சென்டிமென்ட்

யாராவது தலைவர்களோ தலைசிறந்த மனிதர்களோ இறந்து விட்டால் பள்ளியையும் ஆபீஸையும் மூடிவிட்டு என்ன சாதிக்கப் போகின்றது அரசாங்கம்? ….
இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு நிமிடம் மௌனம் வகித்து