உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?
Category: புத்தக அறிமுகம்
பருக்கை – 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற புதினம்
சமீபத்தில் 2015ல் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருது பெற்ற வீரபாண்டியனின் “பருக்கை” நாவலை (புதினம்) வாசித்தேன். தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான “பருக்கை” என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டியன் முதலில் பாராட்டுக்குரியவர். சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு, தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு என எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.
ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …
உச்சைசிரவஸும் குரங்கும்
சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.
தீப்பொறியின் கனவு
பெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக்
காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்
…காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன: ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ….இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. … காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்… ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர்.
திசைகாட்டி
“கவிதையும் எண்ணங்களும்” கட்டுரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவரது காலத்தில் கவிதைகளுக்கு ஒரு சீற்றமும் பிரச்சார தொனியும் தேவையாக இருந்தன. காலத்தின் தேவையாக தானும் அப்படி எழுத நேர்ந்தமை பற்றி சொல்கிறார். நேருவின் அறைகூவல் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பயிரைத் தின்னும் பகையை வீரப்படை கொண்டு மாய்த்திடுவோம்“ எனும் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். அது அந்தக் காலத்தின் தேவை. இத்தகைய கவிதைகள் இன்று பொருத்தப்பாடு இல்லாமல் போயிருப்பவை. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
புத்தக அறிமுகம்: ’பங்களா கொட்டா’-ஆரூர் பாஸ்கரின் முதல் நாவல்
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1950- களின் நடுவில் கல்வியே தம் விடுதலைக்கான திறவுகோல் என்பதை வலுவாய் உணர்ந்து கொண்ட ஓரு தலைமுறையின் எழுச்சிதான் அன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அதே கல்வி அமைப்புச் சீரழிந்து, கல்வி வள்ளல்கள் வசூல் தந்தைகளாக மாறி, கல்வி நிலையங்கள் கொள்ளையடிக்கிற வணிகக் கூடரங்களாக மாறிவிட்ட நிலையில், கல்வியின் மேன்மையைப் பற்றி ஓரு காலத்தில் சிந்தித்துச் செயலாற்றியவர்கள் இருந்தார்கள் என்கிறது இந்த நாவல்.
புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே , தமிழகத்தின் முக்கியமான வகை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் ஆசிரியர். மாறிவரும் காலத்தை சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து, தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட தேசிய முதலாளி ஆகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட ஒரு லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈரக்கப்பட்டு, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரரான இடது சாரிப் பார்வைகொண்ட ஆரான் … இந்த மூன்று இயக்கங்களும் தான் தமிழ்நாட்டின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் …
விவசாயிகளும், நபாப்களும்
1980களின் மத்தியில் இருந்த வருவாய் நிர்வாகப் பணிக்குழுவின் மையக் கோட்பாடுகள் 1800களில் முறையாக்கப்பட்டவையே. அதேபோல, 1970களில் இருந்த கிராமங்களுக்கான நிர்வாகக் கட்டுப்பாடுகளின் அடிப்படை 1810ல் உருப் பெற்று விட்டது. கடைசியாக, நிலங்களைத் தனியார் உடமையாக ஆக்குவது பட்டாக்கள் வழியே நடத்தப்படலாம் என்று ’நவீன’காலக் கருத்தானது 1800களில்தான் நடைமுறைக்கு வந்தது. அதே சமயம், நாம் அடுத்துவருகிற பகுதிகளில் பார்க்கப் போகிறபடி, பண்டைய சமூக அரசியல் அமைப்புகளில், கோட்பாடுகளில், செயல்பாடுகளில் பெரும்பாலானவை 1800கள் வரை கூடப் பிழைத்திருந்தன. உதாரணமாக, “ஜாதி”, “நாட்டார்” நிர்வாக அமைப்பு, தர்மகர்த்தர்கள், அதிகாரம் குறித்த கோட்பாடுகள்…
தடம் பதித்த சிற்றிதழ்கள்
கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்.
அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா
இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்: ‘உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.’
மகரந்தம்
சில தினங்கள் முன்பு ஒரு சீன பல்கலையாளரைப் பார்க்க நேர்ந்தது. அவர் இந்திய மொழிகளுக்கும், சீன மொழிக்குமிடையே ஒரு பாலத்தைக் கட்ட முயல்கிறார். சில பத்தாண்டுகளாக இந்தி மொழியைக் கற்று, சீனாவில் அதைப் போதித்து வரும் இந்தப் பேராசிரியர் தற்போது சீன மொழிக்கு பல இந்திய மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு மூலம் இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு திட்டத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். அவர் அடிக்கடி தெரிவித்த ஒன்று- சீனாவில் நிறைய முயற்சிகள் அரசுடைய கட்டுப்பாட்டில் இருப்பவை. தன்னை அழித்துக் கொள்ளுதல் என்பதில் சீனர்களுக்கு நிறைய பயிற்சி உண்டு என்பது தெரிந்தது. அதே நேரம் அவர்கள் கூழையாகவும் இல்லை. நிமிர்ந்த நோக்குடன்…
யாப்பில் தோய்ந்த மொழியாக்கம்
நாஞ்சில் நாடனிடம் கம்பனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ரா. பத்மநாபன் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. மும்பையில் இருந்தபோது ரா.ப. அவர்களிடம் மூன்றரை ஆண்டுகள் நாஞ்சில் கம்பராமாயணத்தை எழுத்தெண்ணிப் பாடம் கேட்டவர். இன்றக்கும் நாஞ்சிலின் எழுத்தில் அவ்வப்போது கம்பனின் வரிகள் மின்னுகின்றன என்றால் அதற்கு ரா.ப. அவர்களே காரணம். தமிழ் நாட்டின் முக்கியமான கம்பன் மேடைகளில் நாஞ்சில் மேடை ஏறி இருப்பதற்கும் அவரே காரணம்.
மகரந்தம்
பச்சை குத்துவது என்பதை சடங்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், ஓரளவு குடும்ப/ குல அடையாளத்தைத் தொடரும் வகையாகவும் எல்லாம் இந்தியர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அன்பைத் தெரிவிக்கவும், வேடிக்கையாகவும், கலையார்வத்தால் உந்தப்பட்டும் சிலராவது இதைச் செய்து பார்ப்பதும் உண்டு. உலகெங்கும் பல இனக்குழுக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள் இதைப் பற்பல காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். குழு அடையாளமாக, குழுவுக்குள் சில பதவிகள், அல்லது திறமைகளுக்கான அடையாளங்களைச் சித்திரிக்க இவை பயன்பட்டிருக்கின்றன. இந்தக் கலையின் ஒரு தனித்தன்மை அது அருங்காட்சியங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட முடியாதது. ஆனால் அரும் காட்சியகங்கள் மனிதத் தோலில் வரையப்படும் இந்த ஓவியங்களை, வடிவுகளை வேறெப்படிக் காட்சியில் வைக்க முடியும்? அந்தக் கேள்விக்கான பதிலை …
நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்
இரண்டாவது வேட்பாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பணக்காரர் டாக்டர் பரமேஸ்வரன். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரும்போதே அங்கே ஒரு கிறித்துவப்பெண்ணை மணம் செய்து கொண்டு வருகிறார். இங்கும் அவருக்கு அவர் இனத்தில் ஒரு மனைவி உண்டு. இது அவருக்கு வாக்கு கேட்க வசதியாயிருக்கிறது. தன் இன மக்களைச் சந்திக்கப் போகும்போது இங்கு மணந்து கொண்டவளையும், அரிஜன சேரிக்குச் செல்லும்போது சிலுவை டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு வரும் கிறித்துவ மனைவியும் அழைத்துக் கொண்டு போகிறார். மூன்றாவது வேட்பாளர் அறிவரசன் இப்போதுதான் ஒரு சாதாரண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டு ”வெறும் புளிக் கறையையும் காணாத் துவையலையும்” கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். ஆக இவர்கள் …
இலவச மின்னூல் வெளியீடு- அறிவிப்பு
அணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர். இப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது
எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு
90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.
உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997
தமிழகத்தில் இன்னமுமே கணிசமான ‘அறிவு ஜீவிகள்’ மார்க்சிய மாயையில் மூழ்கியவர்கள் என்பதால் இந்த எழுத்தாளரின் கருத்துகளைப் பற்றிய ஒரு கட்டுரை ஒரு சிறு அளவு மயக்கத் தெளிவிப்பு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் இதைக் கொணர்கிறேன். மாறாக, மனநல மருத்துவ சிகிச்சையை அளித்தாலாவது ஏதாவது பயன் இருக்கும் என்று சிலர் சொல்லக் கூடும். இப்படி நகைச்சுவையைக் கருதிச் சொன்னாலும், இன்றைய மனநல மருத்துவமுமே அப்படி ஒன்றும் பயனுள்ள சிகிச்சை முறை என்று தோன்றவில்லை என்றும் சுட்டுகிறேன். வேப்பிலை அடித்து மஞ்சள் நீராட்டிப் பேயோட்டியவர்கள் காலம் போய்…
வருக்கத்தொகையும் பின்னபாகாரமும்
கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும் என்று நினைப்பது செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.
அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"
ஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.
ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல்
திருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப்படமோ மாட்டி, செப்பு போல் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்கரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக்குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு. ‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா! அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா? நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம்? ‘
கவனத்தைக் கட்டும் கயிறு
சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள், ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது.
எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்
பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.
பீமாயணம் – தீண்டாமையின் அனுபவங்கள்
ரயில் பாம்பாகிறது. அச்சுறுத்தும் கோட்டை சிங்கமாகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை வரவேற்கும் மக்களுடைய மகிழ்ச்சியானது சிரிக்கும் முகங்களாக அல்லாமல் நடனமாடும் மயிலாக இருக்கின்றன. ஒரு தலித், ஒரு கிணற்றைத் தோண்டியதற்காக கொலை செய்யப்பட்டதும், இரண்டு பசுக்கள் சாட்சியாக இருக்க அவன் பயன்படுத்திய புல்டோசர் அழுகிறது. வீடு வாசலற்ற அம்பேத்கர் பரோடாவின் தோட்டத்தில் தன் தலைவிதியை ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையயில் அவர் தோட்டமாக ஆகிவிடுகிறார்.
வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்
நாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – “கெடை காடு”
மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது.
'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி
1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.
படிப்பு அறை – 'தாத்தாவும் பேரனும்'; 'டோட்டோ-சான்'
விசித்திரமான விஷயம் என்னவென்றால், மொழி பெயர்ப்பில் எனக்குக் கிட்டிய அத்தனை மகிழ்ச்சி மூல நூலில் அப்போது கிட்டவில்லை. மூல நூல் வேறொரு உலகை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றாலும், அதுவும் நன்றாக இருந்தது என்றாலும், மொழி பெயர்ப்பும் அது விரித்த உலகும்தான் என் மனதில் ஆழப்பதிந்திருந்தன. பின்னாளில் மொழி பெயர்ப்பை மறுபடி தேடிப்படித்த போது மொழி பெயர்ப்பு என்பது எனக்குமே ஒரு பிடித்த கலையாக, நானும் பயில்கிற ஒரு விஷயமாக இருந்ததால், இந்த முறை அந்த மொழி பெயர்ப்பின் போதாமைகள் புரியத் துவங்கி இருந்தன. ஆனாலும் அப்புத்தகத்தின் வாசகர்கள் யாரென்று யோசித்து அவர்களுக்கு வாசிப்பு சௌகரியம் இருக்க வேண்டுமென்று கருதி வல்லிக்கண்ணன் அந்த மொழி பெயர்ப்பைச் செய்திருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.
மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
கன்னடத்தில் நவீன இலக்கிய முன்னெடுப்புகளின் முக்கிய பங்களிப்பாளரான லங்கேஷ் அவர்களின் எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்திருப்பது முக்கியமான முயற்ச்சியாகும். இதை மிக அழகான தரத்திலும் வடிவத்திலும் பதிப்பித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியளப்பது. இப்புத்தகத்தில், இரண்டு விதமான கவிதை சரடுகள் ஓடுகின்றன. ஒன்று லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும், இன்னொன்று திரு. நல்லதம்பி அவர்களின் புகைப்படங்கள் மூலமாகவும். கன்னட மொழியில் நல்ல பரிச்சயம் உடையவரும், கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவருமான திரு.நல்லதம்பி அவர்கள், தமிழுக்கு இது போல மேலும் பல முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்
“பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
நினைவுப் பிழைதானோ!
ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் தங்கள் கோணங்களிலிருந்து கூறும் உத்தியை நிறைய கதைகளில் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் கூட அவ்வுத்தி வெகு காலமாக கையாளப் பட்டிருக்கிறது (ரசோமான் தொடங்கி). பார்ன்ஸ் இக்கதையில் கையாளும் உத்தி அதனின்று சற்று வேறுபட்டது. ஒருவன் தன் வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது, அதைக் கூறும் விதத்தால் அப்பதிவு எவ்வளக்கெவ்வளவு உண்மை, உண்மை இல்லையெனின் அது சொல்பவரின் ஞாபகக் கோளாறா அல்லது அவன் வேண்டுமென்றே திரிக்கும் கதைகளா என்று படிப்பவரை சிந்திக்க வைக்கும் உத்தியைக் கையாண்டிருக்கிறார் ஜூலியன் பார்ன்ஸ்.
சொல் மறைப்பதென்ன
உதாரணத்திற்கு கேரட். அதைப் பார்த்தவுடன் நம்மில் பலரைப் போல் அனிச்சையாக, அவரால் கேரட் என அடையாளம் கண்டு சொல்ல இயலவில்லை. மாறாக அதை ஒரு புதிய பொருளாக பார்க்கிறார். நீளமான, சற்று ஒல்லியான ஒரு பொருள், அதன் ஒரு முனையில் இழைக்கொத்து. என்னவாக இருக்க முடியும்? பெயிண்ட் பிரஷ் என தவறாக ஊகிக்கிறார்.
வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை
மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல்.
விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்
அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன.
ட்ரல ட்ரல ட்ரல லலல
சிறுவயதில் கூச்சமாக இருந்தவனின் மனதில் இருந்த காமுக எண்ணங்களின் இரட்டைப் பிம்பம்தான் இந்த இரு சக்திகளா? தன்னையே இரு பாகமாகப் பிளந்து உள்நோக்கும் வகையில் இந்த இரு விசைகளா? கடவுளை விரும்பாதவன் ஆன்மீகத்துக்கு மாறுகையில் வந்த நம்பிக்கைச் சிதைவின் விளைவுகளா? காரண அறிவும், பொருள்விளங்காப் பேருணர்வும் மோதிக்கொள்ளும் சிதறலா? வறுமைய எதிர்கொள்ள முடியாத பேதைமையில் ஏற்பட்ட சறுக்கலா?
“விக்டோரியாவும் அப்துல்லும்” – ஷ்ரபணி பாசு
அவருடைய அதிகாரிகள் பலரையும் இந்த நட்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதற்கான காரணங்களை ஆராய வைத்தது. பலரும் ராணி தெளிவாய் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார் எனத் தீர்மானித்தாலும் சிலர் வேறு காரணங்களை நினைத்தனர்.
ராணியின் ஐரோப்பியப் பயணங்களின் போது அவர் பின்னே தனி வண்டியில் பவனி வரும் இந்தியரை ராணியின் அரசு கைப்பற்றிய ஏதோவொரு இந்திய ராச்சியத்தின் இளவரசர் என்றும், தன் அரசின் வலிமையைக் காட்டுவதற்காக ராணி அவரை வலம் அழைத்துவருவதாகவும் பலரும் நினத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளிடையே கருத்து அரசியின் உளநிலை மனநிலை பற்றிய ஆராய்ச்சியாக இருந்தது. பிரதம மந்திரி ஸால்ஸ்பரி ஒரு கடிததில் இப்படிச் சொன்னார்: “மகாராணிக்கு தொடர்ந்த பரபரப்பு பிடிக்கும், இப்போது முன்ஷிதான் அத்தகைய பரபரப்பைக் கொடுக்க முடியும்.”
தமிழ்க்கவிதைகளுக்கான ஆங்கிலப் பாலம்
கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பாகிஸ்தான் போகும் ரயில் – புத்தக அறிமுகம்
இது போன்று இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த துயர சம்பவங்களை குஷ்வந்த் சிங் எழுதி இருப்பார். அழுகை வரும். புதிதாக திருமணமான பெண். கணவனுடன் தனியாக இருக்கும் ஆசைகளை அசைபோட்டபடி பேருந்தில் செல்கிறாள். அவள் ஆசையாய் அவள் கணவன் கட்டிலில் உடைப்பதற்காக கண்ணாடி வளையல்களை கழட்டாமல் இருக்கிறாள். ஓரிடத்தில், இஸ்லாம் மதத்தவர் பேருந்தை நிறுத்தி ஆடைகளை அவிழ்த்து முசல்மான் என்பதை நிரூபிக்க சொல்கிறார்கள். இவன் முசல்மான் இல்லை என அறிந்ததும் …
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது: நூல் அறிமுகம்
இந்தநூற்றாண்டின் முற்பகுதியில் நகர நாகரிகத்தின் நிழல்படாத- நதியை ஒட்டிய – சிதம்பரம் அருகே சிறிய கிராமம் ஒன்றில்பள்ளி ஆசிரியராக சாமிநாதசர்மா ‘ஐயா’ என்ற பாத்திரத்தில் ஜீவிக்கும் நாவல் ‘ஒருநதி ஓடிக்கொண்டிருக்கிறது’. ஒரு period film பார்ப்பதுபோல்இருக்கிறது இந்த 264 பக்கநாவல். இதை எழுதிய திரு.வே.சபாநாயகம் தான் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல – தன் ஆசிரியர் சாமிநாத அய்யரை மையப்படுத்தி இதை எழுதி இதை அவருக்கே சமர்ப்பணம் செய்திருப்பது இதன் விசேஷம்.
தாவர நூல்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம். அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
கவிஞர்களின் நாவல்கள்
யூமா வாசுகியின் “மஞ்சள் வெயில்” படித்து முடித்த சில நாட்கள் அந்த நாவலில் கையாளப்பட்டிருந்த மொழி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைக் காதல் தான் கதை. ஆனால் அது சொல்லப்பட்டிருந்த விதம் நாவலைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் (இரவு இரண்டு மணி வரை) படிக்கச் செய்தது அதன் மொழியே என்று இப்போது தோன்றுகிறது.
வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை
ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன் (Chabon) ஒரு இடத்தில் “cabinet of mysteries that was the life of an ordinary man” என்று சொல்வது போல்…
கேர்ரியும் அடாப்பிடியர்களின் நெருக்குதலும்
வீட்டிலும், வெளியிலும் கைவிடப்பட்ட பதின்ம வயதினருக்கு இருக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு வன்முறை என்பதை முதல் நாவலில் கச்சிதமாகக் காட்டிய கிங் தன் அடுத்த பல நாவல்களிலும் bullying பற்றி எழுதியிருக்கிறார். அவருடையது பல்ப்-க்கும் ஆழமான இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட பாலமாக அமைகிறது. அவர் எடுத்துக்கொள்ளும் களங்கள் அவர் வசிக்கும் Maine மாகாணத்தில் நடப்பது. ஸ்டீஃபன் கிங் படைப்புகளின் பாத்திரங்கள் American Joe வகையைச் சேர்ந்தவர்கள். தினசரி கவலைகள், சந்தோஷங்கள், வெறுப்புகள், ஆசாபாசங்கள் என்ற சாதாரணர்கள். இவர்களின் அடியாழத்தில் இருக்கும் வன்முறையோடு அமானுட சக்தி கலந்தால் சமன்பாடு குலைந்து அந்த சக்தி இழுக்கும் இழுப்புக்கு ஆடும்.
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்
உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்லி.
ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்
“நாய்க்கு முழுத்தேங்காய் நன்றாய் ருசிக்குமோ?” என்பதில் நாம் சற்று பொருளேற்றம் செய்தால், நமக்கு ருசித்திருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு, உடைக்கும் வழி அறியாது உருட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்னும் முழுத்தேங்காயின் உள்ளிருக்கும் பருப்பை பார்ப்பதற்குத்தான் பல பிறப்போ? என்னும் கேள்வி செறிந்த ஆன்மத்தின் பாதாளத்தில் நாம் விழுந்து விட்டிருப்பதை உணர்வோம்.
இவரின் “வேதாந்தக் கப்பல்” கட்டுமானம் “காயக் கப்பல்” வடிவிலேயே இருக்கிறது. “பஞ்சபூதப் பலகை கப்பலாகச் சேர்த்து” என்று துவங்குவது காயக் கப்பல் சித்தர் பாட்டு. ஆவுடையக்காளோ…
அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை
ஆனால் எல்லாவற்றையும் கடந்து, எங்கோ எப்பொழுதோ ஒரு புள்ளியில் மனிதர்கள் வெறும் புள்ளிவிவரங்களாகவும், மரணங்கள் வெற்று எண்ணிக்கைகளாகவும் கணக்குகளாகவும் மற்றுமொரு சம்பவமாகவும் மாறி விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. அவனும் சித்த தெளிவுடன் பிழைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இருக்கிறதே!
தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ
உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.
அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி
அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
விழியனின் சிறுவர் உலகம்
சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
