எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்

முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது.  ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.

றெக்கை அத்தியாயம்   16

This entry is part 15 of 17 in the series றெக்கை

ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும்  சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும்.  பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார்  மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு  கொடுக்க எங்கே முடியுது. 

துளிமம்

உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்?  பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது.  நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது. 

ஒருமையுள் ஆமைபோல்

எனவே வைராக்யம் என்பது உலகை நிராகரிப்பது அல்ல. உலகத்தினின்றும் ஓடிப்போவது அல்ல. எனக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அல்லது மகிழ்ச்சி தேவைப்படும்போது நான் அவற்றுக்காக உலகைச் சார்ந்திருக்காமல், நிலையான ஒன்றையே சார்ந்திருப்பேன் என்ற தெளிவுதான் பற்றின்மை என்று அழைக்கப்படுகின்றது. 

தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு

இந்த நான்கு தலைப்புகளில் விஷயம், பிரயோஜனம், சம்பந்தம் ஆகிய மூன்றும் வேதாந்த நூலைப் பற்றிய தலைப்புகளாகும். இந்த மூன்றையும் வேதாந்தம் தீர்மானிக்கிறது. இவற்றைத் தன்னுள் கொண்டிருப்பதாக ஒரு வேதாந்த மாணவனுக்கு உறுதியளிக்கிறது. அதிகாரி என்ற தலைப்பு மட்டும் மாணவனைச் சார்ந்தது. அதிகாரித்துவம் எனப்படுகின்ற வேதாந்தக் கல்வியை அடைவதற்கான தகுதிகளை அவன்தான் அடைந்திருக்க வேண்டும்.

தெய்வநல்லூர் கதைகள்- 32

This entry is part 32 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அன்று மாலை சந்திப்பில் யக்கா கொதித்தார் – “பிரிக்காஷன், டிக்காஷன்னு .. அறிவில்லாதவன விட தனக்குதான் அறிவிருக்குன்னு நெனக்கறவன் நாக்குலதான் இபிலீஸ் எறங்குவான்னு நம்ம உப்புக்கண்டத்தோட பெரிய அத்தா சொல்லுவாரு. சரியாத்தாம்ல இருக்கு, சும்மா ரெண்டு வரிக்கு ஒருக்கா இங்லீசுல பேசுனா அறிவாளின்னு நெனப்பு அவருக்கு. இங்க்லீசுதாம்ல இவருக்கு இபிலீசு.  மீச சார், தமிழ் சார்லாம் அதுக்கப்பறம் ஒரு வார்த்த பேசுதாங்களா அதப்பத்தி? புதுசா வந்த வேல்முருகன் சார் கூட அத மறந்துட்டு படிப்பைப் பாருடேன்னு அன்பாத்தான சொன்னாரு. நீ ஏம்டே பிரேம் அவர் முன்னாடி அழுத?”  

தெய்வநல்லூர் கதைகள்- 31

This entry is part 31 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த  ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண்  உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது. 

செயற்பாலது ஓரும் அறன்

மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

This entry is part 15 of 9 in the series பொது நலம்

ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

தஞ்சம் புகுந்த தமயந்தி

This entry is part 5 of 8 in the series நள சரித்திரம்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன்.  இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?  

தடுப்பூசிகளின் அலை

This entry is part 14 of 9 in the series பொது நலம்

வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள், கட்டர் ஆய்வகம் தயாரித்த தடுப்பூசியால் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கட்டர் தடுப்பூசியில் உயிருள்ள, வலிமையான போலியோ வைரஸ் இருந்தது. அந்த ஆய்வகத்தின் தடுப்பூசியால் 120,000 குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்; 200 குழந்தைகள் நிரந்தரமாக முடங்கினர்; 15 பேர் இறந்தனர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்).

இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒரு பாமரனுக்குப் புரியும் வகையில், அதாவது கவனத்தைத் திரும்பத் திருத்தவும் அல்லது சீராக்கவும் (attention restoration) அமைத்த விதம். நாம் ஒரு நாள் முழுக்க வெவ்வேறு பணிகள் மற்றும் கணினி, கைபேசி போன்றவற்றில் ஈடுபட்டு சோர்வடையும் உணர்வு பல நேரங்களில் இருப்பது உண்டு. அந்த நேரத்தில் வெளியில் பசுமை சூழ்ந்த இடத்திற்குச் சென்று ஒரு 15-20 நிமிடங்கள் நடந்துவிட்டு வரும்போது, ஒருவிதமான நிம்மதியை அனுபவித்திருப்போம். அந்தக் காலத்தையும் உணர்வையும், பெர்மன் ஆராய்ச்சிக் கணக்குகளோடு இணைத்து காட்டுகிறார்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2

This entry is part 2 of 9 in the series ஹைக்கூ

அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 9 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

கொலகலூரி இனாக்

கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று  யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள்

கணிதமா இயற்பியலா?

கிட்டத்தட்ட இணையான சமன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஹில்பர்ட், ஐன்ஸ்டைனது வெற்றியை கேள்விக்குள்ளாக்காமல் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.  மேலாக, ஐன்ஸ்டைனுக்கு கணிதத்துடன் இருந்த ‘பிணக்கு’’ – பொதுவாக சொல்வதானால் இயற்பியலுக்கும் இருந்த பிணக்கினை மிக அழகாக பின்வருமாறு கூறினார்.

தொடரும் விதுர நீதி

மனிதனின் உடல் ஒரு தேர். ஆன்மா அந்த தேரை செலுத்தும் தேரோட்டி. உணர்வுகள் தேரை இழுக்கும் குதிரைகள். அந்த உணர்வுகளை பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த பயின்ற ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாய் பயணிக்கிறான். உணர்வுகளை அடக்க முடியாதவன் சொல்ல இயலாத துன்பங்களை அடைகிறான்.

நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து

This entry is part 3 of 8 in the series நள சரித்திரம்

யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது.  இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம்.   இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.   

கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்

பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.  

தமயந்தியின் ஸ்வயம்வரம்

This entry is part 2 of 8 in the series நள சரித்திரம்

தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது.  போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்?  நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின்  என்னை நம்ப வேண்டுமே,  நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?

தெய்வநல்லூர் கதைகள் – 26

This entry is part 26 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது.   ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது.

முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

This entry is part 12 of 12 in the series சமூக உணர்ச்சி

அலுவலகங்களிலும் இதே விஷயம் நடக்கிறது. தலைவர்கள் எப்படி சிக்கலான முடிவுகளை எடுக்கிறார்கள், தவறுகளை எப்படி ஏற்கிறார்கள், பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் தலைவர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், அதிலிருந்து கற்றுக்கொள்வது பற்றிப் பேசினால், அந்த நிறுவனத்தில் ஒரு கற்றல் கலாச்சாரம் உருவாகும். ஊழியர்களும் தங்கள் தவறுகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்க முயல்வார்கள்.

தொடர்ந்த தூதுப்படலம்

சிறந்த அரசனானவன் தன் நல்லறிவைக் கொண்டு நல்லது கெட்டது என்ற இரண்டை வேறுப்படுத்திப் பார்ப்பான். பரிசு, சமாதானம், வேறுபடுத்துதல் மற்றும் பலம் இவற்றை உபயோகப்படுத்தி நண்பர்கள் , எதிரிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டுப்படுத்துவான். தன் ஐம்புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பான். இராஜ்யங்களுக்கு இடையேயான ஆறுவிதமான உறவுகளை அறிந்திருப்பார்கள். ஏழு விதமான கெட்டவைகளிடம் இருந்து ( ஆசை, சூதாட்டம், வேட்டை, கொடுஞ்சொல் கூறுவது, குடி, கொடுமையான தண்டனைகள் விதிப்பது மற்றும் செல்வத்தை வீணடிப்பது) விலகி இருப்பான்

கவிதையில் வரலாற்றுணர்வு

பழைய மரபும், புதிய படைப்பும் ஒன்றின் மீது மற்றது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தமிழில் கம்பரைக் கொண்டு விளக்குகிறார் பேராசிரியர். ‘கம்பரைப் படிந்தோமானால் அவருக்கு முன்பு சென்ற அத்தனைக் கவிஞர்களின் படைப்புகளையும் அறியும் பேறு நமக்குக் கிடைத்ததாகும்’ என்று சொல்லும் பேராசிரியர், சங்கக் கவிதை, ஆழ்வார் பாசுரம், சீவக சிந்தாமணிக் காப்பியம் முதலான முன்மரபுகள் எல்லாம்

பாபிநேனி சிவசங்கர்

உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன

மருதத் திணை

அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’ 

சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு

This entry is part 10 of 12 in the series சமூக உணர்ச்சி

நண்பர்களின் ஆதரவு  என்பது ஒருவழிப் பாதை அல்ல. உதவி பெறுபவருக்கு மட்டுமல்ல, உதவி வழங்குபவருக்கும் மன நலன் மேம்பாடு கிடைக்கிறது. இது சமூகக் கற்றலின் அழகான அம்சமாகும் – கற்பிப்பவனும் கற்கிறான், உதவுபவனும் உதவி பெறுகிறான். ஒரே தடைகளை இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது கலந்து பேசும்போது அந்தத் தடைகளை அவர்கள் இருவரும் சேர்ந்தே தகர்த்தெறியும் வழிமுறைகளை எளிதாகக் கண்டுகொள்கிறார்கள்.

அஸ்வத்தாமனின் கோபம்

“எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!”

எழுது சித்திரம்

கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.

ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?

ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.

றெக்கை – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 17 in the series றெக்கை

“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும்  குழந்தை பெத்துக்கலியா? அவ   தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப்  போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ  பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன்  முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”

12. என்றென்றும் நிலைத்திருப்பது  

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.

தொடரும் தேடல்

புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான்.  ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான்.  அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான்.  அருகில் ஒர் சிறுவன்.  ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.

வதனமுறு பெரும் கொள்கை

காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்?  பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும்.  இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.

சகோதரியை தேடி

‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை  குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான்.  தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர்.   அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான். 

றெக்கை – அத்தியாயம் 1

This entry is part 1 of 17 in the series றெக்கை

அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.  போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.

நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்குமா

அக இலக்கியத்தில் தோழியும் செவிலியும் உயிர்ப்புள்ள பாத்திரங்கள். தலைவியின் மனத்தின் குரல் என்றே தோழியை      அடையாளப்படுத்திவிடலாம். ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாகவே இணைந்து தோன்றுகிறார்கள். தலைவியின் காதலைச் செவிலிக்கு உணர்த்த ஒரு விரிவான உரையாடலைத் தோழி தொடங்குகிறாள். தெய்வத்தின் மீது சூள் வைத்து, அன்று நடந்தது இது தான் என்று நாடகியமாகத் தெரிவிக்கிறாள். சில தகவல்களை நடப்பியல் பாணியில் இணைக்கவும் செய்கிறாள்.

சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்

This entry is part 6 of 12 in the series சமூக உணர்ச்சி

நேர்மறையான பள்ளி சூழல் சமூக உணர்ச்சி கற்றலுக்கான அடித்தளமாக செயல்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மாணவர்கள் தங்கள் புதிய திறன்களை தயக்கமின்றி பயிற்சி செய்ய முடிகிறது. தவறுகள் செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், ஆதரவான உறவுகளின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

10. மீண்டெழல்

இருண்ட காலத்தில் எழுதப்பட்ட ஜியோவன்னி போக்காசியோயின் டெகாமெரான் கதைகள் மானுடத்தின் உச்ச உணர்வுகளை முன்வைத்தன. அதேசமயம் அன்றிருந்த அதிகாரங்களை பகடி செய்தன. கடவுளுக்கு எதிரானது என்றும் பாவத்தை பரப்புவது என்றும் சவர்னரோலா (Girolamo Savonarola) என்ற மதகுருவால் 1497 ஆம் ஆண்டு பொதுஇடத்தில் எரிக்கப்பட்டது.

கீசக வதம்

இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவளை அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள்.

வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்

CRISPR எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த RNA உருவாகும் ஜீனை சில பட்டாம்பூச்சிகளில் நீக்கி பார்த்தனர். அதனால் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது: பட்டாம்பூச்சிகளின் கருப்பு நிறங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன; கருப்பு புள்ளிகள் இருந்த இடங்களில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்கள் மட்டும் காணப்பட்டன. இதன் மூலம், இந்த RNA இல்லாமல் பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாகாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது

காலைப் பூசல்

வேட்கையானது உயிரின் மர்மமான இடங்களில் புகுந்து ஆன்மாவுக்குப் பொறுக்க முடியாத இன்ப அவஸ்தை ஆகும் நிலையும், அது நிலைத்து நிற்காமல் மறையும் துயரும் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது பாசுரத்தில். இரவு முழுதும் கிளைத்த இன்பத்தை விட, விடிந்ததும் பெற்றம் மேய்க்கச் செல்ல இருக்கும் பெருமானின் பிரிவு பற்றிய அச்சம் மேலிடுகிறது.

8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்

பண்டைய சீனாவில் மஞ்சள் ஆற்றின் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பேரரசர் யாவோ (Yao), ஹுவாங்டி பேரரசின் இளவரசன் குன் (Gun) வசம் அணைகள் கட்டி வெள்ளத்தை தடுக்கும் பொறுப்பை அளிக்கிறார். குன் ஒன்பது ஆண்டுகள் முயன்றும் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து, தானே வளரக்கூடிய, சுவாசிக்கும் மண்ணை ஞானத்தின் ஆதாரமாக கருதப்படும் ஒரு ஆமை திருடி வந்து அவரிடம் தந்தது. அதைக்கொண்டு அவர் அணைகளை, தடுப்பு அரண்களை கட்டுகிறார்.

ஈர்ப்பு அலைகள் – 11

This entry is part 11 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

முதலில் லிசா என்பது ஒன்றல்ல, 3 விண்வெளிக் கலங்கள். இவை முக்கோண அமைப்பில் பூமியைச் சுற்றி வலம் வரும். ஒரு கலத்திலிருந்து இன்னொன்றிற்கு உள்ள தூரம் 2.5 மில்லியன் கிலோமீட்டர்கள். அதாவது ஒளி, ஒரு கலத்திலிருந்து இன்னொன்றைச் சென்றடைய 8.3 நொடிகள் ஆகும்! இந்த தூரம் துல்லியமாக எப்பொழுதும் இருக்கும்படி, இந்தக் கலங்களில் மிகச் சிறிய மோட்டர்கள் இயங்கும்.

தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை

ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஹர்ஷனின் சபதம்

இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும்  என்னை செயலற்றவனாக்கி விட்டன.  இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை.  இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா? 

ஈர்ப்பு அலைகள் – பகுதி 10

This entry is part 10 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

எப்படி மின்காந்தத் தொலைநோக்கியில், Spectroscopy  ஒரு அருமையான நுட்பமாகியதோ, அதே போல, ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண், நீடிப்பு, polarization போன்ற அம்சங்கள் தூரத்துப் பொருட்களின் கையெழுத்துக்கள். அத்துடன், ஒரு கருந்துளையின் மோதல், மற்றும் நியூட்ரான் நட்சத்திரத்தின் சேர்க்கை போன்ற நிகழ்வுகள், அவற்றின் ring down waves என்று அழைக்கப்படும் கடைசி அலைகள் நமக்கு பல புதிய புரிதல்களை உருவாக்குகிறது.

சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

This entry is part 9 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

This entry is part 8 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது