அப்போது அந்தச் சந்தில் ஒரு பெண் தன் பைக்கோடு போனாள். தாத்தா காறித் துப்பினார். அது வண்டியின் கேரியரில் பட்டது. இந்த மாதிரி துல்லியமாக துப்புவதில் தேர்ந்தவர்.
சாப்பாடு முடிந்தது.சிறுவன் தலையில் குல்லா அணிந்து கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் பாட்டியின் கால்களை மிதித்து விட்டான். “நீ குருடா? “ பாட்டி கோபத்தில் கத்தினாள்.
“செத்து ஒழி ” தாத்தாவும் கத்தினார்.
அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.பள்ளிக் கூடம் மிகவும் அருகில்தான்.