தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!