அந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என்ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.
Category: மொழிபெயர்ப்பு
ஜானவி
ரொட்டி முழுவதும் தீர்ந்து போனது. காக்கைகளும் அதை உணர்ந்தன. ’சாப்பிடுங்கள் காக்கைகளே” என்று சந்தோசமாகச் சொல்லி கைகளை வானத்தை நோக்கி வீசினாள்.சில நடுவானில் பறந்து கொத்துவது போல தோற்றம் காட்டின.
’என் சதை முழுவதும் உங்களுக்குதான்
ஆனால் கண்களை மட்டும் விட்டு விடுங்கள்.
என் காதலனின் புன்னகையை பார்க்க விரும்புகிறேன்
என்று பாடினாள்.
ஹெமிங்வேயிற்கு அஞ்சலி
நன்நம்பிக்கையுடன் ஆவலாய் இருந்த மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படியே அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் அப்படியே அழைத்தார்கள் பில்லைத் தவிர. முரட்டுத்தனமான மாஜிமிலிட்டரிக்காரனான பில் அவனை ‘காப்டன்’ என்றழைக்கவே ஆசைப்பட்டான். அவர்களுள் சிலர் இலக்கியத்தை விரும்பிய அளவிற்கு அதை புரிந்துகொள்ளவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவர்கள் புனைவை சுயசரிதையின் ஓர் திரிபாகத் தான் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
கருங்காலி
எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 3
வெள்ளம் – தண்டனை – அதன் பின்னே, பறவைகள் கூட மறந்துவிட்ட, புழுதி மற்றும் வெப்பத்தின் விடாப்பிடியான தாக்குதல்களால் மூச்சுவிடவே அரிதாக இருக்கும் ஒரு மகோண்டோவை விட்டுச் செல்கிறது. அங்கு எஞ்சியிருப்பவர்கள் யார் ? சிவப்பெறும்புகளின் சத்தத்தால் தூங்குவதற்கே முடியாத ஓர் வீட்டில் தனிமையாலும் காதலாலும் (காதலின் தனிமையாலும்) ஒளிந்திருக்கும் மீந்தோர்களான ஆரேலியானோவும் அமரான்டா உர்சுலாவும் (Aureliano & Amaranta Ursula). இதன் பிறகு புத்தகத்தின் மூன்றாம் வெளி திறக்கிறது. இதுவே அதன் தொன்ம வெளி – அதன் உடன் நிகழ்வான, புதுப்பிக்கப்படக்கூடிய இயல்பை இறுதிப் பத்திகளுக்கு முன் புரிந்துகொள்ள முடியாது.
துண்டிக்கப்பட்ட தலையின் கதைகள்
எப்போதுமே அந்த மரத்தை நோக்கி செல்வது பெண் தானா?
மாதுளம்பழம் கூட எனக்கு போதுமானதாய் இருந்திருக்கும்.
உன் தொண்டையைக் கிழித்த அந்த ஆப்பிளாக இருந்தேனென்ற
குற்றவுணர்வுகளும் எனக்கு இருந்திருக்காது.
ஏனெனில்
உன் உதடுகளிலிருந்து நான் பிறக்கவில்லை
உன் நெஞ்சிலிருந்து நான் பிறக்கவில்லை
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2
நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதை தவிர்ப்பதற்காகவும்)….
மனைவியின் கதை
அப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம்
தமிழ்க்கவிதைகளுக்கான ஆங்கிலப் பாலம்
கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 1
மேலே தரப்பட்டுள்ள மேற்கோள்களில் முதலாவது காப்ரியல் கார்சியா மார்கேஸின் நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவலின் பிரசித்தி பெற்ற ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில், உறக்கமின்மை என்ற கொள்ளை நோயால் தாக்கப்பட்ட பின் மக்கோண்டோ என்ற ஊரே ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய்மையிலிருந்து மீள ஆரேலியானோ புவெந்தியா என்பவர் வலுவானதொரு சூத்திரத்தை உருவாக்குகிறார்: ஊரிலுள்ள அனைத்துப் பொருட்கள் மீதும் அவற்றின் பெயர்களை குறியிடுகிறார் – மேஜை, நாற்காலி, கடிகாரம், சுவர், கட்டில், பசு, ஆடு, பன்றி, கோழி. சதுப்பிற்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் மக்கோண்டோ என்ற குறிப்பலகையையும் , அதை விடப் பெரிதாக, பிரதான சாலையில், கடவுள் இருக்கிறார் என்று அறிவிக்கும் மற்றொரு பலகையும் எழுப்பினார்கள்.
காகசஸ் மலைக் கைதி – 6
ஒருநாள் அவன் அந்தக் குழியின் தரையில் அமர்ந்து கொண்டு, விடுதலை பற்றி யோசித்த வண்ணம் மிகவும் மனந்தளர்ந்து இருந்தான்; அப்போது திடீரென்று அவன் மடியில் ஒரு கேக் விழுந்தது, பின் இன்னுமொன்று, பின் ஏராளமான செர்ரிப் பழங்கள் என விழுந்தன. அவன் மேலே அண்ணாந்து பார்த்த போது அங்கு டீனாவைக் கண்டான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு ஓடி விட்டாள். உடனே ஜீலின் சிந்திக்கலானான், ‘டீனாவால் எனக்கு உதவ முடியாதா?’
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்
இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும் உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும் நுண்மையையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்கு புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார்…
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஆட்ரியன் ரிச், மேன்கா ஷிவ்தஸானி
தவறவிட்டிருக்கக்கூடிய இச்சுவைப்பின் சுகிப்பை
நான் கூட கவனிக்கிறேன்
உன் தயவால்..
……
நமது மூர்க்க கவனமே
கெட்டித்த பெருமூளை மொத்தைகளிலிருந்து
ஆகாயத் தாமரைகளை அவிழ்க்கிறது:
ஈரம் சொட்டும் மொட்டுக்களாய்
தண்டின் நீட்டம் நெடுக .
அந்தரங்க ஆனந்தம்
புத்தகங்கள் மீது தீராப்பசி கொண்ட எந்த குழந்தையும் கனவு காணும் ஒன்று அவளுக்கு வாய்த் திருந்தது, புத்தகக்கடை உரிமையாளரான தந்தை. அதை அவள் ஒன்றும் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லைதான். நாங்கள் அவள் அளவிற்கு கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை. எங்கள் பிறந்தநாள்களுக்கு மலிவான சிறிய புத்தகத்தை கூட கொடுக்காமல், தன் தந்தையின் கடையிலிருந்து புகைப்பட வாழ்த்தட்டைகளை அவளே நேரில் கொண்டு வந்து கொடுப்பாள்…
காகசஸ் மலைக் கைதி – 5
எல்லாம் முழுவதுமாக அமைதியான உடன், ஜீலின் சுவற்றினடியே குழியினுள் சப்தமின்றித் தவழ்ந்து வெளியே போய், கஸ்டீலினிடம் ரகசியக் குரலில், “வா!” என்றான். கஸ்டீலினும் தவழ்ந்து வெளியே வந்தான்; ஆனால் வரும்பொழுது அவனது காலில் ஒரு கல் இடறவே, சப்தம் ஏற்பட்டது. எஜமானனிடத்தில் துஷ்டத் தனம் மிகுந்த ஓல்யாஷின் என்ற பெயர் கொண்ட, புள்ளிகள் நிறைந்த ஒரு காவல் நாய் இருந்தது. ஓல்யாஷின் இந்த சப்தத்தைக் கேட்டதும் குரைத்தபடி குதிக்க ஆரம்பிக்கவே, மற்ற நாய்களும் அதனுடன் சேர்ந்து கொண்டு அதையே செய்தன.
மொழிபெயர்ப்பு கவிதைகள்
எனினும் சிலசமயம் அது வருகிறது
கருப்புக் கோழியாக
உருண்ட சிகப்புக் கண்ணுடன்
காகசஸ் மலைக்கைதி – பகுதி 4
‘நல்லது,’ என எண்ணினான் ஜீலின், ‘இப்போது எனக்கு வழி தெரிந்து விட்டது; ஆகையால் தப்பிச் செல்ல வேளை வந்து விட்டது.’ அவன் அன்றிரவே தப்பி ஓடிவிட எண்ணினான். இரவுகள் இருளாக இருந்தன- அது தேய்பிறை நிலவாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகத் தார்த்தாரியர்கள் அன்று இரவே வீடு வந்து விட்டனர். அவர்கள் வழக்கமாக மாட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டும், உற்சாகமாகவும் திரும்பி வருவர். ஆனால் இந்த முறை மாட்டு மந்தைகள் இல்லை. அவர்கள் கொண்டு வந்தது …
காகசஸ் மலைக்கைதி – பகுதி 3
ஒரு தடவை அவன் ஒரு தார்த்தாரியனைப் போன்ற பொம்மையை மூக்கு, கைகள், கால்கள், தார்த்தாரிய உடைகள் இவற்றுடன் உருவாக்கி, கூரையின் மேல் காட்சிக்கு வைத்தான். தார்த்தாரியப் பெண்கள் நீர் கொண்டு வர வெளியே வந்தபோது, எஜமானனின் பெண்ணான டீனா அவர்களைக் கூப்பிட்டு அதைக் காட்டினாள்; அவர்கள் தங்கள் பாத்திரங்களைக் கீழே வைத்து விட்டு நின்று கொண்டு அதைப் பார்த்துச் சிரித்தனர். ஜீலின் அந்த பொம்மையை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அவர்கள் சிரித்தனரே தவிர தைரியமாக அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொம்மையைக் கீழே வைத்து விட்டு, என்ன தான் ஆகிறதென்று பார்க்கலாம் என்று கொட்டிலினுள் சென்று விட்டான்.
மான்பெண்
பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.
ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்
வெய்யில்தோய்ந்த உன் முத்துச்சிற்பி உடலை வெகு காலம் நேசித்திருக்கிறேன்.
பிரபஞ்சமே உனக்கு சொந்தமென்று கூறும் அளவிற்கும் நான் செல்வேன்,
நான் உனக்கு மலையிலிருந்து கொண்டு வருவேன் மகிழ்சியான பூக்களை, நீலமணிகளை,
காகசஸ் மலைக் கைதி – 2
ஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
ஒவ்வொரு மாலையும்
என் வருகையை எதிர்பார்த்து
கலைந்த கூந்தலும், சமையலறையின்
பிசங்கற் சீலையுமாய்
என் மனைவி
வாசலில் காத்திருக்க,
ஃபார்மால்டஹைடில் குறியீடுகள் – வரலாற்றையும் புனைவையும் கலத்தலின் சாதக பாதகங்கள்
இந்த வட்டத்திலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் துவங்கினேன்; என் எழுத்து சிறைச்சாலை அமைப்புக்கு நேரடியாக உதவுவதாக இல்லாத ஒரு வழியைக் கண்டடைய வேண்டும் என்று எண்ணினேன். சிறைகளின் நடைமுறைச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அறிவுத்துறை மேலும் நுட்பமான ஆயுதங்களைப் பெற என் எழுத்து பயன்படக்கூடாது. இது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு நான் கண்ட விடை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கக் கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கே ஒரு கிளைக்கதை சொல்ல வேண்டும். நான் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தேர்வு செய்தேன் என்பதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னால் வித்தியாசமாக இருக்கும்.
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட்டை குடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதெற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.
சாண்பிள்ளை
சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்படி எல்லாம் இல்லை எனப் பட்டது.
பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது.
காகசஸ் மலைக் கைதி-1
காகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மராத்திக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு
சிவப்பு பச்சை என
எந்தக் குறியுமில்லை
கண்ணுக்குப் புலப்படாத போது
எப்படித் தொலைய முடியும்
வைரத் தீவு: ஆல்கட்ராஸ்
“ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]யின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது. உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது.
கவிதைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
கசங்கிய
காவி நிறத்த
கிட்டத்தட்ட ஒரு ஆளின்
நீளமும் பருமனையும்
உடைய காகிதமொன்று
சாலையில்
பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2
நான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.
“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”
“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”
“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”
“நீ நின்று யாரோடும் பேசக் கூடாது.”
“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”
எங்கேமார்களும் எப்போமார்களும்
அவனது
ஒவ்வொரு
பாதமும் நேசிக்கும்
இந்த பூமியின் இங்கேயை
சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள்
பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு
இன்று சிந்திக்கத் துணை.
பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள்,
பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.
இந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி
அவள், ஆறு
அவன் கடல் :
சொன்னாள்
வாழ்க்கை முழுவதும்
என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கிப் பாய்கிறேன்
ரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்
-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.
– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.
– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.
-அது எங்கல்ஸ்
– எங்கல்ஸ்
– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.
-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.
ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.
– இது எங்கல்ஸா ?
– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.
-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..
ஃபின்லாண்டியா
ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.
பூனை
காலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.
மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்
பாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”
ஒலிக்கலைஞனின் உதவியாள்
ஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.
இரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.
தேவைகள்
இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.
மௌனத்தின் குரல் – ஓர் அறிமுகம்
திருமணத்திற்குப் பின் தன் ரசனைகள், விருப்பு வெறுப்புகள் என எல்லாவற்றையும் உடைத்து கணவனின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது பெண்களின் கடமையாகவே நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆண் வாயைத் திறந்து இதைச் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.
அயல்நாட்டுக் கவிதைகள்
தனது வேரிட்ட தோட்டத்தையும், பேரக்குழந்தைகளையும், ஒருகாலத்தில்
அவளுடையவளாயிருந்த ஒருகாலத்தில்
கட்டுக்கடங்காத இளைஞனையும் அவள் நேசித்தாள்.
பூங்காக்களின் தொடர்ச்சி: ஹுலியோ கோர்தஸார்
முதலில் பெண் வந்தாள்,ஐயுற்றஞ்சி; இப்போது காதலன் உள்ளே வந்தான், ஒரு மரக்கிளையின் பின்னடிப்பால் கீறப்பட்ட முகத்துடன். மெச்சத்தக்க விதத்தில், குருதியோட்டத்தை முத்தங்களால் அவள் தடை செய்தாள். ஆனால் அவனோ அவளுடைய தைவரல்களை மறுதவித்தான்.
அயல்நாட்டுக் கவிதை – ஆஸ்டின் ஸ்மித்
மாடிப்படிகளில் தவறி விழுந்தவர்
கீழே வேகமாகச் சரிந்து செல்வது போன்ற ஒலி தரும்
சகிக்க முடியாத பியானோ வாசிப்பும் தவிர
வேறு சப்தமில்லை
சின்ன விஷயங்கள்
குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.
எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்
ஒவ்வொரு துணுக்கையும்
குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து
பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்
அதன் தோலினின்று பிரித்து
அதன் பின்பே அதை உண்பது.
எத்தனை இனிமையான
ஓர் ஒழுங்கு
துல்லியமாய் அர்த்தமற்றதாய்
எண்ணை விலை உயர்வால் உலகமயமாக்கம் முடங்குமா?
எண்ணை விலை (ஒரு பேரல் விலை டாலர்களில்) மூன்றிலக்கமாகும் போது, உலகமயமாக்கலுக்குப் பின்னடைவு ஏற்படும். அது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மறுமலர்ச்சி அடைய வழி வகுக்கும். நாம் எதிர்கொள்ளப் போகிற உலகில், தூரம் விலையேற்றத்தை ஏற்படுத்தும். குறைவான ஊதியம் ஏற்கும் உழைப்பாளர் கிடைப்பதால், சீனாவில் உற்பத்தி செய்து, அந்த சரக்குகளை மேற்கு ஐரோப்பாவிற்கோ அல்லது வட அமெரிக்காவுக்கோ ஏற்றுமதி செய்வது பல சமயங்களில் விவேகமான செய்கையாக இருக்காது. சரியாகச் சொன்னால், உழைப்பின் விலையால் நீங்கள் சேமித்ததை விட அதிக தொகையை போக்குவரவில் இழந்திருப்பீர்கள்.
இந்தியக் கவிதைகள் – இந்தி – ஜ்யோத்ஸ்னா மிலன்
பாதங்கள் ஒருபோதும்
கற்பனை செய்ததில்லை
அவை ஒருநாள் சிந்திக்கத் தொடங்குமென்று.
அல் அல்வரெஸ் – ஒரு நேர்காணல்
இங்கு, Granta இதழின் டெட் ஹாட்கின்ஸன்-உடன் (Ted Hodgkinson) , எப்படி வசிக்கும்-பள்ளி, அவருக்கு தெரியாதவனவற்றை எதிர்கொள்ளும் சுவாரஸ்யத்தை அளித்தது, ஏன் பெக்கெட் முதுமையைப் பற்றி சொன்னவை தவறு, எப்படி காலமும், நாட்குறிப்பு எழுதுவதும் சில்வியா ப்ளாத் மற்றும் டெட் ஹ்யூஸ் பற்றிய அவரது பார்வையை மாற்றின எனப் பேசுகிறார்.
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்-பகுதி 2
இதமான வாழ்வுக்குத் தேவையான பிராணவாயு, தண்ணீர் (அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரியாகவும் ,கொதி நிலை நூறு டிகிரியாகவும் இருப்பது) போன்ற எத்தனையோ நல்ல அம்சங்களைக் கொண்ட இந்த பூமியில் நாம் ஏன் வாழ நேர்ந்தது என்று கேட்டாலும் , இதே போன்ற பதில் தான் கிடைக்கும் . இது தற்செயலா? நம் அதிர்ஷ்டமா? இறையருளா? வேறெதுவோ?
நடனம் ஆடுவீர்களா?
இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.
