சாணம் உருட்டு வண்டு

தம்மைவிட 250 மடங்கு கனமான உருண்டைகளை ஒரே நாள் இரவில் இவற்றால் மண்ணுள் புதைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  அது மட்டுமல்ல, தம் உடல் எடையைவிட 1141 மடங்கு அதிக எடையை இவற்றால் இழுத்துச் செல்ல முடியும் என்பதை அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது, பயணிகள் நிறைந்த ஒரு இரட்டை அடுக்கு பேருந்தை ஒற்றை மனிதனாய் இழுத்துச் செல்வதற்கு சமம்.

பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் சில தொழில்நுட்பப் பயன்பாடு

கொய்மலர்களின் தலைநகரான ஹாலந்தில், கொய்மலர் வளர்ப்பு கொஞ்சம் சுணக்கம் கண்டிருந்தாலும் (வளர்ப்பு மட்டும்தான்; வணிகமல்ல), கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா நாடுகளில் கொய்மலர் வளர்ப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. ரஷ்யாவின் ரூபிள் சரிவுக்குப் பின் ரஷ்ய ஏற்றுமதி 2014-லிலிருந்து குறைந்தாலும், இந்த ஆண்டு (2017) கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், ரஷ்யாவிற்கு கொய்மலர் ஏற்றுமதி, என்ணிக்கை உயர்ந்த அளவு, வணிக மதிப்பு அதிகம் உயரவில்லை; ரஷ்யாவின் கொய்மலர் இறக்குமதி எப்போது 2013-ற்கு முன்பிருந்த நிலைமைக்கு வரும் என்றுதான் எல்லா கென்ய ஏற்றுமதியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய சரிவிற்குப்பின், ஆஸ்திரேலிய ஏற்றுமதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் புதிது புதிதாய் ஏதேனும் தொழில்நுட்பங்களும் அல்லது பழைய தொழில்நுட்பங்களில் ஏதேனும் புதிய மேம்பாடுகளும் வந்திருக்கின்றன. பரப்பளவுகள் அதிகரிக்கும் பண்ணைகளில், மேம்பட்ட கண்காணிப்பிற்கும், மேலாண்மைக்கும் இத்தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகவும் ஆகிவிடுகின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்…

பசுங்குடில் பயன்பாடும், கொய்மலர் வளர்ப்பும், வர்த்தகமும் – ஓர் அறிமுகம்

எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் – 1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை) 2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).

மகரந்தச் சிதறல்

ரீங்கார மகரந்தச்சேர்க்கை என்பது சில வகை செடி கொடிகளில் இருந்து மகரந்தத்தை கலைத்துப் போடுவது. அதற்கு ஒரு வகை வண்டு மட்டுமே உதவுகிறது. அந்தத் துளைபோடும் வண்டு பறப்பதை மென் நகர்வாக இங்கே படம் பிடித்திருக்கிறார்கள். இது இயற்கையாக பறக்கும் வானூர்தி. தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை செழிப்பாக்க “மகரந்தச் சிதறல்”

அனல் காற்று

செய்தி: 1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம் 2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி 3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் நிலைகளை நாடெங்கும் வீணாகப் போக விட்டதற்கு என்ன காரணம்? இது இன்று நேற்றல்ல “அனல் காற்று”

கருவிகளின் இணையம் – விவசாய உலகம் – பகுதி 15

காமிரா மூலம் முழு பண்ணையையும் சென்டிமீட்டர் விடாமல் படம் பிடிப்பதுடன், மண்ணில் உள்ள பல வகை ரசாயன அளவுகளையும் விமானத்தில் உள்ள உணர்விகள் அளந்து விடுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அல்லது மேக வழங்கிகளுக்கு மாற்றி, அங்குள்ள நிரல்கள் நம் உடலுக்கு ரத்த பரிசோதனை போல அனைத்தையும் உடனே சொல்லி விடுகிறது. இதன் உதவியுடன், எந்தப் பகுதியில் எந்த பயிர், அல்லது, எந்தப் பகுதிக்கு அதிக உரம் தேவை என்பது போன்ற முக்கிய முடிவுகளை விவசாயி எடுக்கலாம். பூச்சிகள் வரும் முன்பு, அவை அரிக்கப்போகும் பயிரில் முட்டையிடும். மேலே சொன்ன கையளவு விமானங்கள், இவ்வகை முட்டைகள் எங்கு பண்ணையில் எத்தனை உள்ளன என்று கூட சொல்லிவிடும். கண்ணுக்கு தெரியாத முட்டைகளைக் கூட துல்லியமாக படமெடுத்து செய்தியாக விவசாயிக்கு காட்டும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.

நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம். இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம்.

பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்

யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன…