சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள

சாகித்திய அகாதமி, தேசிய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறது. இந்திய மொழிகளிலிருந்து பிற இந்திய/வேறு மொழிகளுக்கோ இல்லை பிற இந்திய/வேறு மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கோ மொழிபெயர்ப்பவர்கள், தங்களை சாகித்திய அகாதமியுடன் பதிவு செய்துகொள்ளலாம். இப்பட்டியல், பதிப்பாளர்கள், வெளியுறவு அலுவலகங்கள், இலக்கிய அமைப்புகள், அரசு அமைப்புகள், கல்வி /ஆய்வு “சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள”

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் – 4

“சரி, முக்கோண மெஷ் முறை எப்படி வேலை செய்கிறது? நிறைய வளைவுகள் நிறைந்த ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் உறையால் சுற்றுகிறீர்கள். எவ்வளவு இறுக்கமாக சுற்றுகிறீர்களோ, அவ்வளவு அந்த பொம்மையின் வடிவம், சுற்றியுள்ள ப்ளாஸ்டிக்கிற்கு வரும். வளைவான பகுதியை எடுத்துக் கொள்வோம். வளைவான பகுதியை சுற்றி வளையும் ப்ளாஸ்டிக் நூல்களால் சுற்றப்படுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ப்ளாஸ்டிக் நூலும் ஒரு கோட்டைப் போல. எவ்வளவு அதிகம் கோடுகள் இருக்கின்றனவோ அவ்வளவு அழகாக அந்த வளைவு உருவாக்கப்படலாம்.

புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்

ஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?

வேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.

உலக வர்த்தக அமைப்பு மாநாடு

கடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது. உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின. கடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது.

உன் கேள்விக்கென்ன பதில்? – 3

பாட்டிமார் சொல்லும் கதைகளிலும் அம்புலிமாமா பஞ்சதந்திர கதைகளிலும் ராஜா ராணி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலும் காணப்படும் காடுகள் ஊர்க்காடுகள். அந்தக்காலத்தில் இரு ஊர்களுக்கிடையே பல மைல் இடைவெளி இருக்கும், பெரிய பெரிய காடுகள் இருந்திருக்கும். இப்போது இடைவெளி குறைந்து குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆகவே ஒரு பஞ்சாயத்துக் கிராமம் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஊர்த்தலைவர் பொறுப்பின்கீழ் காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

மகரந்தம்

பேரண்டமே மாயத்தோற்றமா என்றும் அகில உலகுமே ஹோலோகிரமா (hologram) என்று இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் வந்தது. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பங்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியும் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன எண்ணுவார்கள்? ‘டிவி பெட்டிக்குள் இருந்தாலும், நம்முடையது முப்பரிமாண உலகம்! நாம் அனைவருமே நிஜம்!!’ பூவுலகின் மனிதர்கள் கூட இப்படித்தான் கற்பனையில் வாழ்கிறோமா என்பதை சோதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மென் இன் பிளாக், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் இது போன்ற கற்பனைகளைப் பார்த்து இருப்போம்.

சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !

போர் அறியாக் கோழை கைக்கருவி போல,
குக்கல் உருட்டும் நெற்றுத் தேங்காய் போல,
பாழாய்க் கிடக்குடா !

யாமினி க்ருஷ்ணமூர்த்தி

யாமினிக்கு நான் பரிச்சயமானது 1990-ல் என்று நினைவு. அதற்கு முன் சில நாட்டிய நிகழ்ச்சிகள் பற்றி பேட்ரியட், லிங்க், சுபமங்களா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த கட்டுரைகள் ஒன்றில் நான் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி ஒரு சில விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அதைப் பிரசுரித்த பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர், யாமினியின் தீவிர ரசிகர். அவரும் என்னைப்பகைக்க வில்லை பின்னர் அதைப் பற்றிக் கேட்ட போது யாமினியும் என்னைப் பகைக்கவில்லை. நம்மூர் கலை ரசனை மரபுகள் முற்றிலும் வேறுதான். நம்மூரில் அவ்விருவருக்கும் என்னுடன் முகாலோபனம் கூட இருந்திராது.

கச்சேரி

சில நாட்கள் கழித்து சரண்யா அந்த புது ஐட்டத்தை வீட்டில் பாடிக் காண்பித்தாள். காவடிச்சிந்து போல இருந்தது. ஒவ்வொரு சரணமும் வேறு வேறு ராகம், வேறு நடை. கடைசியில் கண்ட நடையில் உச்சச்தாயியில் ‘தக தகிட, தக தகிட, தக தகிட’ என்று ஜதியை நான்கு முறை சொல்லி ஆவேசமாக முடித்தாள் சரண்யா. வீட்டுக்கு வந்திருந்த ஏ.கே மற்றும் இதர சிஷ்யகோடிகள் பலமாக கைத்தட்டினார்கள். ரொம்ப catchyஆக இருந்தது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல். பாட்டி மட்டும், “என்ன கண்றாவிடீ இது?” என்று கேட்டாள்.
“நீ எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிப்ப!” என்றாள் சரண்யா.
“யார் பாட்டுடீ இது? இவ்வளவு இரைச்சலா இருக்கு?”
ஏ.கே. பதில் சொன்னான், “மாமாவோட மச்சினர் பண்ண பாட்டு. கர்நாடக இசையும் பரதத்தையும் கலந்து குடுத்திருக்கார்”
“என்ன எழவோ. இதையெல்லாம் யாரவது கேப்பாளா?”

பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு

தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான்.

செஞ்சிவப்புச் சிந்தனைகள்

“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை…”

மௌனம்

இசையைப் படைப்பவனுக்கு வயோதிகம் எவ்வளவு கொடூரமானது! முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை. சுயவிமர்சன கண்டனமோ ஸ்தம்பிக்கச் செய்யுமளவிற்கு பூதாகாரமாக வளர்கிறது. புகழ், கைத்தட்டல்கள், அலுவல் சார்ந்த விருந்துகள், அரசாங்கமளிக்கும் பென்சன், விசுவாசமான குடும்பம், கடல்களுக்கு அப்பாலுமுள்ள ரசிகர்கள், இவை மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு புலப்படுகின்றன.

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் – தன்னை எழுதுதல்

எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப்பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும்.

மறையீட்டியலும் கணிதமும்

இது போல் ஒரு வருடம் தொடர்ந்தது. மூவருக்கும் ஒரு விதமான சோர்வு மனப்பான்மை ஆட்கொண்டது. அந்தச் சமயத்தில் மூவரும் பாஸ் ஓவர் (Passover) என்ற யூத விடுதலை நாளைக் ஒரு மாணவன் வீட்டில் Manischewitz வைன் சிறிது அதிகமாகவே குடித்து விட்டு நள்ளிரவில் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள். ரிவேஸ்ட்டுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு கணிதப் புத்தகத்துடன் சோபாவில் அமர்ந்து கொண்டு சிந்தித்த போது, திடீரெனத் தான் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கான விடை உதித்தது. அன்றிரவே ஓர் அருமையான கணிதக் கட்டுரையை ரிவேஸ்ட் எழுதி முடித்தார். ஷமீர் மற்றும் அல்டெர்மென் உதவியுடன் பொதுத் திறவி மறையீட்டாக்கம் செயல்படுத்தும் முறை முழுமை பெற்றது. அதுதான் புகழ்பெற்ற RSA மறையீடக்கமாகும்.

தூரயியங்கி – பொழுதுபோக்கும் போராட்டங்களும்

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன.