‘என் அறியாமைகள் எனக்குத் தெரிகின்றன; அப்படியென்றால் நான் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்?’ இந்தப் புதிரை விடுவிப்பதற்காக, அவர், அறிவுஜீவிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களான அரசியல்வாதிகள், கவிஞர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார். துறைசார் அறிவு அவர்களுக்கு இருந்த போதிலும், அதனாலேயே மற்ற அனைத்திலும் தாங்கள் அறிவு மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
