சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.
Author: எவென் ஆஸ்நோஸ்
சர்வாதிகாரம் வேரூன்றும்போது
ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…