இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.
ஆசிரியர்: ஓப்லா விஸ்வேஷ்
ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்
‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது.’ ராபர்ட் சௌதி (Robert Southey). சௌதி, ஆங்கிலக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி அரசவைக் கவிஞர் (பொயெட் லாரியேட்- Poet Laureate) என்ற பதவியையும் தாங்கியவர். பிற்காலத்தில் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷார்லட் ப்ராணடீ (Charlotte Bronte) என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்டபடி எழுதியுள்ளார்.
ராபர்ட் சௌதியின் அந்தக் ‘குற்றச்சாட்டு’ ஷார்லட் ப்ராண்டீயின் மனதை எவ்வாறு புண்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறில்லாமல் அந்த இளங்கவிஞர் தன்னைப் பற்றின விமர்சனத்தில் உள்ள உண்மையான பொருளை உணர்ந்து மேலும் அறிவுசார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்தது அந்த இளம் வயதிலும் அவருக்கிருந்த அறிவு முதிர்ச்சியைக் காண்பிக்கிறது.
ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்
இது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை.
ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு
இமயமலை மீதிருக்கும் தீராத காதலாலும், தன் முந்தைய பயணங்கள் வழியே இந்தியாவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததாலும், கங்கை நதி ‘இந்தியாவின் இதயம்’ என்பதையும், அவர் மேற்கொள்ளும் சாகசப் பயணம் ஒருவிதத்தில் ‘கலாசார யாத்திரை’ என்பதும் ஹிலரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அப்பயணத்தில் யாருக்குமே எளிதாகக் காணக் கிடைக்கும் அழுக்கடைந்த வாழ்க்கையைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லவில்லை அவர். ஆனால் அதே நேரத்தில், பெரும்பாலான மேற்கத்திய எழுத்தாளர்கள் போல இந்த அழுக்கையும், துயரத்தையும் மிகைப்படுத்தாமல், இந்தியாவைக் குறித்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சியடையாமல், ‘இது இப்படியிருக்கிறது’ என்று தன்னுடைய பார்வையை மட்டுமே பதிவு செய்கிறார் ஹிலரி.
ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும்
இந்த கார்ட் ப்ராக்ரஷனை அதன் ட்யூனோடு சேர்த்து கீபோர்டில் வாசிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு மேற்கத்திய செவ்வியல் வடிவமைப்பைப் போலவே இப்பாடலின் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் முழுமையான ஹார்மோனி துணையை (Harmonic Accompaniment) உருவாக்கியிருக்கிறார் இளையராஜா.