மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”
Series: நூறு நூல்கள்
வாசிக்க வேண்டிய நூல்களுக்கான அறிமுகம்
ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன. அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது.
உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை
ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான்.
அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
தண்டபாணியின் உள் எண்ணங்கள் மிகச் சாதாரண மொழியில் எழுதப்பட்டாலும் அவரின் மன ஆழங்கள் அலசப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் ஓர் அறிஞராகக் காட்டப்படுகிறது. இதைக் கதாசிரியரின் சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும் நாவல் முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது.
ஒற்றன் – அசோகமித்திரன்
“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”
நிறமாலை
இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.
ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும், முதல் கதையுமான “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” இரண்டாம் உலகப்போர் பின்னணியில் ஜெர்மனி வதைமுகாமில் நிகழ்கிறது. சிறையில் சிக்க நேர்ந்த பொதுஜனங்கள், வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அவலங்களை விவரித்தபடி துவங்குகிறது கதை.
லஜ்ஜா: அவமானம்
எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.
துருவன் மகன்
அவர் மனதிலும் துருவன் மகன் ஞானவானாக, சத்திய வடிவாக, ஜாதிகளைப் பாராதவனாக, அறிவோடு எதையும் ஆராய்பவனாகத் தானிருக்கிறான். வணிகர் விரிக்கும் வஞ்சகச் செல்வ வலையில் அவர் தலைமை புரோகிதரைப் போல மயங்கவில்லை. வறட்சியால் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் தன் கூட்டத்தினரை தடுத்து நிறுத்த அவர் ரத்னாகர ஏரியைத் தோண்டச் செய்கிறார். அவர்கள் நிராசையுற்று அந்தப் பணியை நிறுத்த நினைக்கையில் தங்கக் கலசம் ஏரியின் அடியில் இருப்பதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். ஊரெங்கும் நதிகள் இளைத்து ஏரிகள் வற்றிவிட இவர்கள் குடியிருப்பின் ஏரியில் நீர் வருகிறது;
கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது.
பாகீரதியின் மதியம் – விமர்சனம்
நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.
புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
பிறத்தலுக்கும், இறத்தலுக்குமான இடைவெளிகளை எப்பொழுதும் நீளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றோம். அதை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பதில் இயற்கையோடு நமக்கான பிணக்கு இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. ஆயினும் எதார்த்த மனநிலையில் கடந்து செல்ல இயலாத அதைரியத்தின் அவலத்தை அழுகையாய், ஒப்பாரியாய் வெளிக்காட்டிக் கொள்கின்றோம்.
களியோடை
கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.
தத்வமஸி: புத்தக அறிமுகம்
நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால் வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.
பாமாவின் கருக்கு
பனங்கருக்கால் அறுபடுவது போல் வாழ்க்கை அமைந்துவிடும்போது அது வாழ்க்கையின் குறியீடாகிவிடுவது இயல்புதான். ‘கருக்கு’ புத்தகத்தைப் படிப்பதற்கு முன் கருக்கு என்ற சொல் புதுக் கருக்கு என்று நாம் கூறும் பொலிவைக் குறிக்கிறது அல்லது விடிவதற்கு முன் உள்ள கருக்கலைக் குறிக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். பனங்கருக்கைத் தொட்டிருந்தால் தானே அது இரு பக்கமும் ரம்பம் போல் அறுக்கும் கத்தி போன்றது என்று தெரியும்? பிறகு ஒரு முறை கிராமம் ஒன்றிற்குப் போனபோது பனங்கருக்கைத் தொட்டுப் பார்த்தேன். சட்டென்று விரலைக் கீறி விட்டது
பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.
கண்ணனை அழைத்தல்
அம்பையின் இந்தக் கதை எனக்கு அம்மா, அம்மாச்சி, பெரியம்மா, பக்கத்துவீட்டு அம்மா, அத்தை, அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது. இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்க அம்மாச்சியும், சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும், படித்த அக்காவும், வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்
பாரதியின் இறுதிக்காலம்
பாரதியின் இறுதிக்காலம் அத்தனை சுலபத்தில் முடிந்த ஒன்றா? இக்கேள்வியைத் தொடர்ந்த மணிகண்டன், யானை சம்பவத்துக்குப் பின்னரும் பாரதி இலக்கிய விசாரங்களில் நிறைய ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டடைந்ததோடு மட்டுமல்லாது “கோவில் யானை” எனும் படைப்பையும் தந்துள்ளதாக அறிகிறார். மணிகண்டனின் ஆய்வுப்படி, தனக்கு நடந்த சம்பவத்தைக் கொண்டு கோவில் யானை எனும் நாடகத்தை எழுதிய பாரதி அதை முதலில் 1920களில் சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கையில் ஸி.சுப்ரமணிய பாரதி எனும் பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு கலைமகள் இதழிலிருந்த நாடகம் இவர் கைக்குக் கிட்டியிருக்கிறது.
குவெம்புவின் படைப்புலகம்
”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,
”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”
என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.
”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”
தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
இருபத்தியோரு வயதில் படித்ததற்கும், இப்போது நாற்பத்து நாலு வயதில் படித்ததற்கும் நிறைய வித்தியாசாங்கள். எதிர்பால் ஈர்ப்பு தணிந்து, காமம் கனிந்தபின் நாவலில் பிடித்த இடங்கள் கூட மாறிவிட்டன. இப்போது படிக்கும்போது முதல் வாசிப்பின் பரபரப்போ, கிளர்ச்சியோ, இளமைக்கே உரிய இனக்கவர்ச்சியோ அதீதமாய் இல்லாமல் நிதானமாய் படிக்க முடிந்தது. தி.ஜா-வின் வரிகளையும் உரையாடல்களையும் நன்கு கவனித்தேன். இந்த முறை பிடித்த விஷயங்களே வேறாக இருந்தன. முதல்முறை படித்தபோது பரவசமடைந்த இடங்கள் சாதாரணமாய் கடந்துபோயின
“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.
புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
கமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள்.விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும் .
ஆகாரசமிதை
ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …
உயர்ந்த உள்ளம்
பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.
எல்லைகள் அற்ற வெளி
கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும் கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று
மிருத்யுஞ்சய்
‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் “மிருத்யுஞ்சய்”
ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.
தப்பித்தல் நிமித்தம்
முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனத்துக்கு இடையிலான போராட்டத்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது. காமமும் மரணமும் தொடர்ந்து ஒன்றை ஒன்று நிரப்பும் இரு வேறு விசைகளாக மனித மனதை அலைக்கழிக்க வைத்தாலும் ஒன்று திரும்பவியலா நிகழ்தகவைக் கொண்டது என்பதால் மற்றொன்றின் அலைகழிப்பு மனிதனின் கீழ்நிலையின் முடிவுறா ஆழத்தைக் காட்டும் படிமமமாக என்றும் அமைந்துவிடுகிறது.
ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
இந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின் பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம் பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான்.
ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
வெறுப்பின் பலவித அலகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன.
சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
வேணுகோபாலின் சொந்த ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.
பசு, பால், பெண்
மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப் பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை. இந்தப் பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்துகொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும். பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது.
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
கட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை.
வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்
திருவரங்கன் உலா
இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.
ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் …
அஃகம் சுருக்கேல்
தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.
அறுபடலின் துயரம் – பூக்குழி
“பூக்குழி” போன்ற இலக்கிய ஆக்கங்களும், “ஃபேன்ட்றி” போன்ற கலைப் படங்களுமே அந்தந்த காலத்தின் அவலங்களைக் கண்முன் நிறுத்தும் சாட்சியங்களாக விளங்குகின்றன. தர்மபுரி அரசு கல்லூரி ஒன்றில் தற்காலப் பணிமாற்றதில் சென்றிருந்த பொழுது, உயர் சாதி சமூகத்தில் பிறந்த பெண்ணைக் காதல் திருமணம் புரிந்த தலித் இளைஞரான தர்மபுரி இளவரசனின் மரணம் சம்பவித்த பொழுது – “கல்கி” இதழில் தொடராக இந்த நாவலை பெருமாள்முருகன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசனின் மரணமே இத்தொடரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் தனது முன்னுரையில் பெருமாள்முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …
தீப்பொறியின் கனவு
பெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக்
புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே , தமிழகத்தின் முக்கியமான வகை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் ஆசிரியர். மாறிவரும் காலத்தை சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து, தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட தேசிய முதலாளி ஆகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட ஒரு லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈரக்கப்பட்டு, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரரான இடது சாரிப் பார்வைகொண்ட ஆரான் … இந்த மூன்று இயக்கங்களும் தான் தமிழ்நாட்டின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் …
மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
கன்னடத்தில் நவீன இலக்கிய முன்னெடுப்புகளின் முக்கிய பங்களிப்பாளரான லங்கேஷ் அவர்களின் எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்திருப்பது முக்கியமான முயற்ச்சியாகும். இதை மிக அழகான தரத்திலும் வடிவத்திலும் பதிப்பித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியளப்பது. இப்புத்தகத்தில், இரண்டு விதமான கவிதை சரடுகள் ஓடுகின்றன. ஒன்று லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும், இன்னொன்று திரு. நல்லதம்பி அவர்களின் புகைப்படங்கள் மூலமாகவும். கன்னட மொழியில் நல்ல பரிச்சயம் உடையவரும், கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவருமான திரு.நல்லதம்பி அவர்கள், தமிழுக்கு இது போல மேலும் பல முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
இரா. முருகனின் நளபாகம்
முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.
பின்கட்டு
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”
நீர்ப்பறவைகளின் தியானம்
பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன். அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.
ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”