இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைக் கதாபாத்திரங்களாக இல்லை. சமூகத்தின் இயக்க சக்திகளாக இருக்கிறார்கள். உண்ணிமாயா, கொழும்பிலிருந்து பொருளாதார வசதியுடன் வரும் கொழுந்தனை விரும்பி, அதே மனிதன் வேலை இழந்து வறுமையுடன் திரும்பியபோது ஒரு கிழிந்த பாயை மட்டும் கொடுத்து ஒதுக்கும் காட்சி, மனித உறவுகளில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
Tag: கோவிலன்
சகுனம்
எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும்
