அந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.
“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”