அறிவியல் கொள்கைகளுள் அழகானது

ஜூரிச் (Zurich) பல்கலையில் சேர்ந்த பிறகு, இயற்பியல் கல்வியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1905ம் ஆண்டில்,அக்காலத்தின் முதன்மையான அறிவியல் இதழான Annalen der Physikக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார். அந்த ஒவ்வொரு கட்டுரையும் நோபல் பரிசு பெறும் தகுதி கொண்டது. முதல் கட்டுரை பொருட்களில் அணுக்கள் இருப்பதை உறுதியாக விளக்கியது.

துளிமம்

துளிம கொள்கையின் ‘பிறப்புச் சான்றித’ழாக  மேற்சொன்ன எளிய தெளிவான வரிகளைக் கொள்ளலாம். இந்த தொடக்க வரி ,   ‘எனக்குத் தோன்றுவது என்னவென்றால்..’   , ‘ நான் (இவ்வாறு) சிந்திக்கிறேன்..’ என்னும் டார்வினின் பரிணாமம் குறித்த அறிமுகக் குறிப்புகளின் தொடக்கம் அல்லது காந்தப்புலம் குறித்த அறிமுகத்தின் போது  பாராடவிடம் காணப்பட்ட தயக்கம் போன்று அற்புதமானது .

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு- 3

விண்மீன் மண்டலங்கள் பொறிக்கப்பட்ட , அளவற்ற , நெகிழக்கூடியதான, உச்சகட்ட வெப்பமும் அடர்த்தியும் கொண்ட மிகச்சிறிய புகைமண்டலத்திலிருந்து உருவான, ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற ஒன்று தான் பிரபஞ்சம் என்பதே நம் இறுதியான கண்டறிதல்.

துகள்கள்

துளிம இயக்கவியல் மற்றும் துகள் கொள்கை விவரிக்கும் உலகம் இதுவே.  லாப்லாஸூம் நியூட்டனுடையதுமான, நிரந்தர வடிவமைப்புடைய‌ வெளியில், ஒரு மிகச்சிறிய கூழாங்கல்  நீளமான துல்லிய எறிபாதையில் முடிவின்றி பயணிக்கும் இயந்திர உலகிலிருந்து வெகுதூரம் சென்று விட்டோம். நுண்துகள் பரிசோதனைகளும் துளிம இயக்கவியலும் பிரபஞ்சம் என்பது இடைவிடாத, ஓய்வற்று அசையும் பொருட்களால் ஆன ஒன்று ;   தொடர்ச்சியாக பார்வைக்குத் தோன்றி மறையக்கூடிய அற்பாயுளுடைய பொருட்கள் என்று கற்பிக்கின்றன

வெளியின் துகள்கள்

அடிப்படை நடைமுறைகள் என்பது தருணங்களின் தொடர்ச்சியான ஒழுக்காக இருப்பதில்லை. வெளியினுடைய துகள்களின் நுண்-அளவு நிலையில், இயற்கையின் நடனம் என்பது , இசைக்குழு நடத்துனர் கோலின் ஒரு தாளத்திற்கு ஏற்ப ஆடுவது அல்ல. ஒவ்வொரு நடைமுறையும் தன்னுடைய தாளத்தில்,மற்றதுடன் தொடர்பின்றி ஆடுகின்றன

நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

கற்பனையோ இல்லையோ,  காலம் கடப்பதையோ ஓடுவதையோ ஒழுகிச் செல்வதையோ எப்படி விளக்குவது? காலம் கடப்பதை நாம் நன்றாகவே அறிகிறோம். நமது சிந்தனைகளும் பேச்சும் காலத்தில் தான் இருக்கின்றன. மொழியின் அடிப்படை கட்டமைப்பே காலத்தைச் சார்ந்தது – ஒரு பொருள் இருக்கிறது – இருந்தது –  இருக்கலாம் . பொருட்களோ வண்ணங்களோ,  ஏன் வெளியோ இல்லாமல்  கற்பனை செய்ய முடியும்‌ பிரபஞ்சத்தினை காலம் இல்லாமல் கற்பனை செய்வது மிகவும் கடினமானது.

நாம்

இயற்கையே நமது இருப்பிடம்- இயற்கையில் நமது இருப்பிடத்தில் இருக்கிறோம்‌.  அறிநுண்ணுணர்வு நமக்கு அளிக்கும்,  சிறு துகள்களாலான வெளியினைக் கொண்ட, காலமே இல்லாத, எதுவுமற்ற  விந்தையான, பலவண்ணமுடைய, ஆச்சரியமூட்டும் இந்த பிரபஞ்ச சித்திரம் நாம் எதனால் உண்டாக்கப்பட்டுள்ளோம் என காட்டுகிறது. நம்மை உண்மை இயல்பிலிருந்து முரண்பட வைப்பதில்லை‌