சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி, அல் கோர், (Al Gore) புவி சூடேற்றம் மற்றும் அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி எல்லோருக்கும் புரியும்படி பவர்பாயிண்ட் காட்சியளிப்பு செய்து நோபல் பரிசையும் தட்டிச் சென்று விட்டார். அவர் தலைவலியைப் பற்றி சொல்லப் போய், உலகிற்கு திருகு வலி வந்த கதைதான் போங்கள்! ஒரு புறம் தீய விளைவுகளை விஞ்ஞானிகள் விளக்கோ விளக்கென்று விளக்குகிறார்கள். யாராவது, ஏதாவது, செய்வார்கள் என்று யாரும், எதையும், செய்யாமல் ஒரு 6 வருடம் போயே போய்விட்டது! அட, பிரச்சனையை அழகாக சாட்சியங்களுடன் சொன்ன விஞ்ஞானிகள் ஏன் அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை?

கவிதைகள்

சில நிமிடங்களின் பின்
மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது
வெய்யிலை எழுத கொஞ்சமும் இடமில்லை.
தாள்கள் முழுவதும் ஈரமாகின
‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று
கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்
எனக்குள் இருந்த வாசகன்

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல்

“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”

சாப்ளின் : செம்மையும் சமூகமும் – 1

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது.

வெகுளாமை

பெரியசாமிக்கு இந்தத் துறையில் கிட்டதட்ட பதினோரு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்.`பொய்` அனுபவ வருடங்கள் கலக்காமல் முறையாக கேம்பஸ் இண்டர்வியுவில் நுழைந்து முதல் ஐந்து வருடங்கள் புரோக்ராமராகவே இருந்தார், கடுமையாக, அதிகம் பேசாமல் உழைத்தார். மாடுல் லீட், டீம் லீட், ப்ராஜெக்ட் லீட் என்று படிப்படியாக ப்ராஜக்ட் மேனேஜராக மௌன உழைப்பு. இப்போதா, துறைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டால் போதும் லீட் பொசிஷன் எதிர்பார்க்கிறார்கள். கோட் (code) அடிக்க மாட்டார்களாம். வளர்ந்துவிட்டார்களாம். மேற்பார்வைதானாம். ராஸ்கல்கள்!

ஆலென் ட்யூரிங்

கணினியின் கீபோர்டைத் தட்டும் அனைவரும், ஸ்ப்ரெட்ஷீட்டையும் வர்ட் டாக்குமெண்ட்டையும் திறக்கும் ஒவ்வொருவரும், ட்யூரிங் இயந்திரத்தின் அவதாரங்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை, என்று அப்போது எழுதியது டைம். கணித மேதை, தத்துவவாதி மற்றும் மறையீட்டு பகுப்பாய்வாளர் (Cryptologist) என்ற பன்முக ஆளுமையான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலென் ட்யூரிங் கணிணியியலின் தந்தை என அறியப்படுகிறார். அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு உலகம் முழுதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆதவனின் புனைவுலகம்

எந்த ஒரு எழுத்தாளரின் படைப்பையும் நாம் ஏன் விரும்புகிறோம்? அவர் நம் புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறக்கிறார் என்பது ஒன்று. இன்னொன்று, நமக்கு மிகவும் பரிச்சயமான, நாமறிந்த உலகைக் குறித்தும் அதன் மனிதர்களைக் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோமோ, அதையே நம்மைவிட அழகாக, மிகச் சரியான சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். காகித மலர்களைப் படித்தபின் எனக்கு மேற்சொன்ன இரண்டுவித உணர்வுகளும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. செல்லப்பாவும் விஸ்வமும் கணேசனும் பத்ரியும் எனக்கு மிக நெருக்கமானவர்களானார்கள். அவர்களில் என்னில் பல பகுதிகளைக் கண்டேன், அவர்கள் என் வெவ்வேறு முகங்களைப் பிரதிபலித்தார்கள்.

புழுதியில் வீணை

ராஜாஜி பாரதியை குறுகிய நோக்கில் அன்றி, விரிவான தளத்தில் புரிந்து கொண்டிருப்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. எனினும், ராஜாஜியின் முதலில் சொல்லப்பட்ட கூற்று தொடர்பாக நாம் எழுப்பக்கூடிய இன்னொரு எதிர்கேள்வி உண்டு: ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா என்ன? இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, ‘வேதாந்தி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்னை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்.

ஜெயராமன் எனும் கானுயிர் ஆர்வலர்

கானுயிர் புகைப்படக் கலைஞர்(Wildlife Photographer) திரு.ஜெயராமன் இத்துறையில் பிரபலமானவர். 1970-களில் துவங்கி இன்று வரை சுமார் 50 வருடங்களாக தொடர்ந்து பயணிக்கும் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர். உலகளவில் பல விருதுகளை பெற்றவர். பல புது வகை உயிர்களுக்கு இவரது பெயரின் அடிப்படையில் என்று பெயர்(Myrmarachne jayaramani & Roorchestes jayarami) சூட்டப்பட்டுள்ளது. இத்துறையில் தனது ஈடுபாடு குறித்து பேசும் போது ரசனை என்பதை தாண்டி, அது தன்னுடைய இருத்தல் சார்ந்தது என்று சொல்கிறார். தனது அனுபவத்தை பற்றி பேசும் ஜெயராமன் இப்படி சொல்கிறார் : “அதிக நாட்கள் கானகங்களிலே இருப்பதாலும், ஒரு நாளின் அதிக நேரத்தை இயற்கைச் சூழல்களுக்கு மத்தியிலேயே செலவழிப்பதாலும் ஒரு மனிதனுக்கு அதிக முன்னெச்சரிக்கை உணர்வு, சூழலோடு ஒத்துப் போகிற தன்மை, உடன் எதிர்வினை புரியும் குணம் அனைத்தும் வந்து விடுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளின்படி, ஒரு தேர்ந்த இயற்கையியலாளன் மற்றும் கானுயிர் புகைப்படக் கலைஞன் மேன்மையான நடத்தைகளையும், உயர்ந்த மனிதத் தன்மைகளையும் கொண்டு நீண்ட நாட்கள் சீரான உடல்நலத்துடன் வாழ்கிறான்”. கானுயிர்கள், பறவைகள் குறித்து ஆழமான புரிதல்களை கொண்டிருக்கிறார். சூழலியல், அதன் சமநிலை குலைவு மற்றும் இதனால் மனித குலம் அடையப் போகும் வீழ்ச்சி குறித்தும் தனது கருத்துக்களை விரிவாக இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார்.

ஆதவனுக்காக…

சாலையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் ஆணும் பெண்ணும், உரையாடுகிறார்கள். தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றொருவரை எடை போடுகிறார்கள். ஒன்றாக நீந்துகிறார்கள். நடன விடுதிக்குச் செல்கிறார்கள். காமத்தைப் பற்றி எழுதுவதும் காமத்தை தூண்டுவதுபோல் எழுதுவதும் ஒன்றல்ல. ஆதவன் பின்னதைச் செய்யவில்லை.

ஆயிரம் தெய்வங்கள் – இலியத் – ஒடிஸ்ஸே

ஸீயஸ் மனம் குளிரும்படி ஸீயஸ்ஸுக்கு யாகம் நடத்தினார். நிறைய பலிகளை வழங்கினார். ஸீயஸ் மனம் மகிழ்ந்து நல்ல சகுனங்களைத் தோற்றுவித்தார். யாகம் நிகழ்ந்தபோது, ஹோம குண்டத்திலிருந்து ஒரு சர்ப்பம் வெளிவந்து அருகில் உள்ள மரத்தில் மேல் சென்று தாய்ப் பறவையையும் அதன் ஏழு குஞ்சுப் பறவைகளையும் உண்டுவிட்டு கீழிறங்கி கல்லாய் மாறியது. இதற்கு விளக்கம் அளித்த கல்காஸ், இலியத் முற்றுகை பத்தாண்டுகள் நிகழும் என்றும், ட்ரோஜன்கல் மடிவர் என்றும் இறுதி வெற்றி கிரேக்கர்களுக்கே என்றார்.

தீனித் தின்னிகள்

தினகர் முதலில் காரத்தை சாப்பிடுவான். மிகவும் பொறுமையாக அதை முடித்துவிட்டு, பிறகுதான் ஸ்வீட்டுக்கு வருவான். அதையும் கடகடவென்று சாப்பிடமாட்டான். முனையிலிருந்து சிறிது, சிறிதாக கடித்து சாப்பிடுவான். இதற்கெல்லாம் அவன் கிட்டத்தட்ட இருபது நிமிஷம் எடுத்துக்கொள்வான். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருக்கும் என்னிடம், கடைசி பிட்டை ‘‘இந்தா…’’ என்று நீட்டுவான். நான் ஆசையாக கையை நீட்டும்போது, டபக்கென்று அப்படியே அவன் வாயில் போட்டுக்கொண்டு சிரிப்பானே ஒரு அயோக்கியச் சிரிப்பு…

ஹு இஸ் கம்பர் ?

இன்னும் பத்து வருடங்கள் கழித்து பிறக்கப் போகிற எனது பேத்தி, ‘வாட் இஸ் தமிழ் கிராண்ட்பா?’ என்று கேட்டால் நான் வியப்பு அடைய மாட்டேன். அது எமது ஊழ் வினை. உறுத்து வந்து ஊட்டுகிறது என்ற சிலப்பதிகார வரிகளால் ஆறுதல் கொள்வேன்.

மகரந்தம்

முன்பு வழக்கம்போல விவசாயிகள் இன்னும் மண்குடிசைகளில் இருந்து இதை உற்பத்தி செய்தனர், இடைத் தரக நிறுவனமான ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம் பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டது. சமீபத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் அவர்களுக்குக் கிட்டும் பங்கு உயர்ந்திருக்கிறதாம். இதுவுமே இன்னும் அமெரிக்க நிறுவனத்துக்குத்தான் லாபம் பெருமளவில் போகிறபடி இருக்கும். அமெரிக்கர்கள் லாபத்தைப் பிறருக்கு விட்டு விடுவார்களா என்ன? ஆனால் ஏதோ ஒரளவு ராஜஸ்தானின் விவசாயிகள் வாழ்வில் சிறிது முன்னேற்றம் வந்திருக்கிறது. மண் குடிசைகளை விட்டு, கல் கட்டிடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்களாம்.

பருவங்களின் பார்வையாளர் ஓஸூ

ஓஸுவின் படங்கள் என்றுமே பிரச்சாரத்திற்கு உதவாதவை; அவரே முயன்று ஜப்பானியத் தரப்பில் போர் எழுச்சிக்காக இயக்கியப் படம் முற்றிலுமாக எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது. காரணம் அவரது வடிவியல் அடைவு அவரது உலக-நோக்கின் நுண்மையான வடிவமே. எடுத்துக்காட்டாக அவர் படங்களில், பான்ஷுன் உட்பட, கதைத் திட்டம் அனேகமாகத் தகர்க்கப் பட்டிருக்கும்; கதை நெடிய நீள்வட்டங்களில் (ellipses) ‘காட்டப்’ படுவதன் மூலம்.