ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)

அவர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவருடைய முதுகுப் பை கனமாக இருக்கும், அதுவும் அவர் அரிசியோ, சோயா பருப்போ வாங்கி இருந்தால் சுமக்க முடியாத அளவு கூட இருக்கலாம் என்று தாரா எச்சரித்திருந்தாள். சில வாரங்களில் அவர் தடுமாறி விழுந்து விடுவார் என்று கூட ஆமரில்லிஸ் அச்சப்பட்டிருந்தாள். அதையும் விடக் கவலை தருவதாக ஒன்று இருந்தது, சமீபத்தில் அவ்வப்போது அவருக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிபடாததாக ஆகியிருந்தது. ஒரு வாரம் நிலவறை ரயில் நிலையத்திலிருந்து தன் அடுக்ககத்துக்கு வரும்போது அவர் வழி தவறித் தொலைந்து போயிருந்தார்

கிளைக்கு உயரும் மலர்

This entry is part 10 of 8 in the series ஹைக்கூ

தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.

ஆமரில்லிஸ் – முதல் பகுதி

மாறாக, தாரா திருமணம் செய்து கொள்வதில் சற்றும் ஈடுபாடு கொள்ளவில்லை. பலரோடு பாலுறவு கொள்வது என்பது வெளிப்படையாகவே மனிதர்களின் இயல்பாக இருக்கையில், திருமணம் செய்வது என்பது தெளிவாக அதற்கு எதிரானது என்பதால் அது ஒரு மரித்துப் போன கருத்து என்று அவள் சொன்னாள். ஆமரில்லிஸின் மரியாதைக்குரிய வயதை எட்டும்போது அவள் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பிப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது அவள் இருபத்தி ஐந்து வயதுக்காரி, ஜாம்பியாவுக்குப் பயணம் போய் அங்கு விருந்தினருக்கான விடுதி ஒன்றில் குடியிருப்பதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். (இதைச் சொன்னபடி) அவள் கண்ணடித்தாள். 

சாமுண்டியின் குழி

அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை

தோழமை 

“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில்  கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.  

அறுந்த பட்டம்

This entry is part 9 of 8 in the series ஹைக்கூ

காற்றாடியும் தன்னைச் சுற்றியிருக்கும் காற்றாலும், தான் இணைக்கப்பட்டிருக்கும் நூலாலும் உயரே பறக்கிறது. காற்றின் விசையால் உயர்கிறது, பறக்கிறது. நூலின் இணைப்பால் நிலைத்து நிற்கிறது. காற்றாடிக்கு நூலுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகையில் காற்றின் விசையால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் வீழ்கிறது.

மானுடப் பயணம்

ஊமையாகக் கண்ணால் பேசும் நிறைமாத கர்ப்பிணியான அவனுடைய இல்லாள். அவள் நினைவு வந்தால் போதும் இதயக் கதவு திறந்து கொண்டு அன்பு பெருக்கெடுக்கிறது. எவ்வாறு அவர்களையெல்லாம் விட்டு அவன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டான்? இந்த விடுதலை ஹோமத்தில் தன்னைத்தானே ஒரு சமித்தாக சமர்ப்பித்துக் கொண்டானா? துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் மனித உடல்கள் எத்தனை நேரம் தான் எதிர்க்க முடியும். அவனுடைய இதயத்தில் மெல்லிய திகில் தோன்றத் தொடங்கியது.

பூவன்பழம்

அவள் இடுப்பளவு உயரத்தில் தான் அந்தச் சுவர் இருந்தது. தோள்களைச் சுற்றிக் கம்பளி அணிந்திருந்தாள். அவளது அழகான நீண்ட கூந்தலின் ஒரு கற்றை முடி முகத்தில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது. தனக்கான சொந்தம் என்று இந்த உலகில் யாரையும் சொல்லிக் கொள்ள இயலாத அந்தப் பெண்மணியிடம், கட்டுக்கடங்காமல்  தங்களால் நடந்து  கொள்ள முடியுமென்று அவைகளுக்குத் தெரியும்.

இருளின் குதிரைவீரர்கள் – ஸ்டீபன் கிரேன்

“கசப்பு- கசப்பாக இருக்கிறது
ஆனால் பிடித்திருக்கிறது
கசப்பாக இருப்பதாலும்,
எனது இதயம் என்பதாலும்.”

நடவுப் பாடல்

This entry is part 8 of 8 in the series ஹைக்கூ

ஹஜிமே என்னும் இந்தச் சொல் ஜப்பானிய உரையாடலில் இடம்பெறும். ‘முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்கிறேன்’ என்னும் சொற்றொடர் ஜப்பானிய உரையாடல்களில் ஒருவரை முதலில் சந்திக்கும்போது அவசியம் சொல்லப்படும் வாக்கியம். ஜப்பானிய மொழியில் ‘ஹஜிமேமாஷிதா’.

படிக்கட்டு

வசதி படைத்த சமூகத்தினர் சிலர் ,எங்கள் அடிமை நிலை குறித்து வெளிப்படையாகப் புலம்பி அலட்டிக் கொண்டிருந்தபோதும் எங்களைப்போன்ற புத்திசாலிகளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. மாதம் பிறந்ததும், முதல் தேதியன்று சம்பளக்கவரோடு நான் வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பேரரசனைப் போன்ற ஓர் உணர்வே எனக்கு ஏற்படும்.



டி எஸ் எலியட்டின் – The Wasteland – ஓர் கண்ணோட்டம்

அவள் அமர்ந்த இருக்கை, மெருகேற்றிய சிம்மாசனத்தைப்போல்
மின்னியது பளிங்கில், நெளியும் கொடி சூழ் கண்ணாடி
விளிம்பிலிருந்து இரண்டு குபிட் சிசுக்கள் எட்டி பார்க்க
ஏழு இதழ் மெழுகு விளக்கின் ஒளியை ரெட்டித்து
அவள் அணிந்த ஆபரணங்களுக்கு ஒத்த,
மேஜையில் வீசியது விளக்கின் ஒளியை.

காற்றில் உறை மனிதன்

இப்போது அது
பணிவான நம் தீவை மூழ்கடிக்கிறது.
விளக்குகள் ஒளிரும் சிறு துறைமுகங்கள்
கப்பல்கள், அடுக்ககங்கள், மின்தூக்கிகள்,
ஊசிக் கோபுரங்கள், அஸ்திவாரங்கள்
நிறைந்த சொத்தை வான்வெளி
எல்லாவற்றையும்
அவனது இறுதி தொடுவானத்தோடு
ஒரு மாசில்லா முடிவிற்கு அடித்து சென்றது.

வாளைத் துறந்த சாமுராய்

This entry is part 7 of 8 in the series ஹைக்கூ

ஒரு சாமுராய்க்கு முக்கியம் வாள். வாளைத் தீட்டுவதும், கூர் பார்ப்பதும், இமைக்கும் நேரத்தில் அதை உறையிலிருந்து எடுத்து வீசுவதும், பின்னர் உறையைக் கண்ணால் பார்க்காமல் கைகளால் உணர்ந்து வாளை மீண்டும் உறையில் செருகுவதும், சாமுராய் மேற்கொள்ளும் பயிற்சிகள். வாளின் திறனைப் பின்னிறுத்தி அறிவால் ஆளுமையை நிரூபித்த சாமுராய் உண்டென்றாலும், அது விதிவிலக்கு.

விளையாட்டுப் பொருள்கள்

குழந்தையின் விளையாட்டும் அதனால் அவன் அடையும் சந்தோஷமும் தகப்பனுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதோ? ஆகவே ‘இவனாவது கவலைகளில்லாது தனது குழந்தைப் பருவத்தைக் கழிக்கட்டும்,’ எனும் அர்த்தம் நிறைந்த புன்னகைதான் எனக்கூட எண்ணத் தோன்றுகிறது.

மற்றுமோர் அற்புதமான விஷயம் – பகுதி -2

இரவில் ஜன்னலருகே அவள் அமர்ந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. தன் வாழ்வில் எதிலிருந்தும் இத்தனை பிரிக்கப்பட்டதாக அவள் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. தன் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் முயற்சியாக, க்ரே வில்லியமுடைய அறையில் மேல் புற மர வேலைப்பாட்டின் கீழே சுவரில் சில சித்திரப் பாணிகளை அச்சிட்டுக் கொண்டிருந்தார். கோதுமையும், சோளப் பூக்களும் கொண்ட துவக்க கால அமெரிக்க வரைவு ஒன்றை அவர் கண்டு பிடித்திருந்தார்.

யமுனை சீராகப் பாய்கிறது

“ரவி, உங்களுடைய அந்த நேர்மையான கோபத்தைப் பார்த்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு விமர்சகர், ஒரு கவிஞர். வாழ்க்கையை நீதி ,அநீதி என்று பிரித்துப் பார்ப்பீர்கள். அவசியமற்ற மதிப்புகளை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பீர்கள். நான் விமர்சகன் இல்லை. வாழ்க்கையை நான் அப்படியே எதிர் கொள்வேன் ; அதனோடு ஒட்டிக் கொள்வேன் ; நான்தான் வாழ்க்கை. ரவி, உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்”

என் நண்பன்

“ஊஹூம். பயமாயில்ல. ஆனா, என்னவோ போல இருக்கு. இத்தனை பெரிய மணற்பாங்கு. தூரத்தில் அவ்வளோ பெரிய சமுத்திரம். இப்படி எல்லையே இல்லாமல் இருக்குதேன்னு பார்த்தா மலைப்பா இருக்கு. இத்தனை பெரிய கடவுளின் படைப்பில் நான் எத்தனை அல்பமான சின்னவள்னு தோணுது. இதையெல்லாம் படைச்ச கடவுள் எத்தனை உயர்ந்தவர்னு தோணுது. அவரை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணுது” என்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெய் மறந்திருந்தாள்.   

காகமும் அழகு

This entry is part 6 of 8 in the series ஹைக்கூ

வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.

அந்த முக்கிய நபர்

“இந்த விசிட்டிங் கார்டை அவரிடம் காட்டுங்கள்” பையிலிருந்து எடுத்து அவனிடம் தந்தார். பளபளப்பான தாளில் அழகாக இருந்த அந்தக் கார்டை, முக்கிய நபர் ராமன் மிக நுணுக்கமாகப் பார்த்தான். அந்தக் கார்டோடு சேர்த்து என்ன தரவேண்டும் என்பதை அறியாதவர் அந்த மனிதர் என்பது வெளிப்படை.

மற்றுமோர் அற்புதமான விஷயம்

அவளும் பென்னியும் குழந்தை பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில், கடைகளுக்குப் போய் மேலும் வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். கடைசி நிமிடம் வரை இவற்றை ஒத்திப் போடாமலிருந்ததற்கு அவள் சந்தோஷம் கொண்டாள், ஏனெனில் ஏதும் நடக்காது சாதாரணமாக முன்னேறிய கர்ப்பகாலத்தில் ஒன்பதாவது மாதம் துவங்கிய போது அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிறகு அவள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாள். தான், க்ரே மேலும் பிறக்காத அந்தக் குழந்தை மட்டும் இருக்கும் தனிமையுணர்வை அவள் ரசித்திருந்தாள்,

எல்லையற்றவன்

வறண்ட நிலத்தை மழை நீர் நனைத்தது போல கிருஷ்ணனின் சொற்கள் ராதையின் மனத்தை பக்தியால் நிறைத்தன. முன்பு பாடிய இனிய கீதத்தை மீண்டும் கேட்டாள். வம்சிமோகன் வேணுகானத்தை மனத்துக்கினிமையாக இசைத்தான். இன்னிசை மழையில் நனைந்து அடித்துச் செல்லப்பட்ட ராதைக்கு நேரம் போனதே தெரியவில்லை. 

புறாவின் அழைப்பு

This entry is part 3 of 8 in the series ஹைக்கூ

வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.

2025 பென் ஹீனி விருதை வென்ற டாம் பாலின் கவிதை

மேலும் அங்கிருந்தவற்றை
இசைக்கும் நுகர்ப் பெட்டிகள் எனலாம்;
அலங்காரமான பண்டையப் பொருட்கள் எனலாம்.
ஆனால் அவை அனைத்தும் வீண் பெரும் சிக்கல்களே,
இறந்த ஆன்மாவின் பெட்டகங்கள்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 8 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

வெள்ளைக் குழந்தை

அம்மாவின் குரல் தன் காதுகளில் எதிரொலிப்பது போல அவன் உணர்ந்தான்.எழுந்து உட்கார்ந்து காதுகளைத் தேய்த்துக் கொண்டு விட்டு மீண்டும் படுத்தான். வீடு, சுற்றுப்புறம், மாஸ்டர், எஜமானி என்று அவர்கள் மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தனர். மனம் போராடிக் கொண்டிருந்தது. எப்படித் தப்பிப்பது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் கிடைக்கவில்லை.

ஒரு வாட்ஸாப் மொழிபெயர்ப்பு : ஷெல்லியின் “Autumn: A Dirge”

ஆமாம், குளிர்காலம் ஆரம்பித்த உடன் வருடம் செத்துவிடுகிறது. இயற்கை மாறுகிறது – வீழ்கிறது, வெளிர்கிறது, உதிர்கிறது. வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் வாழ்வாகவும் குளிர்காலத்தைச் சாவாகவும் கவிதை வரையறுக்கிறது.

மொழி பெயர்ப்புக் கவிதைகள்- கு அழகர்சாமி

தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,

திறந்து விடு

வெறும் காலோடு இருவரும்தான் ஒன்றாக ஓடினார்கள். ஓடும்போது சகினாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அதை எடுக்க அவன் குனிந்தபோது, அவள் அலறினாள், “அப்பா, போகட்டும் விடு!” ஆனால் அவன் துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். அந்த நினைவு வந்தவுடன், தன்னுடைய மேலங்கியின் பையில் கையை விட்டு அதிலிருந்த துப்பட்டாவை வெளியில் எடுத்தான். துப்பட்டா அவனிடம்தான் இருக்கிறது — ஆனால் சகினா எங்கே?

சுவரில் தொங்கிய படம்

“என்னடி? என்னடி அங்கே வந்து வேஷம் போடுறே? கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சொன்னாலும் அங்க வந்து அந்த அழுகை அழுவறே? இந்த சான்ஸ் மட்டும் கை நழுவிப் போயிருந்தா, அங்கேயே உன்னை வெட்டிக் கூறு போட்டிருப்பேன்” என்று உறுமியவன், அவள் தலை முடியைப் பிடித்து பலமாகப் பின்னால் இழுத்தான்.  

அந்தக் கீழ்நிலைப் பெண் பணியாளர்

அவள் உடலுக்குச் சாப்பாடு தேவையாக இருந்தது; ஆனால் வேறு ஏதோவும் தேவையாக இருந்தது —அன்பு, வாத்சல்யம்— மனதுக்கும், உடலுக்கும் தேவைப்பட்டன. அந்தப் பாட்டியிடமிருந்து அவையும் அவளுக்குக் கிடைத்தன. அவளுடைய இடத்தில் வேறொருவர் இருந்தால், அந்த நிறைவேற்றத்தின் விளைவுகள் முழுமையாக வெறுக்கத் தக்கவை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பசியால் வாடும் போது, ஒருவர் விஷம் கலந்த உணவு தந்தால் அதைச் சாப்பிட்டு இறப்பது பரவாயில்லை.

இச்சாமதி – 1

This entry is part 1 of 1 in the series இச்சாமதி

திலு மொட்டைமாடியில் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு முப்பது வயதாகிவிட்டது. அவளைப் பொருத்தவரையில், கல்யாணம், கணவன் எல்லாம் நிறைவேறாத கனவு. இப்போது அவளால் நம்பமுடியவில்லை. அவளுக்கு உண்மையாலுமே கல்யாணமாகப் போகிறதா? அவள் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாளா? தங்கச்சிகளோடா?

டாம் மோரேஸ்: இரண்டு கவிதைகளும் ஒரு குறிப்பும்

தாயைக்குறித்த முரண் உணர்வுகளுக்கிடையே அடுத்த கவிதை ஊடுருவிச் செல்கிறது. மோரேஸின் அன்னை பெரில் டிமோண்டே தீவிரமான ரோமன் கத்தோலிக்க மதப்பற்றுள்ளவர் என்பதையும். மோரேஸின் இளம்பருவத்திலேயே மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் கருத்தில் கொண்டால் கவிதையின் பின்புலம் நமக்குத் தெளிவாகி விடும். அம்மாவின் பிரிவால் கனிவுக்கு உட்படும் மகன் அக்கனிவை மதநிந்தையால் அடியறுக்க முயல்கிறான். அதை உணர்ந்து வெட்கப்படவும் செய்கிறான்.

உண்மை கஃபே

அப்போது நான் மறுபடி என்னுள் வந்து விட்டேன், பந்தைச் சரியான நேரத்தில் பிடித்தேன், அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்தேன், சில எட்டுகள் எடுத்துப் பின்னே போய், ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன், அவனுடைய உருவத்தின் விளிம்புகள் உறுதியாகத் தெளிவாக இருக்கின்றன, அவன் பூமியிலிருந்து விழுந்து விடமாட்டான் என்று சொன்னேன். 

அஸ்வத்தாமனின் கோபம்

“எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!”

நியூயார்க் ஓணம்

ஒன்றும் இணங்காமலிருந்தாலும் இடையில்
சமரசம் செய்பவன் கொழுத்திடுவான்
சொந்தமாய் ஒருவரைக் கொண்டு சேர்த்தே
ஒருவன் இரண்டாமவனைப் புறந் தள்ளுவான்

சோற்றுப் பொட்டலம்

பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.

கவரப்பட்ட குழந்தை 

ஆடித் திரியும் ஆறு
மேலிருக்கும் மலையிலிருந்து
இறங்கி வரும் பாதையெல்லாம்
குட்டி நட்சத்திரமும் குளிக்க முடியாத
குட்டைகளாய் தேங்கும்.
அங்கு
பெரும் தூக்கத்திலிருக்கும்
மீன்களை பிடித்து
கலக்கமுறும் கனவுகள் உண்டாக
காதில் மந்திரங்கள் ஓதுவோம்.

வீரனாக மாறிய பேடி

துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான்

தேவாலயங்களின் நகரம்

“எங்களுக்குனு சில பழக்கம், கொள்கை இருக்கு சுற்று வட்டார ஊரில் இருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கலாம். எங்க இடத்தை பற்றி நிறைய எழுதி இருக்காங்க. ஒரு முறை, டிவியில கூட நாலு நிமிடம் வந்தது. மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி, “தேவாலயங்களின் நகரம்” அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.   

“இந்த மாதிரி ஒரு இடத்தில நான் வாழணும் ன்னா, எனக்கே எனக்குன்னு ஒரு இடம் வேணும்”   செசீலியா சொன்னாள்.

பிரபஞ்சத்தின் உலகளாவிய சுடர் வேமனா, கேள்!

தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக் கொள்பவர் உண்மையில் அறிவாளி. எல்லாம் தெரியும் என்று கூறிக் கொள்பவர் கௌரவம் பெறமுடியாமல் நிந்தைக்கு ஆளாவர். மௌனமாக இருந்து அனைத்தையும் அறிபவரே உத்தம யோகி.

கீசக வதம்

இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவளை அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள்.

ஏ.ஏ. மில்ன்: பூ என்ற கரடியை உலகிற்கு பரிசாக வழங்கியவன்

பூ கதைகள் வெறும் பழைய நினைவுகளே என்று எண்ணிவிட முடியாது. அவை நமக்கு மெதுவாக நினைவூட்டுகின்றன — சற்று நின்று பார்க்க, சிரிக்க, சுற்றுப்புறத்தைக் கவனிக்க, குழந்தைப் பார்வையில் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று. நூல்களில், ஏ.ஏ. மில்ன் உலகிற்கு மூளையற்ற ஒரு கரடியைக் கொடுத்தார் — ஆனால் அதன் மூலம், அந்த கரடியால் உலகம் நிறைந்தது இதயத்துடன்!

போட்டியாளர்கள்

எப்படி அவளை அடிபணிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் வயதுடைய பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் பணிந்து விடுவார்கள். இவள் மட்டும்தான் எதிர்ப்புக் காட்டுகிறவளாகத் தெரிகிறாள். அவர்களிடையே குடும்பத் தகராறு இருந்த போதிலும் அவன் வெளிப்படையாக அவளை அவமதித்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் யாரையுமே அவன் அவமதித்ததில்லை.

 அது நமக்கான தூக்கு மேடை

இருட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.’ வம்சம் வளர வேண்டும் என்ற எண்ணத்திலானது எங்கள் உறவு. அந்த உறவு வேர்கள் என்னோடு மட்டும் தொடர்வதில், முடிவதில் விருப்பம் காட்டி வந்தவரிடமிருந்து இந்தக் கொடுமைக்காரன் என்னைப் பிரித்து விட்டான். உறவின் உச்ச நிலையில் நான் கத்தியதும், ஓலமிட்டதும் நிஜம்தான்.

மொழிபெயர்ப்பு- சில ஒப்புமைகள்

சாகாது சாகும் வினை கெட்டுப் போகிட முழங்குக
பண்டை கட்சிசார் கலகங்கள் போகிட;
உத்தம வாழ்வு முறைகளும் இனிய நடத்தையும்
தூய சட்டங்களும் ஆகுக ஆகுகவென முழங்குக

ஹர்ஷனின் சபதம்

இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும்  என்னை செயலற்றவனாக்கி விட்டன.  இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை.  இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா? 

ஏகலைவன்

ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது.

ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்

என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலூம் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை

மூட்டைப் பூச்சி

நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி  ஊதி விட்டான்.