ஏரோசால் (தூசிப் படலம்)

எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு  ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை.  இவை பூமியைக்  குளிர்விக்கின்றன.
காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக்  கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.

20 ஆண்டுகளைக் கொண்டாடும் விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் குழு சென்றபோது நெரிசலான, கசகசவென்ற, மிகச் சிறிய மூன்று அறைகளாக இருந்தது.

சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்

1986-ல் comet என்னும் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அடுத்து 2061ல் எதிர்பார்க்கலாம். ஆனால், வருடத்திற்கு ஓரிரு முறை அதைப் பார்க்கலாம். அவ்வாறு மே மாதத்தில் தெரிந்ததை இடா அக்வாரிட் விண்கல் பொழிவு (Eta Aquarid meteor shower) என அழைக்கிறார்கள். அதன் படங்களை இங்கே பார்க்கலாம். “சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்”

மகரந்தம்

காஷ்மீர் பகுதியில் கிடைத்த ஒரு பாறை ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு மட்டுமல்லாது வானவியலாளர்களையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக பாறை ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று. கார்பன் டேட்டிங் முறையில் உள்ள சிக்கல்களைத் தாண்டி அவற்றின் வயதை அறிவது கடினம். ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னே இருந்த இந்த ஓவியத்தைக் கண்டுபடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதில் இரு பிரகாசமான ஒளி பொருந்திய விண்மீன் வடிவங்களைக் கண்டனர்.

கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது  மெலிதாகி விடுகின்றன.

ஒலியின் உருவம்

ஒலி, வடிவமும் உருவமும் இல்லாதது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிர்வுகளால் ஆன, காதால் மட்டும் கேட்டுணரப்படும் புலனான ஒலியில் ஒரு குறிப்பிட்ட வீச்சுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்கள் சாதாரண மனிதப்புலன்களுக்கு எட்டாதது என்பதும் அறிவியல் உண்மைகளில் ஒன்று. கேளா ஒலி என்று அறியப்படும் இந்த வகை ஒலி அதிர்வுகள் சில உயிரினங்களால் உணரக்கூடியது என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேட்கக்கூடிய, அதன் அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பது உலக அறிவியல் வரலாற்றின் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளின் முடிவு.

ஆடி அடங்கும் எல் நீன்யோ

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவது இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.
இதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான்…
ந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது…
ஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக…

இந்தியப் பருவமழையும் காரணிகளும்

பெருங்கடல்களை நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவையே. அதனால், பெருங்கடல்களில் ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றோரிடத்தில் அது தொடர்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் எல்-நினோ. இந்தோனேசியாவைக் கிழக்கெல்லையாகவும் தென்னமெரிக்காவை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து விரிந்திருக்கும் பசிபிக் கடலின் வெப்பம் ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும்.