ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்

ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான்(ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.

ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2

சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.

ஆயிரம் தெய்வங்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சொர்க்கம் – நரகம் என்ற கருத்துகள் வந்தன. இக்கருத்து எல்லா நாகரிகங்களுக்கும் பொது. இறப்பை ஏற்காதவர்கள் இன்றும் உள்ளனர். அன்றும் உள்ளனர். பனிக்கட்டிக்காலத்தில் மதத்தின் மூலவேர் லாஸ்கோ ஓவியத்தில் தென்பட்டது. மிருக வழிபாட்டின் தொடக்கம்.
வேதகால ஆரியர்கள் கடாவெட்டி யாகம் செய்தார்கள். தானியங்களை அக்னிக்கு அதாவது தீயிலிட்டார்கள். இதெல்லாம் ஏன்?

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

பாரம்பரியங்களும், பகுத்தறிவும்

ஒரு ஆலயத்திற்குள் இன்று தடுமாறும் தட்ப வெப்பத்திற்குரிய அருமருந்தென்று உணரப்பட்ட நந்தவனங்கள், திருவருட்சோலை போன்ற வடிவங்களை கவனிக்கலாம். பழங்காலத்து ஆலயங்கள் மிகப்பெரியவை. கல்விக்கூட வளாகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டு வைதீக ஆகமங்களும், தேவாரமும், திவ்யபிரபந்தங்களும் கற்பிக்கப்பட்டன. இது ஒரு பகுதி. மண்ணில் வாழும் சகல ஜீவராசிகளம், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று சிலைகளாகவோ, சித்திரங்களாகவோ ஆலயங்களில் காணலாம். உதாரணமாகப் பசு காமதேனுவானது. காளை நந்தியானது.

எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள்

முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால்?

எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது?

விபத்து மூலம் வெளியேறி கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று: முக்கியமான மீன் வளங்களும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுதல். குறிப்பாகச் சொல்வதென்றால், மிக நுண்ணிய படிநிலைகளை கொண்ட மீனின் வளர்ச்சிக் காலகட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. மீனின் முட்டைகளும், லார்வாக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும், இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் அற்புதங்கள்

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று சங்காலத்தமிழன் இலக்கணம் சொன்னான். மலையைப் பார்த்த ஒரு அமைச்சரின் புதல்வன் நினைப்பது வேறு. குறிஞ்சியாவது உறிஞ்சியாவது இம்மலையை வெடிவைத்துத் தகர்த்தால் எவ்வளவு கல் அறுக்கலாம்? அறுத்த கற்களை ஏற்றுமதி செய்தால் எத்தனை தேறும்? மலை மீது சந்தனம் உண்டு. தேக்கு உண்டு. தான்றி உண்டு. வெட்டி விற்றால் எவ்வளவு லட்சம் தேறும்? நேரிடையாகத் தான் சம்பந்தப்படாமல் மரக்கடையுடன் ஒரு பேரமே முடிந்து விடுகிறது.

எல்லோரும் சந்தன மரத்தைக் கடத்த முடியாது. வேலா மரத்தை வெட்டி விற்றால் கூட சில ஆயிரங்கள் உண்டு. விறகு விலை ஒரு டன் 3000 ரூபாய். மண்ணாசைக்கு மேல் மர ஆசையும் வந்துவிட்டதே. இறைவா?

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்

பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.