எஸ்.பி.பி. என்னும் H2O

இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் “எஸ்.பி.பி. என்னும் H2O”

ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்

மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.

கந்த கானாமுதம்

ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார்.

கடவுளுடன் பன்னிரு நடனங்கள்

இது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது.

இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்

நம் இந்திய மரபிசையின் தாளங்கள் பல நுட்பங்களை உள்ளடக்கியது. இந்திய இசையை முதன் முதலில் கேட்க நேரிடும் எந்த ரசிகரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தன்மையுடயவை இவை. கடினமான கணித நுட்பங்களின் ஆச்சரியங்களை உள்ளடக்கிய தாளக்கணக்குகளை நாம் வெகு எளிதாகக் கடந்து வந்திருக்கிறோம். ஐந்து வெவ்வேறு தாள நடைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூர்ந்து கவனிக்கும் எவரையும் அது நம் மரபிசை சேகரித்து வைத்திருக்கும் பல நூற்றாண்டு கால இசை அறிவைக் குறித்ததொரு மன எழுச்சிக்கு ஆட்படுத்தி விடும்.

எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா

அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்