உலகம் கொண்டாடும் புத்தாண்டு

புத்தாண்டை அமெரிக்காவில் இருந்து அம்ரிட்சர் தங்கக்கோவில் வரை எப்படி வரவேற்றார்கள் என்னும் புகைப்படத் தொகுப்பு:

சர்க்கரை – தித்திப்பும் கசப்பும்

கி.பி. 500-ஆவது ஆண்டுவாக்கில் இந்தியாவில் முதன்முதலாக சர்க்கரை தூள் வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. சர்க்கரைத் தயாரிப்பு ஒரு தொழில் ரகசியமாகவே பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு – குரு-சிஷ்யப் பரம்பரையில் தொடர்ந்து வந்தது. அந்தத் தொழில் ரகசியம் எப்படியோ கசிந்து அடுத்த 100 ஆண்டுகளில் பாரசீக நாட்டிற்குப் (இன்றைய ஈரான்) பரவிவிட்டது. கி.பி. 600-ஆம் ஆண்டில் அந்நாட்டில் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பலவிதமான இனிப்புப் பண்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அரேபியப் படைகள் பாரசீக நாட்டைப் போரில் தோற்கடித்துக் கைப்பற்றியபின், சர்க்கரைத் தயாரிப்பு அரபு நாடுகளுக்கும் பரவியது.

மகரந்தம்

நம்முடைய தலைமைச் செயலகம் எவ்வாறு இயங்கும் என்பதை கணினி மூலம் பார்க்கலாம். என்ன என்ன செயல்களை நடத்தும்போது எவ்வாறு இயங்கும் என்பதை கணித்திரை வழியாக உருவகப்படுத்தி பார்க்கலாம். ஆனால், சிரியாவில் உயிர்க்கொல்லிகுண்டுகளை அரசே போடும்போது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் மூளையும்; ”அது அவர்கள் உள்ளூர் பிரச்சினை… அதில் தலையிட நாம் மூன்றாம் மனிதர்கள் யார்?” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது? அதை படம் பிடித்து அறிவதுஎப்படி என்னும் ஆராய்ச்சி கடந்த பதினைந்தாண்டுகளில் எங்கே முன்னேறி இருக்கிறது?

நேரம் சரியாக… – 6

அணு கடிகாரங்கள், துல்லியத்தை குறியாகக் கொண்டு வேகமாக வளரும் ஒரு துறையாக முன் பாகங்களைப் படித்த உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். மர்ம சினிமா ஒன்றைப் பார்த்துவிட்டு, சினிமாவே மர்மத்தை மையமாகக் கொண்டது என்று முடிவெடுப்பதைப் போன்ற விஷயம் இது. அப்படியானால், நிஸ்டில் வேலை செய்யும் பல விஞ்ஞானிகள் ஏன் பெளதிக நோபல் பரிசு வென்றுள்ளார்கள்? வெறும் துல்லியத்திற்காகவா?

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட்டை குடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதெற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.

கடல் தின்ற காலம்…

நேரம் ஆக ஆக, கடல் செய்த காரியத்தின் வீரியம் தெரியத் தெரிய ஒரு பெருந்துக்கத்தின் கனம் செய்திகளின் வழியே உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்த பொழுது…

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்

உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்லி.

நாமகிரித் தாயாரின் அருள் : ராமானுஜன் – 126

கணித உலகில் ராமானுஜன் (1887-1920) அவர்களின் தாக்கம் (legacy) இன்று வரை தொடர்வதற்கான காரணிகள் என்ன? ராமானுஜத்தால் கவரப்பட்டு, அவரது கணித ஆராய்ச்சிகளை முன்னெடுத்த இன்றைய கணித வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள்? ராமானுஜனைக் கொண்டாடும் நாம்,ஒரு சிறு துளியாவது அவரது கணிதம் குறித்து நமக்கு அறிந்து கொள்ள முயலுகிறோமா?

சாண்பிள்ளை

சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்படி எல்லாம் இல்லை எனப் பட்டது.

பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது.

வெளிச்சமும் வெயிலும்

சில சமயங்களில் அந்தப் பக்கமாக வரும் மேகங்களிலும் அந்த நிறம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொள்ளும். மேக ஓரங்களில் சிவந்து, சிவந்து ஏதோ கடுமையான வர்ணத்தில் ஜொலிக்கும். எரியும் டார்ச் விளக்கை மூடிப் பிடித்துக் கொள்ளும் கை விரல்களின் வர்ணத்தில். கொஞ்சம் எட்டி எப்படியாவது பறந்து அதன் அருகில் போய்விட்டால் நானும் அந்த வர்ணத்திற்கு மாறிவிடுவேன்.

ஹயாவோ மியாசகி – இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்

எல்லாக் குழந்தைகளைப் போலவே பால்யத்தில் நானும் சிறுவர் படக்கதைகள் வழியாகத்தான் கதைகளின் உலகிற்குள் போனேன். அந்தப் படக்கதைகள் தந்த பரவசம் நினைவின் அடியாழத்தில் தேங்கிப் போய் விட்டிருக்கிறது. மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து மியாசகி வழியாகத்தான் அப்பரவசங்கள் மெல்ல மேலெழுந்து வந்தன. மியாசகியின் ஒவ்வொரு திரைப்படமும் என் பால்யத்தை மீட்டுத் தருகிறது. மிகப்பெரும் கனவு வெளியை, கிளைகளாய் பெருகும் கதைகளை, இயற்கையின் மீதான நேசத்தை இத்திரைப்படங்கள் என்னுள் விதைக்கின்றன.

வாசகர் மறுவினை

பைரப்பா பற்றிய குறிப்பிடத் தகுந்த நாவல் அறிமுகம். வம்ச விருட்சாவோடு இவருடைய ‘பருவம்’ நாவலும் பேசப்பட வேண்டியது. பைரப்பாவின் அரசியல் நிலைபாடு குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும் அவருடைய எழுத்து நிராகரிக்க முடியாதது.

காகசஸ் மலைக் கைதி-1

காகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை

அமெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க்கும் லாஸ் ஏஞ்செலேசும்தான். அது போன்ற நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும், மிகவும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் விமானங்களும் உலக பிரசித்தமானவை. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான பல விஷயங்கள் அமெரிக்காவில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தகட்டுரையில் நாம் சந்திக்கும் ஆமிஷ் குடியிருப்புகளும் அதில் வாழும் மக்களும்…