தர்ம சங்கடம்

“அம்மா காலைத் தொட்டு வணங்கறப்ப அஞ்சு ரூபா காணிக்கை வைத்தும் கூட விளக்கமா ஏதும் சொல்லலே. ‘இருள்-வெளிச்சம் இரண்டும் சேர்த்து நெய்யப்படுகிறது மானுடர்களின் எதிர்காலம் என்ற மாயத் திரை. இருந்தாலும் இருட்டின் உபாதையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியும் உண்டு,’ அப்படீன்னாரு.”

காயம்

பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார் பணீஷ்வர்  பீகாரிலுள்ள  அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச்  அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். “காயம்”

ஹாட்டின் ராணி

படுத்துக் கிடந்த பிர்ஜூ ஆட்டுக்கிடாயைப் பிரம்பால் அடித்தான். பிர்ஜூவின் அம்மாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது. எழுந்து போய் அதே பிரம்பினால் அவனை நையப் புடைத்து அவன் தலையில் ஏறி இருக்கும் பேயை விரட்டலாமா என்று எண்ணினாள். ஆனால், இதற்குள்ளாக வேப்பமரத்தடியிலே தண்ணீர் எடுக்க வந்த பெண்களின் பேச்சரவம் கேட்டு பிர்ஜூவை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனைப் பார்த்துச் சொன்னாள்-“இரு, இரு! உங்கப்பன் உன்னைக் கைமிஞ்ச வச்சுட்டாரு, யாரைப் பார்த்தாலும் கைமிஞ்சறே! இரு பார்த்துக்குறேன்!”

ஆத்ம சாட்சி

கறுத்துப்போன அலுமினிய ஏனத்தை அடுப்பில் ஏற்றி விட்டு கணபத் அடுப்பை எரிய விட்டான். பிறகு உருளைக்கிழங்கை உரிக்கலானான். உருளைக்கிழங்கு மசியலும், சுடச்சுடச்சோறும் கணபத்தைப் பொறுத்தவரையிலும் இதைவிட மேலான பதார்த்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. குஸூமி சில நேரங்களில் அவனை ‘சோற்றுப் பண்டாரம்’ என்று கேலி செய்வாள்.