எழுச்சியூட்டும் நம்பிக்கை

இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.

இல்லங்களில் கருவிகள்

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா

இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்: ‘உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.’

உறவுக்கு ஒரு பாலம்

ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது.

அற்புத மானுக்கு முடிவில்லாத வேட்டை

அவன் மோசமாக ஒப்பிக்கிறான், மூக்குக் கண்ணாடியை அடிக்கடி நேராக்கியபடி. ஆனாலும் மனதைத் தொடுகிறான். எனக்குப் புரிந்தது.. அவன் என்ன உணர்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அவனுடைய இடைவிடாத உடல் கோணல்கள், அந்தக் கண்ணாடி, அவனுடைய அதிர்வுகள்.. ஆனால் அவன் என்ன ஒப்பித்தான் என்பதை நான் சுத்தமாக மறந்து விட்டேன், அது ஏன் முக்கியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டேன். உணர்ச்சிகள் தனிப் பிறவிகள்- கஷ்டப்படுவது, காதல், மென்மையாக உணர்தல். அவற்றுக்குத் தமக்கென வாழ்வு இருக்கிறது; நாம் அவற்றை உணர்கிறோம், ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. நீங்கள் திடீரென்று வேறு ஒருவரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விடுகிறீர்கள்,

மனம் ஒரு குரங்கல்ல…

இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…

பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம்

அமெரிக்க அதிபரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை எல்லோரைப் பற்றியும் உங்கள் கருத்துகளைக் காரசாரமாக ட்விட்டரில் புகுத்தி விடுகிறீர்கள் அல்லவா? அத்தகை ட்வீட்கள் ஒரு நிமிடத்துக்கு 90,000 வீதமாக வருகிறதாம். முழுக் கோட்டாவையும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்றாலும் ஒரு ட்வீட்டுக்கு 50 – 70 எழுத்துகள் என்ற வீதத்தில் எத்தனை பைட்கள் ஒவ்வொரு நிமிடமும் தோன்றிக் கொண்டிருக்கின்றன – இப்படியெல்லாம் ஜனித்த விஷயங்களைச் சேமித்து வைக்க பிரம்மாண்டமான தகடுகள் தேவைப் படும் என்பது மட்டும் பிரசினை அன்று. இந்தத் தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் பொருள் காண வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த விஷயங்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த தகவல்களும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் சில செய்திகளைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

தேவதச்சனின் கலைக்கூடம்

ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.

டிபாசாவிற்கு மீள்வருகை

இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன்.

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சேவாக் ⊕ முல்தானின் சுல்தான்

சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை. V யில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது,மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப்.என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும் போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் தனிச் சிறப்புவாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு…

ஜஸ்டின் இஸ் ஜஸ்ட் ரெடி

2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் பிரதமர் வேட்பாளாராக முன்மொழியப்பட்டபோது லிபரல் கட்சிக்கு அரசியல் அரங்கில் மூன்றாவது இடமே இருந்தது. ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் ஆட்சி நடந்த கடந்த பத்தாண்டுகளில், NDP பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து இருந்தது. லிபரல் கட்சி பல ஊழல் புகார்களில் சிக்கி மூன்றாமிடத்தில் தடவிக்கொண்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர்களும் சரி, பொதுமக்களும் லிபரல் கட்சியையோ, ஜஸ்டினையோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

கருவிகளின் இணையம்: பொது மருத்துவம்

கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.

செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்

ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.
உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலைத் தகறாரில்தான்.

பிரான்சு: குடிமக்களும் ஆட்சியாளர்களும்

பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில், சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு, மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ஷுவாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789ல் ஆரம்பத்தில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதையே கடைப்பிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமையும் இருந்தன.

'கோக்' அல்லது C17H21NO4 

உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது? வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.

மகரந்தம்

மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் டிஸைனர் இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் …

பெண்ணும் சாமியும்

இன்று, அலுவலகம் ஓடுகையில் தொங்கத் தொங்கத் தாலி எரிச்சலூட்டுகிறது. தாலியை புனிதமாக தலையில் ஏற்றிய ஆணுக்கோ அது அவனின் ஆயுளை நிர்ணயிக்கும் ஒன்றாக மனதில் உருவேறிக் கிடக்கிறது. “என்னது? தாலியைக் கழற்றுவதா?” என்கிறான் அவன். “பேங்கில் பண்ணத்தைப் போடச்” சொல்கிறாள் பெண். பெற்ற பிள்ளை, அவனுடையது என்பதை அவனுக்கே அவள்தான் சொல்ல வேண்டிவந்தமையால் அவன் பெயர் இனிஷியலானது. இப்போது எவரை நம்ப வைக்க வேண்டும். இது நம் பிள்ளை என நமக்குத் தான் தெரியுமே? பின் எதற்கு? நம் இருவரின் உற்பத்திக்கு நம் இருவரின் பெயர்

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும் என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை கூறியது. நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது. ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன? 19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்: இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

மூன்று சிகரங்கள்

ஏழு பேர் போவதாக முடிவாகியிருந்தது, அதில் ஐந்து பேருடன் நான் ஏற்கனவே ஒரு முறை ஸ்னோடோன் மலை மட்டும் ஏறி இருக்கிறேன். அவர்கள் வேகத்திற்கு முடியாவிட்டாலும் பெரிதாக சிரமபடாமல் மலையேறி முடித்திருந்தேன். நண்பர் பேச பேச லேசாக ஆசை துளிர்த்தது. இம்முறை வேரோரு நண்பர் வண்டி ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளதால் நான் ஓட்ட வேண்டி இருக்காது, அதுவும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. இந்நண்பர் குழாமோடு பயணம் செய்வது எனக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் இனிய அனுபவமாகவே இருந்துள்ளது, அது இன்னோரு பெரிய உந்துதல் . அரை மணி நேரத்தில் “மூணு மலதான ,ஏறிறுவோம்” என்று சொல்லும் அளவுக்கு தயார்ஆகிவிட்டேன்.

குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்

சியாட்டில் quarterback ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற சியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. சியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார். தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணைக் கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.

குணம் நாடி, குறை தவிர்த்து

கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?

கவனத்தைக் கட்டும் கயிறு

சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள், ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது.

பர்மாவின் செட்டியார்கள் – கட்டுரை எதிர்வினையும் பதிலும்

பிரிட்டிஷ்காரர்களை செட்டியார்கள் பின்தொடரவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியான பார்வையல்ல. பிரிட்டிஷ்காரர்களை பின்தொடர்ந்தே செட்டியார்கள் பர்மாவில் கால் வைக்கிறார்கள். சரியாகச்சொன்னால், முதல் பிரிட்டிஷ்-பர்மிய போரில் பிரிட்டிஷ் இந்திய துருப்புகளுடன் சேர்ந்து பயணம் செய்தே அவர்கள் பர்மாவைச் சென்றடைகிறார்கள். (ஷான் டர்னல்). பிரிட்டிஷ்காரர்களுடன் நகரத்தார்களுக்கு இருந்த வணிகப்பிணைப்பும் பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே. பிரிட்டிஷ்காரர்களை அண்டி அரசியல் செய்த நகரத்தார்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வழியாக தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் செய்தார்கள்.

உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6

இயற்கையில் நெல் விதைக்கும்போது பச்சை கட்டிப் பயிர் எழும்பத்தாமதமாகலாம். இதைத் தசிர்க்க தொழு உழவு செய்யும்போதே பலவகையான மரத்தழைகளை வெட்டிப் போட்டு குலை மிதித்து 2 நாட்கள் அழுகியபின் பரம்பு ஒட்டி விதைக்க வேண்டும்.

ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை

மேலை நாடுகளில் பணக்கார மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகை எலிசபெத் டெய்லர் மாதா மாதம், பெரும் தொகையை ஜீவனாம்சமாக தன் முன்னாள் கணவர் லேரி ஃபொர்டென்ஸ்கிக்கு (Larry Fortensky) கொடுக்கிறார். மேலை நாடுகளில் இது வழக்கம் என்று ஒதுங்கிவிடுவோமே தவிர, நம் மூக்குக்கு கீழ் ஆசியாவில் நடக்கும் என்று நினைக்க மாட்டோம். ஆனால்…

பெண்ணிய பயங்கரம்!

இவை பெண்களின் கதைகள், பெண்கள் அதி-இயற்கையைச் சாதிக்கும் கதைகள் – ஆனால் ஒவ்வொரு கதையும் திகில் கதையாக ஆவது அதில் ஓர் ஆவி இருப்பதால் அல்ல, மாறாக அவை, நாம் வாழ்வில் ஏதோ சில கட்டங்களில் கேள்விப்பட்டிருந்த அல்லது அடைந்த அனுபவங்களை வினோதமான ஒரு வகையில் ஒத்திருக்கின்றன என்பதால்தான். ….”எனக்கு உருவங்களில்தான் கதை துவங்குகிறது. நான் ஒரு ஓவியராக இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரிசையாக சில உருவங்களைப் பார்க்கிறேன், இவை கிளர்வூட்டி என்னைச் சிந்திக்கத் தூண்டுன்றன. அதன்பின் அவற்றுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதத் துவங்குகிறேன். ஆனால் கதை எழுதும்போது, இதை மட்டும்தான் செய்ய வேண்டும். உனது நோக்கம், உனது பெண்ணிய வாதையைப் போகவிட வேண்டும்- உனக்குள் இருக்கும் கதைசொல்லிக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்.”

யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்

புல்வெட்டும் எந்திரங்கள் சைனாவில் செய்து, வட அமெரிக்காவில் 400 டாலருக்கு சிரிக்கின்றன. ஒன்றை மறந்து விடக் கூடாது. சாதாரண காரில் சத்தியமாக இவற்றை ஏற்ற முடியாது. எடையும், வடிவமும் முற்றிலும் காருக்குச் சரிவராத மோசமான எந்திரம்! நானோ காரில் சுமோ குத்துசண்டைகாரர்களை ஏற்றுவதைப் போன்ற விஷயம் இது. இவ்வகை எந்திரங்களை பழுது பார்ப்பது புதிய எந்திரம் வாங்குவதை விட அதிக செலவாகும்.

தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது.

கைகேயியின் மனமாற்றம்

கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிகிறாள்; காலால் மிதிக்கிறாள். பின் வெகுண்டு நோக்கி அப் பேதயைப் பித்தி! நீயும் நின் சேயும் துயர்ப் படுக! நான் போகிறேன் உன் மாற்றாளிடத்து என்கிறாள். மேலும், நீ எதற்காக உவக்கிறாய்? கரிய செம்மலான இராமனும் சிவந்த வாய் சீதையும் உவந்து சிங்காசனத்தில் வீற்றி இருக்க, அவந்தனாய் உன் மகன் பரதன் வெறும் நிலத்தில் இருப்பானே.

எனக்கு சாந்தியைத் தெரியாது!

வறட்சியின் பிடியிலும், வறுமையின் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கத்தக்குறிச்சியை சேர்ந்த சாந்தியின் வறுமையை விளக்க வேண்டுமானால் ஒரு நிகழ்ச்சியை கூறினால் போதும்.சாந்தியின் வெற்றியை பற்றி அவர் நண்பர் கேட்டபோது, “எங்கப்பா செங்கச்சூலையில் வேலை பார்க்கிறார். தினமும் ஏழு கிலோமீட்டர் வேலைக்கு ஓடி சென்று உழைத்துத்தான் எங்களை காப்பாற்றினார். எனக்கு பிறகு இருக்கின்ற மூன்று தங்கைகளையும் என்னையும் காப்பாற்ற என் அப்பா ஓடுவதை நிறுத்த வேண்டுமானால், நான் வேகமாக ஓடவேண்டும்.

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

‘சிறப்பு கணிதத் தேர்வு’ பற்றிய சுற்றறிக்கை வருகிறது. அடுத்த பள்ளி நாளில், கணித வகுப்பு நடக்கும்போது மாணவர்களில் சிலர் பாக்ஸ் இல்லாததால் முட்டி போடுகிறார்கள். இந்தத் தண்டனையில் இருக்கும் பொழுது தங்கசாமியையும், உடன் முட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு பையனையும் சமூகவியல் ஆசிரியர் அழைப்பதாக ஒரு மாணவன் வந்து கணித ஆசிரியரிடம் முறையிடுகிறான். இருவரும் சமூக ஆசிரியர் வகுப்பெடுக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். “டேய் பசங்களா… உங்க டெஸ்ட் பேப்பர நான் திருத்திட்டேன். சாயந்தரமா வீட்டுக்கு வந்து மத்தவங்களோட பேப்பர திருத்திடுங்கடா…” என்கிறார்.

வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள்

வாசிப்பு அனுபவம் என்று நான் அழைக்கும் விஷயம், நாம் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு வெகு காலம் முன்னரே துவங்கிவிடுகிறது. நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் புரட்டிப் பார்த்தல், முன்னட்டை அமைப்பைப் பார்த்து வசீகரிக்கப்படுதல், அதன் பைண்டிங், எழுத்துருக்கள், ஓவியங்கள், எவ்ரிமேன்ஸ் லைப்ரரி எடிஷன் வாங்குவதா அல்லது பெங்குவின் மாடர்ன் கிலாசிக்ஸ் எடிஷன் வாங்குவதா என்ற இருப்பியல் சார்ந்த அகச்சிக்கல், விலையுயர்ந்த ஒரு புத்தகம், ஒரு பேச்சுக்கு பரூஸ்ட்டின் In Search of Lost Time நாவலின் மிகச் சமீபத்திய மொழிபெயர்ப்பின் ஆலன் லேன் பாக்ஸ் எடிஷன் என்று வைத்துக் கொள்வோம், அதை வாங்குவதற்கு முன் நிகழும் மனத்தடுமாற்றங்கள்…இவை ஒவ்வொன்றும் அவற்றின் துணை நினைவுகளோடு ஒரு சுருதிக் கோவையாக உருவாகி நாம் இறுதியில் புத்தகத்துடன் சுருண்டு படுக்கையில் வாசிப்பின் அடக்கமான சேம்பர் ம்யூசிக்காக வளர்கிறது.

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?

ஒரிஜினல் உச்சரிப்பில்…

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

கவிதையின் நேரம்

உழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும் கவிதை என்ற கலைவடிவத்தின் உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே இவ்வோயாத உழைப்பின் பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால் குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால் மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின் மூலம்.

இடமற்ற இடத்திலிருந்து, இடத்தைப் பற்றி…

நானும் வேர்கள் இல்லாததால்தான் நான் பிறந்த இடத்தை விட்டு, சென்னை என்ற இடமற்ற இடத்துக்கு வந்திருக்கிறேனோ? ஒரு மனிதனின் முன்னோர்கள், அவர்களின் மூதாதையர்கள் வழி வழியாக வாழ்ந்து, அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நிலம், உடமைகள் யாவும் அவனுக்குக் கையளிக்கப்படும் இடம் எதுவோ அதுதான் அவனுக்குரிய இடம். அவனது வம்சாவளியின் வரலாறு, அவனது முன்னோர்களின் கல்லறைகள் போன்றவை இருக்கும் இடமும் கூட. அந்த இடத்திலிருந்து அவன் பிதுக்கப்பட்டு வெளியே வேறு இடம் நோக்கித் துப்பபடும் போது அவனுக்கு வாய்க்கும் இடம்தான் இடமற்ற இடம் (non-place). பின் நவீன யுகம் மனிதனுக்குப் பல இடமற்ற இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

சார்புகள் – நுண்கணிதத்தின் நுழைவாயில்

நீங்கள் பைக் அல்லது காரில் பயணிக்கிறீர்கள். உங்களுடைய வேகம் எப்படி கணிக்கப்படுகிறது? நீங்கள் பயணித்த தூரத்தை, பயணம் செய்த நேரத்தால் வகுத்தால் கிடைப்பது வேகமாகும். நீங்கள் ஸ்பீடாமீட்டரைப் பார்க்கும்போது அது 40 கி.மீ. வேகத்தில் செல்வதாக காண்பிக்கிறது. இங்கு நீங்கள் ஸ்பீடாமீட்டரை பார்க்கும் கணத்தில் வண்டி செல்லும் தூரம் சூன்யம்தான். அதாவது பயணித்த தூரம் மற்றும் நேரம் இரண்டுமே சூனியம்தான். இங்கும் 0/0 தான் கிடைக்கிறது. ஆனாலும் எப்படி ஸ்பீடா மீட்டர் 40 கி. மீ. எனக் காண்பிக்கிறது?

நியூஸ் ப்ரிண்ட் புலி – புலிக்கலைஞன் சிறுகதையை முன்வைத்து

ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள் மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

நோயினால் மட்டுமல்ல

நோயாளி மெதுவாகத் தலையைத் தூக்குகிறார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. அவருக்குக் குரல் எழும்பவில்லை. கையைத் தூக்குகிறார். அப்பக்கமாக நர்ஸ் ஒருத்தி போகிறாள். நோயாளி கையைச் சொடுக்கிய மாதிரி நர்ஸின் கவனத்தைப் பெறுகிறார்.

அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை

நான் அசோகமித்திரனை முதலில் சந்தித்தது வரலாற்று ஆசிரியர்களால் அடிக்கடி நினைவு கூறப்படக்கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இல்லாவிட்டாலும் என்னுடைய எழுத்து இலக்கிய ஜாதகத்தில் மாற்றம் எற்பட்ட காரணமாயிற்று. தமிழில் நான் எழுதியதை முதலில் அவர்தான் பிரசுரித்தார். என்னை எழுதும்படி ஊக்குவித்தார். ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார்.

அயோவா, அன்று வேறு கிழமை, அசோகமித்திரன்…

அவர் கதைகளில் கீழ்தட்டு மத்திய தர மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடே வெளிப்படும் மனிதாபிமானம், உறவில் ஏற்படும் சிக்கல்கள், எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தீட்டப்படும் சித்திரங்கள் மிக அழகாக அங்கதத்துடன் சொல்லப்பட்டிருக்கும்.

நானும், அசோகமித்திரன் அவர்களும்

அசோகமித்திரனின் வீச்சும், பரப்பும், ஆழமும், இன்னமும் பூரணமாக ஆராயவோ எழுதவோபடவில்லை. அவரை நகர மத்யதர வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் என்றவர்களுக்கும், அவரை வறுமையில்வாடுபவராக எழுதியவர்களுக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாம் தோராயமாய் அனுமானித்ததை உண்மை போல் சொல்கிறார்கள். வறுமையில்இருப்பது வேறு, வாடுவது வேறு.

அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது.யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே“கிணறும்” யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும்“பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும்

அமைதியின் அசாதாரணக் கூர்மை

அசோகமித்ரன் ஆங்கில மொழியுலகில் ஓரளவுக்கு நேரடியாக இயங்கிவந்தபோதும் அவருடைய உச்சம் தமிழில்தான் நிகழ்ந்திருக்கிறது. மந்தமான, நோய்க்கூறு மனநிலை வாய்த்த பிராந்திய அரசியல் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய படைப்புலகத்திற்கு புதிய வாசல்களை நிர்மாணித்த புண்ணியம் அவருடைய மொழிபெயர்ப்பாளர்களான லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், கல்யாணராமன் மற்றும் கோமதி நாராயணன் போன்றோரைச் சேரும். இத்தனைக்கும் மொழிமாற்ற பிரசுரங்களில் கடைநிலையில் வைத்து கௌரவிக்கப்படும் ஆன்மாக்கள் மொழிபெயர்ப்பாளர்கள்தான்.

உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம்

சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி, அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து தக்க நேரத்தில், நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல கடந்த காலம் பற்றி சொல்வதற்கு எப்போதும் ஏதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4

மணியனின் பயணக் கட்டுரைகளையோ, வேறு எழுத்துகளையோ நான் படித்ததில்லை. ஆனால் அவர் ‘எங்கே என்ன சாப்பிடக் கிடைக்கும்’ என்று எழுதியிருந்தால் அதில் என்ன தவறு என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. பலர் பயணக் கட்டுரை எழுதுபவர்களை ‘நல்ல வேளை, சாப்பாடு பற்றி எழுதிவிடுவீர்களோ’ என்று பயந்தேன் என்று புகழ்வதை அடிக்கடி கண்டிருக்கிறேன். சாப்பாடு என்ன மேலை நாட்டினரைப் போல நமக்கு கைகளால் தீண்டத் தகாததா? அதிலும் இட்லி.

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3

இரண்டு விதமான மனிதர்களுக்கு உலகம் இதயத்தில் இடம் தருகிறது. இந்திய மனதுக்கு இது அமைதியையும், செம்மையையும் வாழ்வாகக் கொண்ட இராமனாகவும், குதூகலத்தையும், சாகசத்தையும் வாழ்வுமுறையாகக் கொண்ட க்ருஷ்ணனாகவும் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலே சிவந்த நிறமும், நல்லதனங்கள் அனைத்தின் உருவகமாகவும் படங்களில் நடித்த எம்ஜியாரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் கருப்பான, புகைபிடிப்பதையும், குடிப்பதையும் திரையில் செய்யும் ரஜினிகாந்த். .