எதிர்பாராத விதமாய் நான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.
“இங்கே என்ன பொம்மலாட்டமா நடக்கிறது? கணவன் மனைவி என்றால் ஆயிரம் பேச்சு இருக்கும். எல்லாவற்றுக்கும் நீ பல்லைக் காட்டத்தான் வேண்டுமா? சிறிசு பெரிசு என்ற பாகுபாடு வேண்டாமா? பார்த்து விட்டாய் இல்லையா? இனி கிளம்பு” என்று மாமி என்னை அதட்டினாள்.