நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம். இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம்.