மேலை நாடுகளைப் ‘பார்த்து செய்பவை’ அல்ல அவரது வரைவுகள். நாட்டின் இயற்கை வளம், குறைந்த செலவு, இடு பொருளுக்கு ஆகும் செலவை விட பெறும் பொருள் மிகுதி என்ற கனவு, ஆகியவற்றால், தனித்து நிற்பவர் அவர். இத்தகைய அணு மின் உலைகள், சூழலை மாசு படுத்தாது. இன்று உலகம் எதிர் கொள்ளும் மாபெரும் சூழற்சிதைவான பசும்வாயு விளைவு இந்த அணு உலைகளால் ஏற்படாது
