறது. நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என அறியாத போதிலும், எப்படித் தேட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நிலா செழிப்பாக, இரவுக் காற்று அவ்வளவு தூய்மையாக, உண்டுவிடலாம் போல. கவிதை ஒன்றுதான் மாசுபடாது இருக்கிறது. அது விளையாட்டின் பகுதியன்று. உலகம் உயிர்ப்போடு இருக்கிறது; வாழ்பவைகளுக்குத் “ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்”

பார்செலோனாவில் பொலான்யோ

பார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் சிறப்பு ஆவணக்காட்சி நடத்தியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டின் மார்ச் ஐந்தாம் தேதி முதல் ஜூன் “பார்செலோனாவில் பொலான்யோ”

நிறமும் நடிப்பும்

எந்தெந்த நடிகர்கள் முகத்தை வெள்ளையடிக்கும் களிம்புகளைப் பரிந்துரை செய்து கொண்டே, “எல்லா நிறமும் ஒன்றே” என்று முழக்கமும் இடுகிறார்கள் என்னும் பட்டியலை இங்கே காணலாம். “கருப்பு நிறம், வெள்ளை நிறம் எல்லாம் ஓர் உயிர்!” என சொல்பவர்களால் எப்படி முகப்பூச்சுப் பொருட்களை உபயோகிக்கவும் சொல்லமுடிகிறது என்னும் வினாவை எழுப்புகிறது “நிறமும் நடிப்பும்”

க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]

சூஸன் சாண்டாக், பதினைந்தாம் நூற்றாண்டில் மேக நோயைக் (ஸிபிலிஸ்) குறிக்கவிருந்த பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார்- இங்கிலிஷ்காரர்கள் அதை “ஃப்ரெஞ்சு அம்மை,” என்று சொல்கையில், ”பாரி நகரத்தார்களுக்கு (பாரிஸ்) அது “மார்பஸ் ஜெர்மானிகஸ்”, நேபிள்ஸ் நகரத்தில் அது ஃப்லாரெண்டைனியர்களின் நோய், ஜப்பானியர்களுக்கு அது சீன நோய்.” என்று எழுதினார். நாம் எல்லாரும் கொள்ளை நோய்கள் வெகு தொலைவிலிருந்து நமக்கு (அழையா) விருந்தாளியாக வருகின்றன, அவை நம்முடைய வியாதிகள் இல்லை, ஒரு போதும் நம்முடைய பிழையால் வந்தவையும் இல்லை, என்று நினைக்க விரும்புகிறோம்.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 4 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 3 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.

வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்

அம்பை தன் கதைகளின் வழியே பெண்களுடன் தான் அதிகம் உரையாடுகிறார். அவர்களை தங்கள் வாழ்க்கை ஏன் இத்தனை சிக்கலாக உள்ளது என்பதைப் பற்றி யோசிக்கத் தூண்டுகிறார். பண்பாட்டின் பெயரால் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறார்

அம்பை – ஒரு எதிர் அணுக்க மதிப்பீடு

அம்பை எழுத்தாளர் என்பதைத் தாண்டி களத்தில் இயங்கும் ஒரு பெண்ணியலாளர். அவரது ‘ஸ்பாரோ’ அமைப்பு பெண் குரல்களை அனுபவங்களை ஆவணப்படுத்தும் செயலை பல்லாண்டுகளாக செய்து வருகிறது. அதில் அவருக்கு எவ்வித கோட்பாட்டு சார்பும் இல்லை. இதனால் ஸ்பாரோ அமைப்பின் ஆவண சேகரிப்பு இந்திய பெண்களைக் குறித்து அறிந்திட சிறப்பான தரவு பொக்கிஷம். குறிப்பாக அவர்கள் வெளியிட்டுள்ள, அதிகம் வெளியே தெரியாத விடுதலைப் போராட்ட பெண் மாந்தர் (அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது விடுதலை போராட்டத் தியாகிகளின் மனைவியர், சகோதரிகளாக இருக்கலாம்), அறிவியல் துறையில் பெண்கள், இலக்கியத்தில், நிகழ் கலைகளில், கிராம கலைகளில் பெண்கள், குடும்பங்களில் உள்ள பெண்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள

‘உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்’ – பேட்டி

ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் , ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு , விளக்கத்திற்கு உட்படுத்தி கட்டிபோடுகிறது. இது எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் என்றும் என்னிடம் எதிர்ப்புணர்வையே உண்டாக்குகின்றன. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து எழுதுவதால் ஒருவித மொழி பிறக்கலாம். சில உதாரணங்களை சொல்கிறேன். என் ஆராய்ச்சிக்காக நான் பல பெண்களின் கதைகளை படிக்க நேர்ந்தது. ஆண்களுடையதையும் படிக்க நேர்ந்தது. சில விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தன.நிறம், வடிவம் போன்ற விஷயங்கள். ஆண்களை விவரிக்கும் போது அவர்களுக்கான உபமானங்கள் தேக்கு மரம், உலக்கை, பாறாங்கல் போன்றவை இருந்தன. ஆண்கள் எழுத்தில் அதேசமயம் பெண்கள், கொடிகள், மிரளும் மான், பூக்கள் பழங்கள் என்று சித்தரிக்கப்பட்டனர். வேர்கள் ஆழப் புதைந்தும் கனத்துடன் கூடியம் உள்ள பொருட்கள் ஆண்களை குறித்தன .எடை இல்லாமல் மற்றவற்றை சார்ந்து, மற்றவர்களுக்கு களிப்பும் சுகத்தையும் தரும் பொருட்கள் பெண்களுக்கு உவமை ஆகின. நிறத்தை பொறுத்தவரை சிவந்த அல்லது சந்தன நிறம் உடைய பெண் தான் அழகு என்று சொல்லப்பட்டாள் . “அவள் கறுப்பு ஆனாலும் அழகு” என்ற விவரணை

பாமாவின் கருக்கு

This entry is part 14 of 72 in the series நூறு நூல்கள்

பனங்கருக்கால் அறுபடுவது போல் வாழ்க்கை அமைந்துவிடும்போது அது வாழ்க்கையின் குறியீடாகிவிடுவது இயல்புதான். ‘கருக்கு’ புத்தகத்தைப் படிப்பதற்கு முன் கருக்கு என்ற சொல் புதுக் கருக்கு என்று நாம் கூறும் பொலிவைக் குறிக்கிறது அல்லது விடிவதற்கு முன் உள்ள கருக்கலைக் குறிக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். பனங்கருக்கைத் தொட்டிருந்தால் தானே அது இரு பக்கமும் ரம்பம் போல் அறுக்கும் கத்தி போன்றது என்று தெரியும்? பிறகு ஒரு முறை கிராமம் ஒன்றிற்குப் போனபோது பனங்கருக்கைத் தொட்டுப் பார்த்தேன். சட்டென்று விரலைக் கீறி விட்டது

வண்டல் படிய ஓடும் நதி

அன்று சிறு பத்திரிகைகளுடைய மிகச் சிறு தொகை சந்தாவைக் கட்ட ஓராயிரம் தமிழர்கள் கூடத் தயாராக இல்லை. இன்று திரும்பிப் பார்க்கையில், நாங்கள் என்ன செய்யவென்று அதைத் துவங்கி நடத்தினோம் என்ற வியப்புதான் எஞ்சுகிறது.
அதை நடத்தியதில் எங்களுக்குக் கிட்டிய நன்மைகளில் தமிழ் நாட்டின் பல இலக்கியகர்த்தாக்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிய வந்ததைச் சொல்லலாம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களின் தன்மைகளை இந்தப் பத்திரிகையின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று சொல்ல எனக்கு ஆசைதான். ஆனால் அப்படி ஏதும் அற்புதமாக நடக்கவில்லை.
என்ன இயலாது என்று வேண்டுமானால் தெரிந்து கொண்டோம். என்ன கைவசம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம். அவற்றை எப்படி அடைவது என்பதற்கு அப்பத்திரிகை அனுபவம் உதவவில்லை. ஒரு சிலருக்கு இங்கிருந்து தம் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர அந்த அனுபவம் உதவி இருக்கலாம். அது பற்றி அவர்கள் சொல்வதுதான் முறையாக, நம்பகமானதாக இருக்கும்.

என் நோக்கில் சுரா

‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார்.

நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை

ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும் ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் …

மனத்துக்கினியவள்

நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொம்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் ஆனந்தவிகடனில் 1961இல் வெளிவந்துகொண்டிருந்தது…

உரக்க ஒலித்த பெண் குரல்

1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”

ஊர் வேண்டேன்…

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?

அம்பை – குறிப்புகள்

தமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்

ஆனியெஸ் வர்தா

திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.

பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா

This entry is part 15 of 72 in the series நூறு நூல்கள்

பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.

ஜோஆன் டிடியன்

ஜோஆன் டிடியன் (Joan Didion) என்னும் எழுத்தாளரை, திரைக்கதாசிரியரை, பத்தியாளரை உங்களுக்குத் தெரியுமா? கீழே ஒரு சுருக் அறிமுகம்:

ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்

அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது. அந்த காலகட்டத்தில் நான்  மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக …

கஞ்சனம்

நய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்?” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.

நய்பாலும் நோபலும்

அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; கண்டனத்துக்குரியவை என்று சில; குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில். ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.

அம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்

சமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார். அவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.

மரிலின் ராபின்சனின் 'ஹவுஸ்கீப்பிங்' அல்லது வீடு பேறடைதல்

அம்மாவின் தற்கொலை ரூத் மற்றும் அவளது சகோதரி லூசில்லில் அக மையத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. நாவல் அடுத்தடுத்த கட்டங்களை அடையும்போது இவர்கள் இருவரும் தம் உள்ளத்தின் வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள தமக்கேற்ற  வெவ்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். ஒரு வகையில், இழப்பின் மீதான தியானமாய் ‘ஹவுஸ்கீப்பிங்’கை நினைத்துக் கொள்ளலாம், அதிலும் குறிப்பாய், அம்மாவின் இழப்பு மீதான தியானம், என்று. மேற்குலக இலக்கிய மரபு அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிளவை (‘கிங் லியர்’), மகனுக்கு அம்மாவுக்கும் இடையிலான பேதத்தை (‘ஹாம்லட்’/ ‘ஈடிபஸ்’) மகத்தான துன்பியல் நாடகங்களாகத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது என்றாலும், “அம்மா-மகள் நேசம் மற்றும் ஆனந்தத்துக்கு, நிலையான அங்கீகாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை”, என்று (அட்ரியன் ரிச் சொற்களில்) சொல்லலாம் என்பதால் ‘ஹவுஸ்கீப்பிங்’கின் இந்தக் கூறு விமரிசகர்களால் முன்னோடியான ஒன்றாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்

சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.

இருப்பது, அல்லது இல்லாதிருப்பது

இந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.

பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்” பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால் ” உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கை” மாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்” ஆகலாம், ஊறுகாய்கள் “முதலைகள் போல் உறங்க”லாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமை” மானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்” போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா?

பிறந்த நாள்

“இன்று மலையாளச் சிறுகதைகள் ஆங்கில மொழிக்கு மட்டுமின்றி பல உலக மொழிகளுக்கும் போட்டியாக இருக்கின்றன. ஏன் அவைகளை நீங்கள் படிக்கக் கூடாது?” என்றேன்.

ஓ, அவர்கள் சிலவற்றைப் படித்திருக்கின்றனர்.

“பெரும்பான்மையான சிறுகதைகள் வறுமையைப் பற்றிப் பேசுகின்றன. ஏன் அது மாதிரியாக எழுதவேண்டும்?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“எல்லாக் கதைகளையும் படிக்கும் ஒருவர் உலகில் ஏதோ தவறாக உள்ளது என்று தான் நினைக்க முடியும்,” தங்க பிரேம் அணிந்த நாகரிகமான இளைஞன் சொன்னான்.

இந்த உலகில் என்ன தவறு இருக்கிறது?பெற்றோர்கள் மாதாமாதம் பணம் அனுப்புகின்றனர். அதை வைத்துக் கொண்டு இளையவர்கள் படிப்பது, சிகரெட், டீ,காப்பி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்குரா பவுடர், வாஸ்லைன், விலையுயர்வான ஆடைகள், நல்ல சாப்பாடு, மேகவெட்டை போன்றவைகளுக்கு செலவழிக்கின்றனர். அவர்கள் தான் எதிர்கால சந்ததியினர். எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! இந்த உலகத்தில் என்ன தவறு இருக்கிறது?

க்ரேஸ் பேலி – பெரும் கலக்கங்கள்

அவர் புழங்கிய ஆர்வலர் வட்டங்களில், அவர் சந்தித்திருந்த பெண்ணியவாதிகளில் சில இளைஞர்களைப் போல அல்லாது, பேலி தாய் என்னும் நிலையை நசுக்கும் அமைப்பாக ஒரு போதும் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்பு என்பதை அவர் ஒரு வகை வேலை என்று புரிந்து கொண்டிருந்தார் – சலிப்பூட்டுவது, ஓய்ச்சலைக் கொணர்வது, நன்றியேதும் கொணராதது, இதை அவருடைய பல கதைகள் வெளிப்படுத்துகின்றன….இருப்பினும், குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கொணர்ந்த உணர்ச்சிகளையும், மனத் தெளிவுகளையும் அவர் பெரிதும் விரும்பினார். அவருடைய புனைவுகளில், குழந்தை வளர்ப்பின் எழிலையும், சாதாரணத் தன்மையையும் எல்லாம் கவனித்தபடியே, அதைப் பெருமையுள்ளதாகவே சித்திரித்தார். தாய் எனும் நிலை, பேலியைப் பொறுத்து, ஒரு கலவையான ஆசீர்வதிப்பு, மகிழ்ச்சியும் பெரும் சினமும் துக்கமும் கலந்து கிட்டும் ஒரு அனுபவம். அது உலக வாழ்வில் குறைகள் கொண்ட, ஆனால் இறுதியில் பயனளிக்கும் இன்னொரு வழி.

புனைதலும் கலைதலும்

தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…

ஜோசியர்கள், அகதிகள் & காந்தி

ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”

தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது

எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.

இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்

ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது

ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி

கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று “ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி”

அசோகமித்திரன் அஞ்சலி

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி

வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார்…

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது

பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!

‘தமிழ்நாட்டில் காந்தி’ – தி. சே. சௌ. ராஜன்

அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செயது 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன்.

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.