அழிவற்ற வாழ்வுக்குத் தடை உயிரியில் காரணங்கள் அல்ல, இயற்பியலே!!

புறக்காரணிகள் இல்லாத குழப்ப-வெப்பச்சலனம் ஒழுங்கின்மையை அதிகரித்துகொண்டே போகும் என்பது வெப்ப இயக்கவியிலின் இரண்டாவது விதி (Second Law of Thermodynamics). இதுவே பொருட்கள் அழிவதற்கான அடிப்படை. கட்டிடங்கள்,பாலங்கள் சாலைகள், கப்பல்கள், தண்டவாளங்கள், மலைகள் என எல்லாம் அழிவதற்கு மூலகர்த்தா. உயிரற்ற பொருட்களால் இந்த விதியோடு போட்டி போட முடியாது. ஆனால் உயிருள்ளவை அப்படி அல்ல, தொடர்ந்து புரதம் உயிரணுக்களை உருவாக்கி புதுப்பிட்டுக்கொள்கிறது. இயற்பியல் விதியை சரிகட்டுகிறது. ஒருவகையில் உயிர்ப்பு என்பது உயிரியில், இயற்பியலுக்கு எதிரான போட்டியில் வெல்வதே. அப்படி எனில் நாம் ஏப்படி முதுமையடைகிறோம். அல்லது இயல்பாகவே நாம் முதுமை அடைந்துதான் ஆகவேண்டுமா.

மூன்று துறவிகள்

‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’

ஜெனரலும் அந்தச் சிறிய டவுனும்

அந்தச் சிறிய டவுனில் அவர் பிரபலமானவர். எல்லாச் செய்திகளையும் உடனடியாகப் பரப்புபவர்.கடையில் இருந்த போதும் டவுனில் நடக்கும் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.எந்தச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு உடனடியாகத் தெரிந்து விடும்.ஜனங்கள் தமக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் போது “ நாவிதர் சொல்வது போல ” என்றே ஆரம்பிப்பார்கள். எந்தச் செய்திக்கும் நாடகம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பது அவர் வழக்கம். ஏதாவது முக்கியமான விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டால் அதைத் தன் கடையில் இருந்து கொண்டு சொல்ல மாட்டார். கடையை விட்டு வெளியே வந்து குறுக்குச் சந்துகளில் எல்லாக் கடைகளும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்று கொண்டு அதைச் சொல்வார்.

பாரத நாடு

ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்ஃபாரமும் இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டி பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது. அவ்வளவுதான். ஒரேயொரு ஸ்பெஷல் ரயில் மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும். என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டும்தான் முன்னதாகத் தெரியும். நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர். ரயில் நிற்பதில்லை, அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது. – ‘அண்டா ஹால்ட்.’ … அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது.

பட்டாம்பூச்சிகள்

“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “ ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான். “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.” இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ?” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது. இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் குளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.

அவர்களுக்கிடையே

அப்போது அந்தச் சந்தில் ஒரு பெண் தன் பைக்கோடு போனாள். தாத்தா காறித் துப்பினார். அது வண்டியின் கேரியரில் பட்டது. இந்த மாதிரி துல்லியமாக துப்புவதில் தேர்ந்தவர்.
சாப்பாடு முடிந்தது.சிறுவன் தலையில் குல்லா அணிந்து கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் பாட்டியின் கால்களை மிதித்து விட்டான். “நீ குருடா? “ பாட்டி கோபத்தில் கத்தினாள்.
“செத்து ஒழி ” தாத்தாவும் கத்தினார்.
அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.பள்ளிக் கூடம் மிகவும் அருகில்தான்.

நீரூற்று

குழந்தையை இழந்த அந்தப் பெண் ஓலமிட்டாள். பார்வீஸுக்கு அது வக்கிரமான முறையில் பிரசவ வலியில் ஒரு பெண் கத்துவது போல இருந்த்து. அந்தப் பாவமான பெண் சாவைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள். அவர் மில்லிஸெண்ட்டிடம் உண்மையைச் சொல்லத்தான் வந்திருந்தார். தேநீர் விடுதியின் படிக்கட்டுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் கதையை அவரால் எழுத முடியாது, ஏனெனில் அரசாங்கம் தண்டிக்கும் என்பது காரணம். கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள், வலைத்தளங்களை நாள் பூராவும் சலித்து, வெளியிடப்படக் கூடாத செய்திகளைத் தணிக்கை செய்வதற்கு அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டது. கனவான் மாவ்லியனோவிடமிருந்து அவரை வேலையிலிருந்து நீக்குவதாகச் சொல்லி மிக ஆத்திரமான ஒரு தொலைபேசி அழைப்பு வரும். வசந்தகாலத்துச் சூரிய ஒளியில் ஒரு பூங்காவில் பார்த்த ஒரு காட்சி அவருக்கு நினைவு வந்தது. ஒரு திருமணம். தன் வெள்ளை ஆடையில், படமெடுப்பதற்காக பல கோணங்களில் நின்று கொண்டிருந்த முவ்ஸானா மிகவும் துன்புற்றுத் தெரிகிறாள். அவளுடைய சோகத்தின் காரணமோ இன்னும் இரட்டிப்பாக ஆகி இருந்தது. அவள் மாருஃபை மணக்க விருப்பமற்று இருந்தாள், அவளுடைய அப்பாவோ காணாமல் போய் விட்டிருந்தார். இந்தக் காட்சி பார்வீஸின் மனதை மாற்றியது. அவருடைய நம்பகத் தன்மை அற்ற புத்தி இன்னொரு புதிரான தாவலை நிகழ்த்தியது.

மராத்தி மொழிக் கவிதைகள்

எப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.

விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)

“ஊர்மிளா எங்கே?”
ஸ்ருதகீர்த்தியின் முகம் நிறம் மாறியது. அவள் முகத்தைப் பார்த்ததும் சீதைக்கு பயம் ஏற்பட்டது.
“ஊர்மிளாவுக்கு என்னவாயிற்று? நலம்தானே?”
சீதையின் பதற்றம் புரிந்தாலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஸ்ருதகீர்த்திக்கு.
அவள் ஊர்மிளாவைப் பார்த்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன.

சுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்

இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…

டிபாசாவிற்கு மீள்வருகை

இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன்.

புடபெஸ்டை அடைதல்

அம்மாக்கள் மும்முரமாக கூந்தலை வாரிக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் சொர்கத்தைவிட்டு வெளியில் செல்வதற்ககு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் முன்னே வரிசையாக போகும் போது மட்டும் எங்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். ஆண்கள் எப்போதும் போல் ஜாகரண்டா மரங்களுக்கு கீழே வட்டாட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த்தால் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.

வாசிப்பதற்கான அவகாசம்

நவீன தகவல் அமைப்புகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூரோசயன்ஸ் துறையின் ஆய்வுகள் உதவுகின்றன. பிற அனைத்தையும்விட புதிய தகவல்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மனித மூளைகள் உருவாகியிருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது- சில ஆய்வுகள், சோற்றுக்கும் சம்போகத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்துவத்தை மூளை புதிய தகவல்களுக்கு அளிப்பதாகச் சொல்கின்றன.

மிதுனம்

எதிர்பாராத விதமாய் நான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.
“இங்கே என்ன பொம்மலாட்டமா நடக்கிறது? கணவன் மனைவி என்றால் ஆயிரம் பேச்சு இருக்கும். எல்லாவற்றுக்கும் நீ பல்லைக் காட்டத்தான் வேண்டுமா? சிறிசு பெரிசு என்ற பாகுபாடு வேண்டாமா? பார்த்து விட்டாய் இல்லையா? இனி கிளம்பு” என்று மாமி என்னை அதட்டினாள்.

எப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்

பின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்?
ஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் …

அச்சமற்ற, சின்ன டோஸ்டர்

டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.

கார்ஸன் கழிமுகம்

காலையில் மீண்டும் நடந்தேன் குன்றுகளின் மீது
கடலை நோக்கி,
பின்னர் நேராகத் திரும்பி
அலை அலம்பும் கரைவழிச் சென்று
நிர்மூலமான தலைவரையைச் சுற்றித்
திரும்பி வந்தேன்
கழிமுகத்தின் கரை வழியே

ஹாட்டின் ராணி

படுத்துக் கிடந்த பிர்ஜூ ஆட்டுக்கிடாயைப் பிரம்பால் அடித்தான். பிர்ஜூவின் அம்மாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது. எழுந்து போய் அதே பிரம்பினால் அவனை நையப் புடைத்து அவன் தலையில் ஏறி இருக்கும் பேயை விரட்டலாமா என்று எண்ணினாள். ஆனால், இதற்குள்ளாக வேப்பமரத்தடியிலே தண்ணீர் எடுக்க வந்த பெண்களின் பேச்சரவம் கேட்டு பிர்ஜூவை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனைப் பார்த்துச் சொன்னாள்-“இரு, இரு! உங்கப்பன் உன்னைக் கைமிஞ்ச வச்சுட்டாரு, யாரைப் பார்த்தாலும் கைமிஞ்சறே! இரு பார்த்துக்குறேன்!”

ஏழைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

மர உலோக வேலிகள்:
கம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்
அணிந்திருக்கும் கிழவனொருவன்

சார்லியோடு சென்ற பயணங்கள் – அமெரிக்காவைத் தேடி

இருக்கிற இடத்தில் நிலை கொள்ளாது போவது என்ற தொற்று நோய் ஒரு தறுதலை மனிதனைப் பீடிக்கத் துவங்கினால், இங்கே இருந்து தொலைந்து போகும் சாலை அகலமாகவும், நேரானதாகவும், இனிமையானதாகவும் தெரியத் துவங்கினால், அந்தப் பலிதானி முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், போவதற்கு ஒரு நல்ல, போதுமான காரணத்தைக் கண்டு பிடிப்பதைத்தான். செயல்திறன் உள்ள ஒரு ஓடுகாலிக்கு இது ஒன்றும் கஷ்டமானதே இல்லை. பயணம் திட்டமிடப்பட்டு, தேவையான உபகரணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, எல்லாம் செயல்படத்துவங்கிய பிறகு ஒரு புது விஷயம் நுழைகிறது, அது ஆளத் துவங்கி விடுகிறது. ஒரு யாத்திரை, சுற்றுலா…

மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றி

வருடாவருடம் சென்னையில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பதாகவும் செய்தி நமக்குக் கிட்டுகிறது. அவை அனேகமாக இலக்கியப் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நமக்கு எளிதில் புரியாத ஒரு விஷயம். இத்தனைக்கும் தமிழில் இன்றும், நேற்றும் எழுதிய இலக்கியாளர்கள் அப்படி ஒன்றும் புத்தியைக் கலக்கும் தீவிரம் கொண்ட எழுத்தை எழுதி வாசகர்களை அயர்த்துபவர்கள் இல்லை. ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவெல் பெக்கெட், யூஜீன் இயானெஸ்கோ, ஃப்லோபேர் அல்லது கார்ல் ஓவெ க்னௌஸ்கார்ட் போல இயல்பான வாசிப்பைச் சவாலாக ஆக்கித் தருபவர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையே மிக மிகக் குறைவு. அவர்களில் 90% போல மிகவும் சுலபமாக அணுகக் கூடிய நடையும், வாசகர்களுக்குப் பரிச்சயமான எதார்த்த உலகின் பல பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டும், கதை மாந்தரைக் கொண்டும்தான் இந்த இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இப்படி அன்னியப்பட்டு நிற்க…

ஆத்ம சாட்சி

கறுத்துப்போன அலுமினிய ஏனத்தை அடுப்பில் ஏற்றி விட்டு கணபத் அடுப்பை எரிய விட்டான். பிறகு உருளைக்கிழங்கை உரிக்கலானான். உருளைக்கிழங்கு மசியலும், சுடச்சுடச்சோறும் கணபத்தைப் பொறுத்தவரையிலும் இதைவிட மேலான பதார்த்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. குஸூமி சில நேரங்களில் அவனை ‘சோற்றுப் பண்டாரம்’ என்று கேலி செய்வாள்.

வாழ்க்கைக்கு மிக அருகிலானது

தன் சக அதிகாரிகளிடம் கதை சொன்னபோது ரயபோவிச் இதைச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா- இருட்டு அறை லைலாக், பாப்லர் மற்றும் ரோஜா மணம் கமழ்ந்திருந்தது என்று? அந்தப் பெண் தன்னை முத்தமிட்டபோது பெப்பர்மிண்ட்டின் தூண்டல் போல் கன்னம் வெம்மையாகிச் சிலிர்த்துக் கொண்டது, என்று ரயபோவிச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஒரு கதையின் ஜீவன் அதன் மிகையில் இருந்தால், அதன் அதீதங்களில் இருந்தால், சீர்மைக்கும் வடிவ நேர்த்திக்கும் அப்பாற்றபட்ட விஷயங்களின் கலவரத்தில் இருக்கின்றது என்றால், ஒரு கதையின் ஜீவ-மிகை அதன் நுண்விவரங்களில் இருக்கிறது என்றும் சொல்ல முடியும். பெப்பர்மிண்ட் பற்றிய நுண்விவரம், ரயபோவிச் தன் கன்னத்தில் உணரும் சிலிர்ப்பு, நமக்காக தங்கி நிற்கிறது; அந்த இடத்தை நாம் தேய்த்துக் கொண்டால் போதும். நுண்விவரங்களே ஒரு கதையை அந்தரங்கமானது ஆக்குகின்றன. கதைகள் நுண்விவரங்களால் ஆனவை; நாம் அவற்றில் சிக்கிக் கொள்கிறோம்.

தத்துவத்தின் பெறுமானம் என்ன?

தத்துவப் படிப்பு நிச்சயமான விடைகளுக்காக மேற்கொள்ளப் படுவதில்லை, மாறாக அது எழுப்பும் கேள்விகளுக்காகவே பயிலப்படுகிறது. இந்த கேள்விகள், சாத்தியமானவற்றைக் குறித்த நம் கருத்தாக்கங்களை விரிவாக்குகிறது. நமது அறிவார்ந்த கற்பனையை வளப்படுத்துகிறது. மனதின் பரீசீலிக்கும் தன்மையை தடுக்கும் மூர்க்கமான தீர்மானங்களை குறைக்கிறது.எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை சிந்தனை செய்யும் மனதை மேன்மை அடையச் செய்து அது பிரபஞ்சத்தினோடு ஒன்றாகும் தன்மையை நோக்கி நகர்த்துகிறது.

சீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்     

லி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின் தன்மை என்று பல கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர். டாங் வம்ச கால கட்டம் சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது

மொழியாக்கங்கள் குறித்த உரையாடல்- பகுதி 2

மகாலிங்கம் என்பவர் சினுவா அச்செபேவின் “Things Fall Apart” என்ற நாவலை மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கடந்த காலத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதெமியினர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்த பல நூல்களும் தரமாக இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி வங்க மொழி நூல்களை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால், N. கல்யாணராமனின் “Farewell to Mahatma” மிக நன்றாக வந்திருக்கிறது. அடுத்து பதிப்பிக்கப்படவிருக்கும் பூமணியின் வெக்கை நாவல் மொழிபெயர்ப்பு மிக உயர்ந்த தளத்தைத் தொட்டிருக்கிறது. பத்மா நாராயணன் லா.ச. ராவின் அபிதா நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இவர்கள் இருவர் பெயரையும் சொல்லக் காரணம், இவர்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருக்கின்றனர்- பூமணியையும் லா.ச. ரா வையும் வாசிக்கத்தக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது என்ற மூடநம்பிக்கையை இவர்கள் தகர்த்திருக்கின்றனர். ரசித்து வாசிக்கப்படக்கூடிய சரளமான ஆங்கில மொழியாக்கங்களை அளித்திருக்கின்றனர். அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய நூல்கள் இவை.

மொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1

மொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது.

டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு

தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன.

ராஸ்ப்பெர்ரிகள்

நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.

சுமித்ரா – அந்தம் இல் மனம்

சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத்தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தம்முள் கொள்ளும் சக்தி படைத்தனவாகத் தெரிகின்றன.

மொழிபெயர்ப்பு கவிதைகள்

கேரா பென்ஸனின் படைப்புகள் நியூயார்க் டைம்ஸ், பாஸ்டன் ரிவ்யூ, பெஸ்ட் அமெரிக்கன் பொயட்ரி, ஃபென்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. சில கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். நியூயார்க், பென்ஸில்வேனியா போன்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதுடன் “சிறைக்கைதிகளுக்கு கவிதை” இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

ஏற்றப்படாத விளக்குகள்

அப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…

ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது.’ ராபர்ட் சௌதி (Robert Southey). சௌதி, ஆங்கிலக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி அரசவைக் கவிஞர் (பொயெட் லாரியேட்- Poet Laureate) என்ற பதவியையும் தாங்கியவர். பிற்காலத்தில் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷார்லட் ப்ராணடீ (Charlotte Bronte) என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்டபடி எழுதியுள்ளார்.
ராபர்ட் சௌதியின் அந்தக் ‘குற்றச்சாட்டு’ ஷார்லட் ப்ராண்டீயின் மனதை எவ்வாறு புண்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறில்லாமல் அந்த இளங்கவிஞர் தன்னைப் பற்றின விமர்சனத்தில் உள்ள உண்மையான பொருளை உணர்ந்து மேலும் அறிவுசார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்தது அந்த இளம் வயதிலும் அவருக்கிருந்த அறிவு முதிர்ச்சியைக் காண்பிக்கிறது.

கரடி வேட்டை

தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறுகதை. விலங்கு – மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய். இந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம், டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.

நேருக்கு நேர்

“வரலாறு மனித எண்ணங்கள் அனைத்தையும் வடிவமைக்கிறது” என்று அந்தப் பருவத்தின் தொடக்க விரிவுரையிலேயே வரலாற்றுப் பாட விரிவுரையாளர் வகுப்பில் கூறியிருந்தார். அந்த வரி ஒரு முழக்கவரியைப் போல ‘நச்” என்று உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது. அடிக்கடி என்னை யோசிக்கவும் வைத்தது. ஆம்! எந்த ஒரு நாடும் அதன் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றைப் படிப்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளும். இந்தோனீசியா, வியட்னாம், இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் வரலாறுகளை – வரலாற்றுத்தலைவர்கள் மிகப் பலரைச் செல்வம் போலப் பெற்றிருந்த அந்த நாடுகள் சிறந்திருந்ததைப் படித்தபோதெல்லாம் எப்படியும் எனக்குள்ளும் பேருவகை பிறந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.

குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் சின்ன தூசிக்கூட தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைப்பேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா. டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை…

லெமாங்கும் தனி மொழியும்

தேங்காய்ப்பாலின் ஆடைச்சத்து கவுணியரிசியின் பசைத்தன்மையைப் பதப்படுத்துகிறது. எரிக்கப் பயன்படும் விறகுக்குக் கூட சொல்வதற்கு ஒரு சொந்தக் கதை இருக்கிறது. தீ தொடர்ந்து எரிய வேண்டும் என்றால் விறகுகளை அடுக்கும்போது குறுக்குமறுக்காக அடுக்கவேண்டும். இவ்வாறு செய்வது வெவ்வேறு விருப்பங்கள் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பலப்படுத்தும் ஓர் இணைப்பைப் போன்றது.

மஞ்சள் சூரியனில் ஒரு பாதி

குண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

கவிதை – எலிஸபெத் ப்ரௌனிங்

என் காதலை நீ அறிவாயா?
உன்னைக் காணாது,
திசைகளற்று, தடைகளற்று பரந்து விரியும்
என் ஆன்மாவின் தேடலைப் போல் வரைகளற்ற என்
காதலை அறிவாயா?

அர்ஜுன்

நாளின் இறுதியில் நான்கு துண்டுகள் — மரத்தை வெட்டினாலும், மனிதர்களை வெட்டினாலும்… இன்னும் சொல்லப் போனால், மனிதனை வெட்டுவது சுலபம் தான். ஏன் யாரும் அவனிடம் அதைச் சொல்வதில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு முழு நான்கு ரூபாய் கிடைக்குமே!

நெடுந்தூர ஓட்டக்காரி

க்ரேஸ் பேலி நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.

மஹா நதி – நீலகண்டப் பறவையைத் தேடி – வாசிப்பனுபவம்

நாவலின் ஒவ்வொரு சம்பவத்திலும், கட்டத்திலும் மனிதரிலும் ஒட்டி இயல்பாக, எத்தனை தட்டினாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கடற்கரை மணலாக இயற்கை. மகேந்திர நாத், பெரியவர், பார்வையிழந்தவர், சூரிய உதயத்தைக் காண பல வருடங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேரன்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார். வழியிலிருக்கும் எல்லா மரங்களின் பெயர்களையும் சொல்கிறார். பூ, மீன் எல்லாவற்றையும் வாசனை உணர்ந்தே சொல்லிவிடுகிறார்.

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

மௌனம்

இசையைப் படைப்பவனுக்கு வயோதிகம் எவ்வளவு கொடூரமானது! முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை. சுயவிமர்சன கண்டனமோ ஸ்தம்பிக்கச் செய்யுமளவிற்கு பூதாகாரமாக வளர்கிறது. புகழ், கைத்தட்டல்கள், அலுவல் சார்ந்த விருந்துகள், அரசாங்கமளிக்கும் பென்சன், விசுவாசமான குடும்பம், கடல்களுக்கு அப்பாலுமுள்ள ரசிகர்கள், இவை மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு புலப்படுகின்றன.

மனித விஞ்ஞானத்தின் பரிணாமம்

மீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.

குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.

முடிவு

அப்படிப் பார்த்தால் அவள் முதலில் இங்கு வந்ததே தகராறில்தான். மகாராணி புயலைக் கிளப்பிவிட்டாள். யாரோ ஒரு வாசகன் நீளமாக ‘கதை நன்றாக இருக்கிறது. சூட்சுமமாக இருக்கிறது…’ அப்படி இப்படி என்று கடிதம் எழுதியிருந்தான். அப்போதுதான் அதைப் படித்து முடித்திருந்தேன். நடராஜும் அதைப் படித்துவிட்டு பெருமையுடன் தலை அசைத்துவிட்டு அப்போதுதான் வெளியே போயிருந்தான். இவள் உள்ளே வந்தாள். என்னவோ தனக்கே வந்தது என்பதுபோல கடிதத்தைப் படித்து உதட்டை சுழித்தாள். “சரி… இன்னும் இதே மாதிரி நாலு கதை எழுதிவிட்டு ஜனப்ரிய எழுத்தாளர் னு போர்ட் போட்டுடலாம்” என்றாள்.

பங்குச்சந்தை விழுந்திருந்தது

ஆனால், பங்குச்சந்தைக்குத் தோன்றிய வேறேதோ நினைப்பு அப்படியே தன்னை கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணவைக்குமளவு அதை துக்கத்தில் ஆழ்த்தியது: வாரன் பஃபெட் ஒரு வேளை தவறாக இருந்தால் என்ன செய்வது? இந்த நினைப்பே பங்குச்சந்தையை முன்னெப்போதையும் விட நலிவாக்கியது: வாரன் பஃபெட் போன்ற மகோன்னதர், பைசா பிரயோஜனமில்லாத கொடியதான பங்குச்சந்தை மேல் அன்பு செலுத்தித் தன் இதயத்தை வீணடித்திருப்பாரோ என்னும் சிந்தனை தோன்றியது. பங்குச்சந்தைக்கு குற்றவுணர்ச்சியும் கழிவிரக்கமும் தலைதூக்க, அப்படியே மொத்தமாக உருக்குலைந்து போனால் என்ன என்று எண்ணியது. ஆனால், அது செய்யவில்லை. என்ன ஒரு பைத்தியகாரத்தனம், என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.