சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

This entry is part 9 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

This entry is part 8 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது

4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி

அஸ்கிளெப்பியஸ், ஆறுதல் (soothing) அளிக்கும் கடவுளான Epione ஐ மணந்து குழந்தைகளைப் பெற்றான்.  சுத்தத்தின் கடவுளான ஹைஜியா (Hygeia), சர்வரோகநிவாரணி கடவுளாகிய பணசியா (Panacea),  நலத்திற்கு அசோ (Aceso) நோயிலிருந்து மீள லாசோ (Laso), ஒளி அல்லது ஆரோக்கிய உடல் அழகின் ஈக்ள் (Aegle) ஆகிய மகள்களையும், திறமையான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் Machaon, Podaleirios மற்றும் நோயில் இருந்து மீண்டும் முழுமைக்கு என்ற பொருளுடைய குள்ளமான டெலஸ்போரஸ் (Telesphoros) என்று மூன்று மகன்களையும் பெற்றனர்.

பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்

ஒரு பறவையின் வடிவம், அது தன் இறக்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு மேல் எழும்புகிறது, காற்றில் எவ்வாறு சறுக்குகிறது என்ற விவரங்கள் அனைத்தும் நவீன விமானத்தில் உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.  “V” உருவாக்கத்தில் பறக்கும் வாத்துக்கள், தனது முன் செல்லும் பறவையின் மேல்நோக்கி இழுக்கப்படுவதைப் பிடிப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது. இந்த குறிப்பைப் பயன்படுத்தி இராணுவப் படை அமைப்புகள் உருவானது.

இறவாமை – பகுதி இரண்டு

இந்தக் கண்களா ? மனம் வேறெங்கோ இருந்தால், கண்ணில் படுபவை அனைத்தையும் நாம் பார்ப்பதில்லையே. அப்போது மனமா ? மனம் பார்க்கிறது அல்லது பார்க்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறதே. அப்போது வேறொரு ஆற்றல் இந்த மனதையும் கவனிக்கிறது

3. மரணமின்மையின் முதற்துளி

நோய்களுக்கு காரணம் கடவுளர், இயற்கை போன்றவற்றிலிருந்து  உடலளவில்  நாடிகளில் ஏற்படும் சமநிலைக்குலைவு நோய்களை உருவாக்கக்கூடும் என்ற தத்துவம் எகிப்திய மருத்துவத்தில் தோன்றிவிட்டது. மேலும் நோய் வருவதற்கு முன் தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், மருத்துவ அறிவை தொகுத்துக்கொள்ள பாப்பிரஸ் சுவடிகள் போன்ற வழிமுறைகளும் உருவாகிவிட்டன.

ஹர்ஷ சரித்திரம்

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.

கொலையாளியை ஜீரணித்தவர்

வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும்.

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்

This entry is part 7 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பணிப்பெண், இளவரசி,  அவந்திகா கண்கள் கலங்குகின்றன, என்ன காரணம்? திரும்பிப் பார்த்த பத்மாவதியும் விசாரித்தாள். அவந்திகா சமாளித்தாள், இந்த வண்டுகளை கிளப்பி விட்டதில் தூசியை தட்டி விட்டு விட்டது. என் கண்களில் விழுந்திருக்கும் போல.  வேறு ஒன்றுமில்லை.  இருக்கலாம் என்று பத்மாவதியும் ஆமோதித்தாள்.

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்

மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின்  குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த  காவல் வீரர்கள் சுற்றி நின்றனர்.   ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான்.  அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான்  ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி.  பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும்  பெண் மகவை கருவுற்றாள். 

பைனரி பல்ஸார் என்னது?

This entry is part 5 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

கடைசி காலத்தில், எப்படி ஒரு நட்சத்திரம் தன்னுடைய எரிபொருளை இழக்கும் பொழுது வெடித்து, சிதறுகையில் அதன் கரு, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுகிறது என்று பார்த்தோம். இவ்வாறு, சில சமயம், அருகாமையில் இருக்கும் இரு நடசத்திரங்கள், ஒரே சமயத்தில், தங்களது எரிபொருளை இழந்து, விண்வெளியில் வெடித்து, சிதறி, பாக்கி இருக்கும் இரு கருக்கள், அதாவது, இரு நியூட்ரான் நட்சத்திரங்கள், ஒரு மையத்தில் சுற்ற ஆரம்பிக்கலாம். அவ்வாறு நேர்ந்தால், அதை பைனரி பல்ஸார் என்று அழைக்கப்படுகிறது”

கொக்கென நினைத்தாயோ ?

தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள்.

தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்

This entry is part 6 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

கூடை நிறைய பூக்களுடன் ஒரு பணிப் பெண் வந்தாள்.  அம்மா அவந்திகே! உங்களைத் தான் தேடினேன். இந்த பூக்களைக் கொண்டு மணமகளுக்கான வர மாலையை உங்கள் கையால் கட்டிச் தரச் சொன்னார்கள். உற்ற உறவினர் அல்லது சகிகள் தான் செய்ய வேண்டும். பத்மாவதி ராஜ குமாரிக்கு நீங்கள் தானே உற்ற தோழி.

நியூட்டனும் பிறையும் – 1

மண்ணுலகம் என்னும் தெளிவான பிரிவினை அவசியம்.  விண்ணுலகிலுள்ள அனைத்தும் படிகங்களானவை. மையமான கோள வடிவான புவியினை, பொதுவான மைய வட்டப்பாதையில்  நிரந்தரமாக அவை சுற்றி வருகின்றன. இனி, மண்ணுலகில் சாதாரண மற்றும் தூண்டப்பட்ட இயக்கங்கள் என்னும் பிரிவினை அவசியம். ஏதேனும் ஒரு வகையான தள்ளுதலில் தொடங்கும் தூண்டப்பட்ட இயக்கம், அதனுடனேயே தானும் நின்றுவிடும்.  சாதாரண இயக்கம் மேலும் கீழுமாக செங்குத்தான திசையில் – பொருள் மற்றும் இடத்தைப் பொறுத்து இயங்கும்

பொருட்களின் இயற்கை

ஐரோப்பிய சமூகத்தின் ஒழுங்கடுக்கில் எதிரொலித்த பிரபஞ்சத்தின் ஒழுங்கடுக்கு தாந்தேவினால் மிக அற்புதமாக பாடப்பட்டது. பூமியை மையமாகக் கொண்ட உருண்டையான பிரபஞ்சம்; சுவனத்திற்கும் பூமிக்கும் இடையே மாற்றில்லாத பிரிவு; இயற்கை நிகழ்வுகள் குறித்து உருவத்துடன் கூடிய அறுதியான விளக்கங்கள்

மன வானும், தவழ் முகிலும்

ராஜாஜி மறைந்த போது ஜெயகாந்தன் அவருக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரையில் நம்முடைய வழக்கம் மகத்தான மனிதர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான், இறந்த நாளை அல்ல. அதனால் தான் நாம் ராமநவமியைக் கொண்டாடுகிறோம், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம், காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறோம். எனவே ராஜாஜியினுடைய ஜெயந்தியைக் கொண்டாடுவோம் என்று எழுதி இருப்பார்.

வகுத்துச் செல்வதன் எல்லை ?

அரிஸ்டாட்டிலின்படி, பிரபஞ்சம் தொடர்ச்சியான ஒன்றல்ல – துளிகளாலானது. எனவே எல்லையற்ற சிறு புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு இணைப்பை ஏற்படுத்துதல் முற்றிலும் இயலாத ஒன்று என்பதே  டெமாகிரீடஸின் வாதம்.  எனவே எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையும் அளவும் கொண்ட சிறு துண்டுகளே கம்பியின் ஒரு இணைப்பை உருவாக்க இயலும்.

ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள்.  மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம்.  மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது.  கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார்.  தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம்.  கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால  அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

This entry is part 48 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில்   பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய  மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன

ஸ்வப்ன வாசவ தத்தா – 4

This entry is part 4 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன்.  ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின்  அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா?  பாரத வம்சத்தினன்.  தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன். 

ஹர்ஷ சரித்திரம்- 2

ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான்.  அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது.  வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள்  அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.

அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்

ராமகிருஷ்ணனின் கதை எப்போதாவது நமது செல்கள், நமது டிஎன்ஏ மற்றும் நமது புரதங்களின் நுணுக்கங்களுக்குள் மிகத் தொலைவில் அலைகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவரது எழுத்து புத்திசாலித்தனமாகவும் அணுகக்கூடியதாகவும் உள்ளது. சராசரி வாசகருக்கு இந்த உயர்-சூழல் கருத்துக்களை மறைக்க அவர் பாடுபடுகிறார், மேலும் அவரது அத்தியாயங்கள் பெரும்பாலும் அவரது அறிவியல் கருத்துக்களுக்கு உருவகங்களாகவோ அல்லது முன்மாதிரிகளாகவோ செயல்படும் துடிப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகின்றன

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம். 

கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2

This entry is part 1 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க  கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன். 

3. சரணடைதல்

எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 16

நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர்.  ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும்,

மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு

கோகர்ணத்துக்கு வந்து வழிபட்டு மிர்ஜானுக்கு வந்த மராத்தியப் பேரூர் பண்டரிபுரத்து விட்டல பக்தரான மராட்டி பேஷ்வாவும் அவருடைய அழகான மனைவியும் குழந்தைகளும்  சென்னபைராதேவி பற்றி மிர்ஜான் கோட்டை கட்டிய தொழில் வினைஞர் கூறியது கேட்டு அவளைச் சந்தித்துப் போக வந்தது நேற்றுப்போல் நினைவு வருகிறது. முப்பது ஆண்டுக்கு முந்திய அந்தச் சந்திரனும் பூரணத்துக்கு இரண்டு நாள் முந்தைய சந்திரன் தான்.

சகுனங்களும் சம்பவங்களும் – 5

இன்றைய நாளில் எவர் வேண்டுமானாலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனும் வெற்றிமாறனின் விடுதலையும் எடுத்து விடலாம். எனினும், தாலுகா அலுவலகம், அதன் அரசியல், உள்ளே நிலவும் சித்தாந்தம், மேலிட மந்திரி, உள்கட்சி பூசல், தலைமை அதிகாரியின் கையாலாகாத்தனம் – இதுவெல்லாம் காமெடியாகச் சொல்கிறார்கள். அடுத்தது என்ன ஆர்வமூட்டுகிறார்கள்.

சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?

This entry is part 18 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஒரே ஆறுதலாக அமைந்த வகுப்பு தமிழ் வகுப்பு. ராயகிரியிலிருந்து வரும் ஜெயராஜ் சார்தான் தமிழ் எடுத்தார். அவர் வகுப்பில் மட்டும்தான் எல்லோரும் சிரிக்க முடிந்தது. செய்யுள் பகுதி என்றாள் எவர் தனி உற்சாகம் அடைவார். புத்தகத்தில் உள்ள பாடல்களைத் தாண்டியும் அவர் சொல்லிக் கொண்டே போவார். வகுப்பில் 3 முறைகளுக்கு மேல் சந்தேகம் கேட்கக்கூடாது என பிற ஆசிரியர்களால் நிறுத்தப்பட்டிருந்த பிரேமுக்கு ஜெயராஜ் சார் வகுப்பில் எந்தத் தடையுமில்லை.

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 17 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பண்டப் பரிமாற்றங்களில் அவர் முன்பு காட்டிய நாசூக்கான நனி நாகரிகத்தன்மை குறைந்து இயல்பான போக்கு தென்பட ஆரம்பித்தது. சில பண்டங்களை அவரே கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தார் ( டொம்ப்ளீ, கருவடாம்ல வெங்காயம் சேர்க்க மாட்டா எங்க ஆத்துல, நீ அன்னைக்கு எடுத்துண்டு வந்த வடாத்துல வெங்காயம்லாம் போட்டு நல்லாருந்தது. நாளைக்கு எடுத்துண்டு வர்றியா? – பிரேம்). நோன்பு காலங்களில் மாலை நேரம் பெரிய பள்ளிவாசல் போனால் பாட்ஷா எங்களுக்காக போணி ஒன்றில் நோன்பு கஞ்சியுடன் காத்திருப்பார்.

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 15 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெண்கள் உடைமாற்றும் அறையை ஆரம்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார்கள் மாடசாமி கோஷ்டியார். ஒப்பனையாளர் மற்றும் டீச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. பெண்களும் சன்னல் மூடியிருக்கிறது என்ற நினைப்புடன் சன்னலை ஒட்டிய மூலையில் உடைமாற்றியிருக்கிறார்கள். ( ஆனால் சன்னல் கதவின் கொக்கியை ஒட்டி ஈர்க்குச்சி நுழையும் அளவு அறுக்கப்பட்டிருந்த நுண்ணிய இடைவெளி,

தெய்வநல்லூர் கதைகள் 14

This entry is part 14 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியான நியூ ஏல் இங்லீஷ் ஸ்கூல் நடத்திய ஆண்டுவிழா. எல் கே ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை – எல் கே ஜி யை முதன்முதலில் தெய்வநல்லூரில் அறிமுகம் செய்த நர்சரி பள்ளி நியூ ஏல் இங்க்லீஷ் ஸ்கூல் என அறிக.  தெய்வநல்லூரே வியக்கும்வண்ணம் ரதவீதியில் பந்தல்  மேடை போட்டு     புளியங்குடியிலிருந்து மைக் செட்டும், சங்கரன்கோவிலில் இருந்து டிஸ்கோ லைட்டுகளும்( போட்டோ எடுக்கும்போது அடிக்கும் ஃப்ளாஷ் போல மேடையில் அடிக்கும் லைட்டும்

புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! –  முதல் பகுதி

இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான  குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை  கதையுடனும்  அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும்  குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது.  உண்மையாகவே, சாமானிய இந்துக்கள்  எதிர்கொள்ளக்கூடிய  விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது.

தெய்வநல்லூர் கதைகள் 13

This entry is part 13 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெரிய கோவில்  சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம்.  வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”

தெய்வநல்லூர் கதைகள் -12

This entry is part 12 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

உள் பிரகார சுற்றுப் பாதை  கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பி‌ல் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு  உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி)  சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.

தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.

தெய்வநல்லூர் கதைகள் – 9

This entry is part 9 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக  சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று  மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.      

தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

தெய்வநல்லூர் கதைகள் – 5

This entry is part 5 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு திங்களன்று நாங்கள் வகுப்புக்குள் நுழைந்தபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி தாக்கியது. அங்கு அறிஞர் அண்ணா அணி என்ற பெயரில் இரண்டு காலண்டர் அட்டைகளை மூங்கில் வரிச்சால் பின்பக்கமாக இணைத்து நீளமாக ஆக்கி முழுவதும் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு ஒரு பதாகை இருந்தது. அதுவரை வகுப்பில் மூன்று அணிகளே உண்டு. பெண்கள் தரப்பிலிருந்து “ஜான்சிராணி” அணி, பையன்கள் அணியிலிருந்து நாங்களே உருவாக்கி எங்கள் துணை அணியாக நடத்திக்கொண்டிருக்கும் “தமிழன்னை” அணி. முக்கியமான ஆளும் அணியாக எவ்வித எதிர்ப்புமின்றி அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது எங்களது குழுவான “ஆசியஜோதி நேரு” அணி.

தெய்வநல்லூர் கதைகள் – 2

This entry is part 2 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி  தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.

இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.

உபநதிகள் – 1

This entry is part 1 of 17 in the series உபநதிகள்

ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க… 

வலி மொஹம்மத் வலி

This entry is part 8 of 12 in the series கவிதை காண்பது

வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22

This entry is part 22 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்

புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.

அஜீஸ் பானு தாராப் வஃபா

This entry is part 6 of 12 in the series கவிதை காண்பது

அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

வாக்குமூலம் – அத்தியாயம் 4

ஒரு காலத்திலே ஆனந்த விகடன், கல்கி, குமுதமெல்லாம் வாராவாரம் படிக்கலைன்னா என்னவோ மாதிரியா இருக்கும். இப்போ இந்தப் பத்திரிகைகளைப் படிக்கவே முடியலை. முன்னே தாமரை, கணையாழி மாதிரி சிற்றிதழ்கள் கூடப் படிக்கப் பிடிச்சிருந்திச்சு. இப்போ வருகிற இலக்கியப் பத்திரிகைகளைக் ‘கடனே’ன்னுதான் படிக்க வேண்டியதிருக்கு. சினிமாவும் இப்படித்தான் ஆகிப்போச்சு. ஆரம்பத்திலே ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம், அவளுக்கென்று ஒரு மனமெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்துது. போலீஸ்காரன் மகளும் அப்படித்தான்.

மிளகு  – அத்தியாயம் இருபத்துநான்கு

நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?

உணவு, உடை, உறையுள், … – 2

This entry is part 2 of 3 in the series உணவு, உடை, உறையுள்

இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.