வாசகர் மறுவினை

உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.

இந்தியாவின் வண்ணம்

புகைப்பட வித்தகர் டோனி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை படம் பிடித்திருக்கிறார். அதில் கிடைத்த அனுபவங்களையும் படங்களையும் இங்கே பதிவு செய்கிறார்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை

என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.

சங்கத்தில் பாடாத கவிதை..

“வாரம் முழுசும் நான் மனைவி மக்களோட பேசறதே இல்லை. என் குழந்தை முழிச்சுக்கிட்டு இருக்கறதையே நான் ஞாயிறு தான் பாக்கறேன். இந்தப் பாட்டு என்னைய வாரம் பூரா அவங்களோட வச்சிருக்கிற மாதிரி இருக்கு. எப்படியும் ரயில்ல போற வரப்ப ஒரு தடவையாவது இதை கேட்டுட்டு போனா வீட்டுல கோபம் சண்டை அண்டாது தெரியுமோ” என்றார். அந்த வயதுக்கு எனக்கு எந்தளவு புரிந்ததோ அதற்குரிய அகலத்தில் தலையாட்டினேன்…பல நாட்கள் அவரின் வாக்மேனில் தும்பி வா கேட்டிருக்கிறேன். நல்ல இசை என்பது இறை நோக்கியே நம்மை செலுத்தும். அதாவது நம்முள் இருக்கும் இறைமையை நீர் கண்ட மண்ணிலிருந்து வரும் முளை போல உயிர்க்க வைக்கும். அதையே …

பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் சில தொழில்நுட்பப் பயன்பாடு

கொய்மலர்களின் தலைநகரான ஹாலந்தில், கொய்மலர் வளர்ப்பு கொஞ்சம் சுணக்கம் கண்டிருந்தாலும் (வளர்ப்பு மட்டும்தான்; வணிகமல்ல), கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா நாடுகளில் கொய்மலர் வளர்ப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. ரஷ்யாவின் ரூபிள் சரிவுக்குப் பின் ரஷ்ய ஏற்றுமதி 2014-லிலிருந்து குறைந்தாலும், இந்த ஆண்டு (2017) கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், ரஷ்யாவிற்கு கொய்மலர் ஏற்றுமதி, என்ணிக்கை உயர்ந்த அளவு, வணிக மதிப்பு அதிகம் உயரவில்லை; ரஷ்யாவின் கொய்மலர் இறக்குமதி எப்போது 2013-ற்கு முன்பிருந்த நிலைமைக்கு வரும் என்றுதான் எல்லா கென்ய ஏற்றுமதியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய சரிவிற்குப்பின், ஆஸ்திரேலிய ஏற்றுமதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் புதிது புதிதாய் ஏதேனும் தொழில்நுட்பங்களும் அல்லது பழைய தொழில்நுட்பங்களில் ஏதேனும் புதிய மேம்பாடுகளும் வந்திருக்கின்றன. பரப்பளவுகள் அதிகரிக்கும் பண்ணைகளில், மேம்பட்ட கண்காணிப்பிற்கும், மேலாண்மைக்கும் இத்தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகவும் ஆகிவிடுகின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்…

வாசிப்பனுபவம் – ஆரோக்ய நிகேதனம்

மஞ்சரியை திருமணம் செய்யும் கனவிலிருந்த ஜீவன் உடைந்துபோகிறார். அவர் கவனம் தந்தையிடம் பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் திரும்புகிறது. அவருக்கு மஞ்சரியுடன் மணம் குறித்திருந்த நாளில், ஆத்தர் அவருக்கு மனைவியாகிறாள். ஆத்தருக்கு, மஞ்சரியைப் பற்றியும் ஜீவனின் காதலைப் பற்றியும் தெரியும்; அதனால் ஜீவனிடமிருந்து தனக்கு என்றைக்கும் தூய்மையான அன்பு கிடைக்கப்போவதில்லை என்று அவளாகவே முடிவுசெய்து கொள்கிறாள்.

உடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்

நான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல்லாம்- பசித்தபோது அல்ல-  உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர்.  பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்

வாசகர் மறுவினை

பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.

பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பகுதி 3

பொருளியல் மாற்றங்களால் நடக்கும் இடப்பெயர்வும், சமூக அடுக்கு மாற்றங்களும் நவீன வரலாற்று ஆய்வுக்கு அத்தியாவசியமான ஒன்று. அன்றாட உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைக்காக இடப்பெயர்வு நடக்கும்போது மக்கள் திரள் அடிமை வாழ்வுக்கும் தயாராக இருக்கிற அவலம் என்பதை மனித வரலாற்றின் கதையாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட புது பொருளாதார மாற்றங்கள் சமூக அடுக்குகளைக் கலைத்துப்போடும். லே மிராப்ளே நாவலில் பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் எப்படி மக்கள் எலிகளைப் போல வாழ்ந்துவந்ததனர் என்பதைக் காட்டுகிறது.

வேதனையின் புகைப்படங்கள்

இன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் hueல் donald mccullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.

46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்

தீபக் சௌஹான் மும்பையைச் சேர்ந்தவர். இந்தியா முழுக்க தன் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு 46,000 கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார். நீல மலை நிலமான மிஜோரம் முதல் விசாகப்பட்டின வயல் வரை எல்லாமும் படம் பிடித்திருக்கிறார். கீழே கைவினைக் குடை தாங்கிய ஆடு மேய்ப்பவரை ஓரிஸாவின் பிரம்பூர் பகுதியில் “46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்”

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும். ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன் கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும் கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடர்ந்தது.

ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்

மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.

அம்மா…

கிளம்புவதற்காக சற்று நகர்ந்தபின் அம்மாவை திரும்பிப் பார்த்தேன். கூடாது என்று தடுத்த உறவினர்களையும் வெட்டியானின் சைகைகளையும் மீறி மீண்டும் திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்க்கக் கூடாதா? திரும்பிப் பார்த்தல் அன்றி இங்கு வேறென்ன இருக்கிறது? அடுத்த நொடியின் மீதேறி நிற்க, அதனடியில் இந்த நொடியும், இதுவரையிலான நொடிகளும் தானே ஆதாரம்? திரும்பிப் பார்க்கக்கூடாதாம்…திரும்பிப் பார்த்தேன்…
திரும்பிப் பார்த்தலே காலத்தின் வினை என்பதால் விரும்பி மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். கர்மவெளியில் காற்றுவழியில் அம்மாவின் அடுத்த பயணம் துவங்கி விட்டது என்று அறிவிப்பது போல் புகை மேலெழும்பி பரவத்துவங்கியிருந்தது.

காற்றில் துளிர்க்கும் யாழ்

கொள்ளிடம் போலவே தன்னியல்பில் பாயும் காட்டாறுதான்போலும் வாழ்வும். உயிர்ப்பு வற்றும் பொழுதுகளிலும் சன்னதம்கொண்டு எழக்கூடுமோ நினைவின் நதியிலிருந்து கடந்தகாலம்? பால்யத்தில் நம் நினைவில் தங்கும் நிலமே நம் அகத்தின் நித்தியவாசமாய் என்றென்றைக்கும் தங்கிவிடுமோ? சட்டென்று கவனம் இடறி கனக்கும் வலியோடு எழும் கடந்தகாலத்தின் வலியை, அழகையே நான் எப்போதும் அ. முத்துலிங்கம் அவர்களது எழுத்தில் அறிகிறேன். யாழை கதைக்களமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள், பிடுங்கி வீசப்பட்ட வேரின் மணம் வீசுவதே என்றென்றும் நானடையும் மனச்சித்திரம்.

பொருந்துதல்

அது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது?

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

இதயமா? நுரையீரலா?

இதயத்தின் மேல் சொல்கிறேன் என்று சத்தியம் செய்வதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது. இந்திய பண்பாட்டில் இதயத்திற்கு உள்ள அளவிற்கு நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச தசி போன்ற வேதாந்த நூல்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான பிராணன் என்று சொல்லப்படும் வாயுவையே தலைசிறந்ததாக சொல்கிறது. புராணங்களோ வாயுவை பகவானாகவே சித்தரிக்கிறது. அனுமநும் பீமனும் வாயு புத்திரர்கள் என்று தெரியாதவர் ஒரு சிலரே. யோக முறையில், பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுக்கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது. யோக நூல்களில், பிராணனை ஐந்தாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வேலை தரப்படுகிறது.

சர்வாதிகாரம் வேரூன்றும்போது

ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…

க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்  (பகுதி – 2)

அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது.

க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்

ஹவானா வியெஹாவின் பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து கூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ்(ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம். கூப்ர்களுக்குப் பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.

வாசகர் மறுவினை

வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …

ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ

சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…

காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்

காவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன். செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன்…

ஷோபாசக்தியுடன் ஒரு மாலை

வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.

விழுப்பம் தரும் கொழுப்பு

கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.

ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்

ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர் உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்-மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்-கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்!

ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து

தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.

ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்

வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு

காவேரியும் இல்லத்தரசியும்

என் தேசத்தில் எனது பக்கத்து மாநிலத்தில் நான் தைரியமாக நடமாட முடியவில்லை என்பது எத்தனை துக்ககரமான விஷயம்! என் தாய்மொழியை நான் இங்கு பேசுவதற்கு யோசிக்க வேண்டுமா? எனது பேரன் பேத்திகளுக்கு காவிரி என்பது வெறும் வரைபடத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டுமா? தென்பண்ணை, பாலாறு போல இந்த ஜீவநதியும் என் மாநிலத்தில் காணாமல் போய்விடுமோ?

உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா

சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்.

கென்யா – குறுங்குறிப்புகள்

ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்). … பழமைவாதம்தான் – ஒரு சில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.

பிளவுப் பள்ளத்தாக்கு

மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.

வனங்களில் ஒரு தேடல் …

நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறு பாறையில் ஒரு சிறிய பறவை ஒன்றைப் பார்த்தேன். மீன் கொத்திப் பறவை என்று ஞாபகம். அதை காரில் உட்கார்ந்து கொண்டே ஃபோகஸ் செய்ய முயற்சித்தேன். அது அசைந்து கொண்டே இருந்ததால் ஃபோகஸ் பண்ண முடியவில்லை. வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி மிகவும் மெதுவாக என்னுடைய ட்ரைபாடை செட் பண்ணினேன். என்னுடைய நேரம், அது என்னுடைய கார் இருந்த இடத்தில் இருந்து முன்னே சென்று கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அது கொஞ்ச நேரம் உட்கார்ந்தது போல் இருந்தது. மறுபடியும் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தேன். அப்போது லேசாக உஸ் உஸ் என்று ஒரு சப்தம் கேட்டது. முதலில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. நான் தொழிலே கண்ணாயிரம் என்றிருக்க மறுபடியும் உஸ் உஸ் என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டது . பாம்பு ஏதேனும் அருகில் வந்து விட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்து போய் திரும்பினேன்.

டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ

ஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான காஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள். கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள். இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான்.

கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்

அப்போது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்கிற பத்திரிக்கை வந்தது. ஸூப்பர் சைஸ் வாரப்பத்திரிக்கை. கிரிக்கெட் பத்திகளுக்காக லைப்ரரிகளுக்குப்போய் அதைத் தேடிப் படிப்பேன். கிரிக்கெட் சீசனில், ஸ்போர்ட்ஸ்வர்ல்ட் (Sportsworld), ஸ்போர்ட்ஸ்டார் ஆகிய வார இதழ்களை வாங்கிப் படிப்பது வழக்கம். இதுவரை பேரை மட்டுமே கேட்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான, பட்டோடி, வாடேகர், சோல்கர், விஸ்வநாத், கவாஸ்கர், துராணி, இஞ்ஜினீயர், சந்திரசேகர் ஆகியோரின் ஆக்‌ஷன் படங்களை பார்த்ததும் ஏதோ தேவலோகத்து மனிதர்களை தரிசித்த பரவசம் மனசில் பாய்ந்ததை மறக்கமுடியுமா? ‘பாடப் புஸ்தகத்தப் படிக்காம, கண்ட கண்ட புஸ்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கிறான் பாருங்கோ!` -அப்பாவிடம் அம்மாவின் கோழிச்சொல்லல் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவ்வப்போது பக்கவாத்தியமாய் அமைந்தது.

சாப்பாட்டுக் கடை

திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் புதிய கடைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று …

வாசகர் தேவை

தமிழ் தட்டச்சு மெசினின் முழுப்பயனையும் ஒரு காலத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். பதின்ம வயதிலேயே நான் கவிதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். என் கையெழுத்து மோசமாக இருக்கும். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் யாரிடமாவது கெஞ்சி தட்டச்சு செய்யவேண்டும். அகில இலங்கை நாடகப் போட்டி ஒருமுறை நடந்தது. அதற்கு 100 பக்கத்தில் கையினால் ஒரு நாடகம் எழுதினேன். அதை ஒரு நண்பர் தட்டச்சு செய்து தந்தார்.

கணினியில் தமிழ் எழுதலாம் என்று வந்தபோது அதைவிட மகிழ்ச்சி அளித்த விசயம் எனக்கு அந்தக் காலத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அமெரிக்காவில் தமிழில் எழுதும் செயலியை ஒருவர் உருவாக்கிவிட்டார் என அறிந்து அவர் வீடு தேடிப்போனேன். சூரிய ஒளிபுகமுடியாத நீண்ட வீடு. இருட்டு தொடங்கும் இடத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு செயலியை இலவசமாகத் தந்தார். நான் உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி 100 டொலர் தந்து அதை வாங்கினேன். அது என் வாழ்க்கையை மாற்றியது. கம்புயூட்டரில் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். நானே ஆசிரியன்; நானே மாணவன். செயலியில் எல்லா வசதிகளும் இருந்தன. சொற்களைத் தேடலாம். மாற்றலாம். எண்ணலாம். நகல் செய்யலாம். வெட்டி ஒட்டலாம். மனைவி பொறாமைப்படும் அளவுக்கு அதனுடனேயே முழுநேரத்தையும் கழித்தேன்.

பாலை நிலத்து நினைவலைகள்

அண்மையில் “உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இனி அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களை அனுகினால் அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் விரைந்து வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்த செய்தியொன்றினைப் படித்தேன். அந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின் சந்தேகமில்லாமல் சுஷ்மாஜி ஒரு தேவதையேதான். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனைவிடவும் ஒரு இனிய சேதி இருக்க முடியாது என்பேன்.

கலாம் விளைவு: ‘நான் ப்ராஜெக்ட் செய்ய போறேன்’

பிரிட்டிஷ் கல்வி இந்தியாவில் இரண்டு உத்தேசங்களைக் கொண்டிருந்தது: ஒன்று: ஐரோப்பியா மானுட பண்பாட்டுக்கு வழங்கும் அருட்கொடைகளை குறித்து இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு: இந்தியர்களிலிருந்து நல்ல குமாஸ்தாத்தனமான கூலிகளை உருவாக்குவது. இதில் இந்தியர்கள் தங்கள் அறிவை புத்தாக்கத்துடன் செலவிடக் கூடிய ஒரே துறையாக இருந்தது சட்டத்துறைதான். அன்றைய இந்தியாவின் அனைத்து அறிவாளிகளும் சொல்லி வைத்தது போல பாரிஸ்டர் படிப்பும் சட்டபடிப்பும் படிக்க போனது அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்.

உலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை

அன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அழியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).

சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?

முத்தவாக்கள் ( Mutaween – Religious Police) தான் பெரும்பாலான நேரங்களில், பொது இடங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மதச் சட்டங்கள் என்ற பெயரில் “பாதுகாவலர் சட்டத்தை” மனதில் கொண்டு பல இன்னல்களையும் தண்டனைகளையும் வழங்கக் காரணமானவர்கள். இவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட , மதச் சட்ட முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா எனக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் சில வருடங்கள் முன்வரை அடிக்கும் உரிமையையும் கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பார்த்தவுடனே எளிதாக அடையாளம் காண இயலும். பெரிய அண்ணனின் சட்டையயும், கடைசித்தம்பியின் பேண்டையும் மாட்டிக்கொண்டால் ஒருவர் எப்படி இருப்பார்? அப்படித்தான் அவர்களின் ஆடையும், ட்ரிம் செய்யப்படாத தாடியும் இருக்கும்.

அழிக்க வந்த போலி காருண்யம்

தென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …

கலைமகள் நடனம் காண…

அஜி: ஹெர்சாக் ஆவணப் படத்தில் ஒரு சித்திரம் வருகிறது. ஹெர்சாக் முப்பது ஆயிரம் வருடம் கொண்ட குகை ஓவியங்களை குறித்து படம் செய்திருக்கிறார். அதில் ஒரு ஓவியம் குதிரை முகம் கொண்ட நிர்வாணப் பெண். இன்று இவற்றை வைத்துக் கொண்டு மனிதத் தன்னிலை குறித்து ஆராய ஒருவர் நுழைந்தால், இன்று அவருக்கு உலகில் மிச்சமிருக்கும் ஒரே ஒரு புகலிடம் இந்து மதம் மட்டுமே. அந்த எல்லையில் சக்கரைப் பொங்கல் இது எதையும் மாற்றி வைக்குமே தவிர அழிய விடாது. மாறாக பகுத்தறிவும் , இறைவார்த்தையும் ஊடுருவிய இடம் எல்லாம் அழிவு மட்டுமே மிஞ்சுகிறது. நமது வேர்களை இழந்து விட்டால், மீண்டும் நாம் மந்தைகள் ஆவதன்றி வேறு வழி இல்லை.

தான்ஸானியாவின் தேர்தல்

அந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது…

உறவுக்கு ஒரு பாலம்

ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…

ஈராக் – ஓர் அறிமுகம்

ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுறுக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும். ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்…
நம்மூரில் தனியார்ப் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர்.

மனம் ஒரு குரங்கல்ல…

இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…

தமிழர்  பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது

பெரும்பாலான கணினி செயலிகள் (programs) ஆங்கிலம் பேசும் சந்தையில் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதால் மற்ற மொழிகளின் (தமிழ் உட்பட) கலை நயங்களை உட்கொள்ளாமல் செயல்படுகின்றன. இதனால் நாம் இந்த செயலிகளை ஒரு மாற்றான்-தாய் மனப்பாங்குடன் பயன்படுத்துகிறோம். உதரணத்துக்கு Facebook (முகநூல்) தளத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் வருமாறு பயன்படுத்துங்களேன். இவை ஒரு செயற்கையான ஒரு மொழிபெயர்ப்பின் இடைமுகத்தையும் எதிர்நோக்கையும் அளிக்கின்றன.