அப்போது நான் மறுபடி என்னுள் வந்து விட்டேன், பந்தைச் சரியான நேரத்தில் பிடித்தேன், அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்தேன், சில எட்டுகள் எடுத்துப் பின்னே போய், ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன், அவனுடைய உருவத்தின் விளிம்புகள் உறுதியாகத் தெளிவாக இருக்கின்றன, அவன் பூமியிலிருந்து விழுந்து விடமாட்டான் என்று சொன்னேன்.
